Skip to main content

Posts

Showing posts from January, 2018

Real Meaning of "Aryam" and "Dravidam"...

"ஆர்யம் மற்றும் திராவிடம்" - உண்மையான பொருள் என்ன ? தற்போதைய கால கட்டத்தில், தம்மை மிகவும் மேதாவிகளாக காட்டிக்கொள்ள ஒரு சிலர் ஆர்யம் மற்றும் திராவிடம் என்று பேசுவது வாடிக்கையாகி உள்ளது... ஆனால், இது ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை சாஸ்திர விளக்கங்களுடனும், மொழி ஒப்பு இயல் விளக்கங்களுடனும் அன்றே காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் மிக எளிதாக என்னை போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார்... அதனை அப்படியே இங்கு  தங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளேன் ... சற்றே பெரிய பதிவு தான் என்றாலும், கடந்த 70 ஆண்டு கால அரசியலால் நாம் எந்த அளவு குழப்ப பட்டுள்ளோம் என்பதற்கு ஒரு மிக சரியான விளக்கம், இந்த கட்டுரையை படிக்கும்   15 நிமிடங்களில் நமக்கு  கிடைக்கும்...  த்ராவிட விஷயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி) தமிழ் என்பதுதான் ‘த்ரவிட’ (‘திராவிடம்’ என்பது). முதல் எழுத்தான ‘த’ என்பது ‘த்ர’ என்று இருக்கிறது. இப்படி ‘ர’ காரம் சேருவது ஸம்ஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன ச்லோகத்தில் வருகிற ‘தோடகர்’ என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்’ என்ற சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சிலபேர் ஸம்

தை அமாவாசை தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் ???

தை அமாவாசை 16-01-2018 ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் எவ்வளவு முக்கியமானது என்று உங்கள் அனைவருக்குமே தெரிந்து இருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம்.  ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும்.  சிரார்த்தம் என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது. இந்த நேரத்தில்,  காஞ்சி மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள்  மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்.... எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ??? மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம