Skip to main content

Posts

Showing posts from June, 2019

அத்தி வரதரா - அப்படின்னா என்ன ஸ்பெஷல் ???

அத்தி வரதரின் அரிய தரிசனம்... தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவிலில் "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்" 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்கோவில் புஷ்கரணியில் (தெப்பக்குளம்) இருந்து வெளி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறார்... (1st July to 17th August 2019) ஆம், அப்பேற்பட்ட அரிய நிகழ்வினை பற்றி அறிவோம் சில தகவல்களை ... காணொளி தொகுப்பு / VIDEO CLIP... ...அத்தி வரதரை பற்றிய காணொளி தொகுப்பு காண இங்கு கிளிக் செய்யவும்... ....Please Click Here to See the Video about Athi Varadhar... "க்ருதா யுகத்தில்" ஸ்ரீ பிரம்ம தேவரால், காஞ்சிபுரத்தில், அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட மூர்த்தியே, "ஸ்ரீ அத்தி வரத பெருமாள்" ஆவார். ப்ரம்ம தேவரின் யாகத்தீயினால் பின்னப்பட்ட மூர்த்தியை என்ன செய்வதென்று அறியாத ப்ரம்ம தேவருக்கு,   அசரீரி மூலம் வந்த கட்டளையை நிறைவேற்றினார்.  ஆம்,   கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒர