Skip to main content

Posts

Showing posts from December, 2019

ஸ்ரீ ரமண மகரிஷி - ரமணாஸ்ரமம் - (Part-3)

ரமணாஸ்ரமம் பற்றிய முழு தொகுப்பு: (A Complete Guide about 'Ramanasramam'...) அமைவிடம்: அகிலம் முழுக்க ஆர்வமுடன் பார்க்கும் ஆன்மீக பூமியாம் பாரதத்தாயின் பாதங்களாய் அமைந்துள்ளவை தமிழகமும் கேரளமுமாகும். இதில் தமிழகத்தின் வட பகுதியில் தலைநகரமாம் சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் தென்மேற்கில் அமைந்துள்ள மலைநகரம் திருவண்ணாமலையாகும். இது நினைக்க முக்தி தரும் அருணாச்சலம் என்று அழைக்கப்படுகிறது. விழுப்புரம்-காட்பாடி புகை வண்டிப் பாதையும் இத்தலத்தைத் தழுவிச் செல்கிறது. இது பெங்களூர் திருப்பதி போன்ற பெரு நகரங்களுக்கும் சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்து மாவட்ட ஆட்சித் தலைநகரமாகவும் உள்ளது. நகர மையத்திலிருந்து பெங்களூர் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் ஸ்ரீரமணாஸ்ரமம் அமைந்துள்ளது. ரமண மகரிஷியின் பால பருவம் (பகுதி -1) பற்றி நமது முந்தைய பதிவினை படிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்... ரமண மகரிஷியின் திருவண்ணாமலை விஜயம் (பகுதி-2) பற்றி படிக்க விரும்பினால் இங்கு கிளிக் செய்யவும்... நுழைவு வாயில்: கிரிவலப் பாதையில் சேஷாத்ரி சுவாமி ஆஸ்ரமத்தை கடந்தவுடன் தஞ்

கிரஹணங்கள் பற்றி புராண விளக்கம்...

கிரஹணங்கள் பற்றி காஞ்சி மஹா பெரியவா கூறிய புராண விளக்கம்:  சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் என்று கிரஹணங்கள் இரண்டு  வகைப்படும். கிரஹணம் ஏற்படுவதற்கான காரணம், தேவர்களும், அசுரர்களும்  சமுத்திரத்தைக் கடைந்து, அமிர்தத்தை எடுத்தார்கள். அப்பொழுது தேவர்கள்  மாத்திரம் அமிர்தத்தைப் பருகுவதற்காக உட்கார்ந்து இருந்தார்கள். ஒரே ஒரு அசுரன்  மாத்திரம் தேவர்கள் கூட்டத்தின் மத்தியில் உட்கார்ந்து விட்டான். அமிர்தத்தை  சாப்பிடுகிறவர்கள் வெகுகாலம் ஜீவித்திருப்பார்கள் என்பது புராண வரலாறு. அதன்படி அசுரர்கள் அமிர்தத்தைச் சாப்பிட்டு விட்டால் வெகுநாள் சாகாமல்  பலவித துன்பங்களைக் கொடுப்பார்கள். ஆகையால் தேவர்கள் மாத்திரமே  அமிர்தத்தைப் பருகுவார்கள் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவினுடைய கட்டளைப்படி  உட்கார்ந்திருந்தார்கள். ஸ்ரீ மஹாவிஷ்ணு அமிர்தத்தை எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டே வந்தார். சூரியனுக்கும் - சந்திரனுக்கும் மத்தியில் ஒரு அசுரன்  அமர்ந்திருந்தான். அசுரன், 'இரண்டு (சூரிய, சந்திர) ஒளிகளுக்கிடையே நாம்  அமர்ந்துவிட்டால், நம்மை சரியாக கவனிக்காமல் நமக்கும் பரிமாறி விடுவார்கள்',  என்று உத்தேசம் செய்த

ஸ்ரீ ரமண மகரிஷி - அண்ணாமலை வாசம் (Part-2)

ஸ்ரீ ரமண மகரிஷி -  அண்ணாமலை வாசம் (பாகம்-2) ஸ்ரீ ரமண மகரிஷி அண்ணாமலைக்கு வந்த பிறகு அவரது செயல்பாடுகளை பற்றி விவரிக்கிறது இந்த கட்டுரை. அவர் அண்ணாமலைக்கு வருவதற்கு முன் அவரது ஞானத்தேடல் எப்படி இருந்தது, பால பருவம் எப்படி இருந்தது என்பதை நமது முந்தைய பதிவில் காணலாம்.  ஸ்ரீ ரமண மகரிஷி - பால பருவம் பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்... சரி, இப்பொழுது ரமண மகரிஷியின் அண்ணாமலை வாசம் பற்றி காண்போம்... தனிமையான ஒர் இடத்தை நாடி கோயிலிலே பாதாளலிங்கம் என்ற ஒர் இருட்டுக் குகையை தேர்ந்து எடுத்து ஏகாந்த நிஷ்டானுபூதியில் ஆழ்ந்தார். முற்காலத்தே வால்மீகி முனிவர் தம்மைச் சுற்றிலும் கறையான் புற்றுக்கள் எழுந்து மூடிக் கொண்டதையும் உணராது வருடக் கணக்காக நிஷ்டானுபூதியில் இருந்ததாகக் கூறுவர். பாலயோகியின் நிஷ்டானுபூதிநிலை அதைப் போல இருந்தது. பின்னர் சுப்ரமணியர் கோயிலருகே சிலகாலம்; அதன் பக்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் சில தினங்கள்; பின்னர் வாகன மண்டபத்தில் சில தினங்கள்; அதன்பின் அன்பர் ஒருவ ர்  வேண்டுகோளுக்கு இசைந்து திருவண்ணாமலைக்கு அருகே உள்ள குருமூர்த்தத்தை அடைந்து ஒன்றரை வருடகாலம் அங்கே ச

பெரும் புகழை கொடுக்கும் சபலா ஏகாதசி ...

சபலா ஏகாதசி / புஷ்ய க்ருஷ்ண  ஏகாதசி... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'புஷ்ய' மாதம், (பௌஷ்ய மாதம்- Paushya - December / January) தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "சபலா  ஏகாதசி"  (Saphalaa Ekadasi)  என்று    அழைக்கப் படுகின்றது.   1. சபலா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர ' புராண விளக்கம்:  யுதிஷ்டிரர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், புஷ்ய (பௌஷ்ய- Paushya) மாதத்தில்  (December  / January )  கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய ஏகாதசியின் பெருமைகளையும், அதனை கடைபிடிப்பது எப்படி மற்றும் அதன் பலன்களையும் கூறுங்கள் என்று வேண்டுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகிறார் ... ஹே, யுதிஷ்டிர மஹராஜ், நான் முன்னர் கூறியபடி, என் மனதிற்கு ப்ரியமான 'ஏகாதசி' விரதம் அனைத்துமே சிறந்தவை தான்... கிருஷ்ண பட்சம் / சுக்ல பட்சம் என்று எனது பக்தர்கள் பிரித்து பார்க்க கூடாது... இருப

யோகிகளின் வகைகள் மற்றும் தத்தாத்ரேயர் ஜயந்தி...

யோகிகளின் வகைகள் பற்றி சத்குருவின் பார்வை: (தத்தாத்ரேயர் ஜயந்தி - 29-12-2020) சில யோகா பள்ளிகளில் , யோகிகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்கள் . அவை மந்தா , மத்யமா மற்றும் உத்தமா என்று குறிப்பிடப்படுகின்றன . மந்தா யோகிகள் - அவ்வப்போது புரிதலின் உச்சம் தொடுபவர்கள்: மந்தா என்றால் , விழிப்புணர்வுடன் இருப்பதென்றால் என்ன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் . அவர் படைப்பின் மூலத்தை உணர்ந்திருக்கிறார் , அவர் ஒருமையை அறிந்திருக்கிறார் , ஆனால் நாள் முழுவதும் அதை அவரால் தக்கவைக்க முடியவில்லை . அவர் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது . அவர் விழிப்புணர்வில் இருக்கும்போது , அந்தத் தன்மையை உணர்கிறார் . அவர் விழிப்புணர்வில் இல்லாதபோது , அவர் அந்த ஒட்டுமொத்த அனுபவத்தையும் இழக்கிறார் . இது அமைதியாக இருப்பது அல்லது மகிழ்ச்சியாக இருப்பது பற்றி அல்ல . இது பெயரிடப்படாத பரவச நிலைகளில் இருப்பது . எனவே , முதல் வகைப்பட்ட யோகி அதை அறிந்திருக்கிறார் . ஆனால் , அவருக்கு நினைவூட்டப்பட வேண்டும் அல்லது அவர் தனக்குத்தான