Skip to main content

Posts

Showing posts from December, 2017

பெயரில்லாத மதம்....??!!??

தெய்வத்தின் குரல் (முதல் பகுதியில் இருந்து )... காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா உரை  : இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்.  ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ  என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு.  வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்: வடதேசத்தில் பைராகி என்று யார் வந்து யாசகம் கேட்டாலும், உடனே பிச்சை போட்டு விடுவார்கள். நம் தென்னாட்டு ஜனங்கள் அப்படிச் செய்வதில்லை என்று பைராகிகளுக்குக் குறை. அவர்கள் ஒரு பாட்டுப் பாடுகிறார்கள். அதில், இ

மார்கழி:– செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை !!!

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் உரையில் இருந்து ... (வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது ஒரு மறு பதிவு ) மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.  இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.  ? இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? – தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை.  சத்குரு:  மார்கழியில் கோள்களின் நிலை : ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தில், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி வரும் டிசம்பர் 16ம் தேதி துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும

How to reduce Saturn's Negative Effect ?

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... வருகின்ற 19-12-2017 அன்று (வாக்ய பஞ்சாங்கப்படி) சனி பெயர்ச்சி நடைபெற உள்ளதை  நாம்  அனைவரும் அறிவோம்....இன்றைய   தினத்திற்குள்ளாக  நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 முதல் 6 வேறுபட்ட தொலைக்காட்சி மற்றும் மாத இதழ் பலன்களை கண்டிருப்போம் / படித்திருப்போம் ... இதில்  சிறப்பான பலன் பெறக்கூடிய  ராசியினர் மிகவும் உற்சாகமாகவும், சுமாரான மற்றும் மோசமான பலன்களை படித்தோர் சற்று உற்சாகம் குறைந்தும் இருப்பது இயல்பானது தான்... ஏற்கனவே, பல்வேறு தொலைக்காட்சிகளும், மற்றும் செய்தி தாள்களும், மாத இதழ்களும் சனி பெயர்ச்சி பலன்களை விரிவாக அலசி விட்ட படியால் நாமும் அதற்குள் செல்ல விரும்பவில்லை ... மாறாக, எல்லா சனி பெயர்ச்சிக்கும் பயன் தரக்கூடிய, மற்றும் சனி பகவானின் அருள் ஆசியினை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவரித்தால் நம்மில் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று நமது "ஒரு துளி ஆன்மீகம் " வாசகர்களின் / குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கு சில விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது...  இவை யாவும் பல்வேறு ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள

Hanuman Jayanthi - 18-12-2017

ஹனுமத் ஜெயந்தி விழா ... ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்... தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில், சுத்த மல்லி எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஆலயத்தில் சீரும், சிறப்புமாக தொடர்ந்து 24 ம் ஆண்டாக "ஹனுமத் ஜெயந்தி விழா " வெகு விமரிசையாக இந்த ஆண்டும் கொண்டாடப் பட உள்ளது ...  ஆம்... வரும் 18-12-2017 (மார்கழி மாதம் 3 ம் தேதி) திங்கள் கிழமை அன்று கொண்டாடப்  பட உள்ள ஹனுமத் ஜெயந்தி விழாவின் பத்திரிக்கை உங்களின் மேலான  பார்வைக்கு ... ஜெய் ஸ்ரீ ராம் !!!

Is anyone can misuse your Aadhaar Number ?

உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஆதார் எண் பயன் படுத்த பட்டுள்ளதா ? உங்களுக்கு சந்தேகமா ? உங்கள் ஆதார் எண், உங்களுக்கு தெரியாமல் எங்காவது தவறாக பயன் படுத்த பட்டிருக்கும் என்று உங்களுக்கு சந்தேகமா ?  அந்த கவலை இனி வேண்டாம்.... நீங்களே உங்கள் ஆதார் எண் எத்தனை முறை, எந்தெந்த  காரணங்களுக்காக பயன் படுத்தப் பட்டுள்ளது என்பதை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்... கீழே கொடுக்கப் பட்டிருக்கும் இந்த லிங்க் -ஐ கிளிக் செய்யவும். https://resident.uidai.gov.in/notification-aadhaar இந்த இணைய தளத்திற்கு சென்று, அதில் "Enter UID" எனும் இடத்தில் தங்களது "ஆதார் எண்ணை" பதிவிடவும். அடுத்து Captcha வையும் பதிவிடவும்.  தற்போது, ஆதார் என்னுடன் பதிவு செய்யப்பட்டு உள்ள தங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு கடவுச்சொல் வரும் . (OTP). படம் இரண்டில் காண்பித்துள்ள படி, அனைத்து விவரங்களையும் பதிவிட்டு அந்த கடவுச்சொல்லையும் பதிவிடவும் ... இப்பொழுது கடந்த ஆறு மாத காலத்தில் தங்களது ஆதார் எண் எந்தெந்த இடத்தில் எல்லாம் உபயோக படுத்தப் பட்டுள்ளது என்பதை மிக தெளிவாக காணலாம். இ

Tirupathi Temple - Important Informations

திருப்பதி தரிசனம் சில தகவல்கள் ... திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும் . காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள் , 2 ஊழியர்கள் , தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர் , வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள் .  முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள் . பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார் . பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள் .  அந்நேரத்தில் " கௌசல்யா சுப்ரஜா ராம ..."  என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும் . சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார் . பின்னர் வீணையை இசைக்க ,  வெங்கடாசலபதி அருகில் " போக ஸ்ரீனிவாச மூர்த்தி " பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள் . அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்