Skip to main content

Posts

Showing posts from September, 2020

'பத்மினி ஏகாதசி' விரத மகிமை...

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'பத்மினி ஏகாதசி' விரதம்  ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  தற்போது வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த வருடம் 'அதிக' மாதம் வந்துள்ளது.  'அதிக' (Adhika) மாதம், (July / August )   வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பத்மினி  ஏகாதசி"   (Padmini   Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  பத்மினி ஏகாதசி   பற்றி 'ஸ்காந்த  புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிரு

திருச்செந்தூர் ஆவணித் திருநாள் ... தற்போதைய தரிசன நடைமுறை ...

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  திருச்செந்தூர் ஆவணித் திருநாள் நேற்று (06-09-2020) கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இன்று (07-09-2020) நாம் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் சிலரோடு, முருகனை தரிசிக்க சென்றிருந்தோம்.  தற்போதைய தரிசன நடைமுறை பற்றி ஒரு சிறு விளக்க குறிப்பு ... ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட் பரிசோதனை. (இரண்டு இடங்களில்)   டிக்கெட் பிரிண்ட் அவுட் இருப்பது நன்று. இல்லாவிட்டால், டிக்கெட்டை அவர்களிடம், மொபைலில் காண்பித்து விட்டு, அவர்கள் தகவல்களை எழுதும் வரை, நாம் காத்திருக்க வேண்டும்.  ஆதார் கார்டு பரிசோதனை. (இரண்டு இடங்களில் ))  (கட்டாயம் கொண்டு செல்ல வேண்டிய ஆவணம்.) IR தெர்மோமீட்டர் பரிசோதனை. (இரண்டு இடங்களில்)  பின்னர், சானிடைசர்.   அதன் பின்பு வரிசையில் தரிசனம்.  ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன், ஆனால், விரைவில் தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தோம். (10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்)  வெகு குறைவாக, மிக சொற்பமான அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.  கடலுக்கு செல்ல முடியாது.  நாழிக்கிணறு செல்ல முடியாது. 

கிருஷ்ணன் உடன் எப்பொழுதும் மயிலிறகு-என்ன காரணம் ?

கிருஷ்ணன் எப்பொழுதும் மயிலிறகுடன் காட்சியளிக்கக்  காரணம்  என்ன   ?   சத் குருவின் விளக்கம்: கிருஷ்ணன், அவன் நேரான ஆள் அல்ல. சற்றே முரட்டுத்தனம் கொண்டவன். நிற்கும் போது கூட நேராக நில்லாமல் ஒரு காலை மடித்து வைத்தே நின்று காட்சியளிப்பான். எதைச் செய்தாலும் தனக்கென ஒரு தனி பாணி வகுத்துக்கொண்டு அதன்படியே நின்றான், நடந்தான், வாழ்ந்தான். கிருஷ்ணன் காலை மடித்து நின்று ஒயிலாகக் காட்சியளித்தது மட்டுமல்ல, தனது கிரீடத்தில் மயிலிறகு இன்றியும் ஒரு நாளும் காட்சியளித்ததில்லை. ஏன் அவ்வாறெல்லாம் செய்தான் அவன் ? மயில் வர்ணனைக்கு அப்பாற்பட்டதோர் அழகான பறவை. அது தோகை விரித்தாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பாரதத்தில் மயில்கள் அதிகம். விருந்தாவனத்திலும் ஏராளமான மயில்கள் இருந்தன. தோகை அதிகம் கொண்ட ஆண் மயில்கள் ஆண்டு முழுவதும் இறகுகளை உதிர்க்கும். மயிலிறகுகளுக்காக அவற்றைக் கொல்ல வேண்டியதில்லை. தரையிலிருந்தே பொறுக்கிக் கொள்ளலாம். மயிலிறகு எவ்வளவு அழகானதென்பது பார்த்தாலே தெரியும். மயிலின் நிறமென்பது எவராலும் எளிதில் உருவாக்க இயலாத இயற்கையின் உன்னதப் படைப