Skip to main content

Posts

Showing posts from March, 2016

இந்து மதத்தின் அற்புதங்கள்...

இந்து மதத்தின்  அற்புதங்கள்: நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது . திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது .   நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும் , ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார் .   வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள் , வண்டுகள் அரிப்பதில்லை .   திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது . ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார் . மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர் . கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருட

திரு அம்பலச் சக்கரம்

திரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்... இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று இருந்த மனையொன்றில் எய்துவன் தானே. அரகர என்ன அரியதொன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப்பு அன்றே. இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை இருந்த அதனுள் இரேகை ஐந்தாக இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே. மகார நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே. அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின் அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. அமர்ந்த அரகர வாம்புற வட்டம் அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம் அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம் அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே. அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே. என