Skip to main content

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை நீக்கும் 'பிராண முத்திரை'

ஆரோக்கியத்தில் ஒரு துளி...

பிராண சக்தியைப் பெருக்கி, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை நீக்கும் 'பிராண முத்திரை' (Prana Mudra)...

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

நமது சனாதன தர்மத்தில் உடல் என்பது வெறும் சதைப்பிண்டம் அல்ல; அது 'ஜீவாத்மா' தங்கியிருக்கும் ஒரு கோவில்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" என்பார் திருமூலர்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அதைப் போற்றிப் பாதுகாத்து, அதன் மூலம் ஆத்ம ஞானத்தை அடைவதே உயர்ந்த நோக்கம் என்று திருமூலர் வலியுறுத்துகிறார். உடலைப் பராமிப்பது என்பது வெறும் உண்பது மட்டுமல்ல, அதை யோக நிலை மூலம் அழியாமல் காப்பதாகும். 

இன்றைய வேகமான இயந்திர உலகில், அதிகப்படியான வேலைப்பளு மற்றும் அலைபாயும் மனதினால் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய சவால் 'தூக்கமின்மை' (Insomnia) மற்றும் 'மன அழுத்தம்' (Stress).

இரவில் கண்கள் மூடினாலும், மனம் ஓயாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பது உடலின் பிராண சக்தியை (Life Force) உறிஞ்சி விடுகிறது. இதற்கு நம் முன்னோர்களும் சித்தர்கள் அருளிய மிக எளிய, ஆனால் மகா சக்தி வாய்ந்த தீர்வுதான் 'பிராண முத்திரை'.

செய்முறை (சரியான முறை):

  1. தரை விரிப்பில் அல்லது நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும்.
  2. உங்கள் பெருவிரல் (Thumb), மோதிர விரல் (Ring finger), மற்றும் சுண்டு விரலின் (Little finger) நுனிகளை ஒன்றாக இணைக்கவும்.
  3. மற்ற இரு விரல்களும் (ஆள்காட்டி மற்றும் நடுவிரல்) நேராக இருக்கட்டும்.
  4. கண்களை மூடி, மூச்சின் கதியில் கவனம் செலுத்தி 15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

ஆன்மீக மற்றும் ஆரோக்கிய பலன்கள்:

பிராண சக்தி அதிகரிப்பு: இந்த முத்திரை உடலில் தேங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தூண்டி, சோம்பலை நீக்குகிறது.

மன அமைதி: அலைபாயும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிறது.

ஆழ்ந்த உறக்கம்: தூங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் இதைச் செய்து வர, மூளை அமைதியடைந்து நரம்புகள் தளர்வடையும். இதனால் இயற்கை முறையில் ஆழ்ந்த உறக்கம் கைகூடும்.

உயிர்சக்தி அதிகரிப்பு: உடலின் செயலற்ற ஆற்றலைச் செயல்படுத்தி, சோம்பலை நீக்கி உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

இதய ஆரோக்கியம்: ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய அடைப்புகளை நீக்கி, இதய தசைக்கு பலம் சேர்க்கிறது. 

கண் ஆரோக்கியம்: கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும், கண் சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது.

பசி மற்றும் தாகம் கட்டுப்பாடு: உண்ணாவிரதம் இருக்கும்போது ஏற்படும் பசி மற்றும் தாக உணர்வைக் கட்டுப்படுத்த உதவும்.மனதின் அமைதியே ஆன்மீக வாழ்வின் முதல் படி. இந்த எளிய முத்திரையைத் தினமும் பயின்று, ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

செரிமானம் மற்றும் உடல் வலிமைக்கான 'வஜ்ராசனம்' செய்வது எப்படி ? அறிவோமா ?

-----------------------------------------------------------------------------------------------------------------------------...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post) 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.

#PranaMudra
#Health
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ஒருதுளிஆன்மீகம்
#ota 

Protected by Copyscape

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status