Skip to main content

யோகிகளின் வகைகள் மற்றும் தத்தாத்ரேயர் ஜயந்தி...

யோகிகளின் வகைகள் பற்றி சத்குருவின் பார்வை:

(தத்தாத்ரேயர் ஜயந்தி - 29-12-2020)

சில யோகா பள்ளிகளில், யோகிகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்கள். அவை மந்தா, மத்யமா மற்றும் உத்தமா என்று குறிப்பிடப்படுகின்றன.



மந்தா யோகிகள் - அவ்வப்போது புரிதலின் உச்சம் தொடுபவர்கள்:
மந்தா என்றால், விழிப்புணர்வுடன் இருப்பதென்றால் என்ன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் படைப்பின் மூலத்தை உணர்ந்திருக்கிறார், அவர் ஒருமையை அறிந்திருக்கிறார், ஆனால் நாள் முழுவதும் அதை அவரால் தக்கவைக்க முடியவில்லை. அவர் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் விழிப்புணர்வில் இருக்கும்போது, அந்தத் தன்மையை உணர்கிறார். அவர் விழிப்புணர்வில் இல்லாதபோது, அவர் அந்த ஒட்டுமொத்த அனுபவத்தையும் இழக்கிறார். இது அமைதியாக இருப்பது அல்லது மகிழ்ச்சியாக இருப்பது பற்றி அல்ல. இது பெயரிடப்படாத பரவச நிலைகளில் இருப்பது. எனவே, முதல் வகைப்பட்ட யோகி அதை அறிந்திருக்கிறார். ஆனால், அவருக்கு நினைவூட்டப்பட வேண்டும் அல்லது அவர் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவரது புரிதல் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை.

நீங்கள் விழிப்புணர்வோடு கூடிய புரிதலில் இருக்கும்போது, சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை, ஒவ்வொன்றும் உள்ளபடியே அங்கே இருப்பதை உணர்கிறீர்கள். நீங்கள் போதுமான அளவு விழிப்புடன் இல்லாவிட்டால், உங்கள் புரிதல் குறையும்போது, அவைகளை அதன்தன் இயல்பில் நீங்கள் உணர்வதில்லை

உங்கள் புரிதல் மேலும் குறையும்போது, உதாரணத்திற்கு நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது, உங்களால் புற உலகம் சார்ந்ததைக்கூட உணர முடியாது. உங்கள் அனுபவத்தில் அது மறைந்துவிட்டது. இதேபோல், ஒரு குறிப்பிட்ட அம்சம் எந்த அளவுக்கு அதிகமாக நுட்பமாகிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிகமாக ஆழமான புரிதல் உணர்வு தேவைப்படுகிறது. யாராலும் இருபத்தி நான்கு மணி நேரமும் விழிப்புணர்வுக்கான முயற்சியில் இருக்க முடியாது. நீங்கள் விழிப்புடன் இருக்க முயற்சி செய்தால், அதை சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்கு உங்களால் நிலைநிறுத்த முடிந்தால், அது ஒரு பெரிய விஷயம். இல்லையெனில், அது இடம் விட்டு இடம் தாவிச்செல்லும். எனவே, ஒரு யோகியின் முதல் கட்டம், மந்தா என்று அழைக்கப்படுகிறது. மந்தா என்றால், மக்கள் பொதுவாக இந்த வார்த்தைக்குப் பயன்படுத்தும் மந்தத்தன்மையை இது குறிக்கவில்லை; இது புரிதலில் இருக்கும் மந்தநிலை.

மத்யமா யோகிகள் - நீம் கரோலி பாபா:

யோகிகளின் இரண்டாவது வகை அல்லது இரண்டாவது கட்டம், மத்யமா என்று அழைக்கப்படுகிறது, அதாவது நடுத்தரமானது. அவரைப் பொறுத்தவரை, உள்நிலைப் பரிமாணமும், அதற்கு அப்பாற்பட்டவையும் இடையறாமல் அவர் புரிதலில் உள்ளன. ஆனால், அவரால் இங்கே இருப்பதை, உடல்தன்மையின் பரிமாணத்தை நிர்வகிக்க முடியாது. இன்றைக்கும் கூட வழிபடப்படும் பல்வேறு யோகிகள் இருந்திருக்கிறார்கள்

ஆனால், அவர்கள் வாழ்க்கையில் எதைச் செய்வதற்குமான திறனையும் முற்றிலும் இழந்தவர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டங்களில், சாப்பிடவும், கழிப்பறைக்குச் செல்வதற்கும்கூட அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. அவர்கள் தங்களுக்குள் ஒரு அற்புதமான நிலையில் இருந்தனர். ஆனால், அவர்கள் தனக்கான எதையும் செய்துகொள்ள இயலாத குழந்தைகளைப் போல ஆனார்கள், அவர்கள் புறஉலகிலிருந்து தொடர்பற்றுப் போனார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் நீம் கரோலி பாபா. இவருக்குக் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றுகூடத் தோன்றுவதில்லை. அவர் வெறுமனே உட்கார்ந்திருப்பார். மற்றவர்கள்தான் அவரிடம்நீங்கள் பல மணி நேரங்களாக கழிவறைக்குச் செல்லவில்லை, இப்போது நீங்கள் போக வேண்டும்என்று சொல்வார்கள், அதன்பிறகே அவர் செல்வார். உடலியல் செயல்பாடுகள், உலகியல் செயல்பாடு என்பதே அவர்களின் உணர்வு நிலையில் முற்றிலும் இருப்பதில்லை. அவர்கள் ஒரு அற்புதமான நிலையில் உள்ளனர், ஆனால் அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அந்த நிலையில் நீடித்திருக்க முடியாது. ஏனென்றால், ஒருவர் புற உலகத்துடன் தொடர்பற்றுப் போகும்போது, அவரால் உடலில் நீடித்திருக்க முடியாது.

உத்தம யோகிகள் - குரு தத்தாத்ரேயாவின் கதை:

ஒரு
யோகியின் மூன்றாவது நிலை என்பது, அவர் எப்போதும் உச்சபட்ச உணர்தலில் இருக்கிறார், அதேநேரத்தில், அவர் வெளி உலகத்துடனும் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால், அவர் உண்மையிலேயே ஒரு யோகியாக இருக்கிறாரா, இல்லையா என்பதே உங்களுக்குத் தெரிவதில்லை! இதற்கு ஒரு உதாரணம் தத்தாத்ரேயா. அவரைச் சுற்றியிருந்தவர்கள், இவர் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் மறு அவதாரம் என்று கூறினார்கள். இது மக்கள் அதனை வெளிப்படுத்தும் வழி. ஏனென்றால், அவர் மனித வடிவத்தில் இருந்தாலும், மனிதத் தன்மையில் இல்லை. இதனால் அவர் மனிதத்தன்மை இல்லாத இரக்கமற்றவர் என்று அர்த்தமல்ல. ஆனால், அவர் நிச்சயமாக மனிதர் அல்ல. எனவே, அவர்கள் அத்தகைய குணங்களைக் கண்டபோது, அவரை சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவுடன் மட்டுமே ஒப்பிட முடிந்தது. அவர் மூவரின் மறு அவதாரம் என்று மக்கள் கூறினர்.

எனவே, சில சமயங்களில் தத்தாத்ரேயாவின் படங்களை பார்த்தால் அவர் மூன்று தலைகளுடன் சித்தரிப்பட்டிருப்பதை காண்பீர்கள். ஏனெனில், அவர் மூவரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறார்.

தத்தாத்ரேயா மிகவும் புதிரான வாழ்க்கை வாழ்ந்தார். இன்றும், சில நூறு தலைமுறைகளுக்குப் பிறகும் கூட, தத்தாத்ரேயரை வழிபடுபவர்கள் ஒரு சக்திவாய்ந்த வம்சாவளியாக இருக்கின்றனர். கான்ஃபத்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இன்றைக்கும்கூட, அவர்கள் கருப்பு நாய்களுடன் சுற்றி வருகிறார்கள். தத்தாத்ரேயா எப்போதும் அவரைச் சுற்றி கன்னங்கரிய நிற நாய்களை வைத்துக் கொண்டிருந்தார்.


உங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தால், அது உங்களை விட இன்னும் கூடுதலான புலனுணர்வு கொண்டது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மோப்ப சக்தியில், கேட்கும் திறனில், பார்வைத் திறனில் - அது உங்களை விட சற்று மேலானதாகவே தோன்றுகிறது. எனவே, தத்தாத்ரேயா, நாயை வேறொரு நிலைக்கு அழைத்துச் சென்றார். மேலும் அவர் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருந்த நாய்களை மட்டும் தேர்ந்தெடுத்தார். இன்றைக்கும்கூட, கான்ஃபத்கள் தங்களுடன் பெரிய நாய்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் நாய்களை நடக்கவிட மாட்டார்கள், அவர்களின் தோள்களில் சுமந்துகொண்டு நடப்பார்கள். ஏனெனில், அது தத்தாத்ரேயாவின் செல்லமாக இருந்தது. எனவே, அவர்கள் அவைகளை மிகவும் தனிக்கவனத்துடன் நடத்துகிறார்கள். அவர் கட்டமைத்துக் கொடுத்தது இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுடன், இது மிகப்பெரும் ஆன்மீக சாதகர்களின் குலங்களுள் ஒன்றாக இருக்கிறது.

பரசுராமர் ஒரு குருவைத் தேடிச் செல்கிறார்.
பரசுராமர், மகாபாரத காலத்தைச் சேர்ந்த, போர் புரியும் மாவீர துறவியாக இருந்தார். குருக்ஷேத்ர போரில் பங்கேற்கவில்லையென்றாலும், அதன் தலைவிதியை பல வழிகளில் பரசுராமர் முடிவு செய்தார். அவர் கர்ணனை ஆரம்பத்திலேயே குறித்து வைத்திருந்தார். அவருக்கு அபரிமிதமான திறன்கள் இருந்தன. ஆனால், அவரது உணர்ச்சியின் நிலையற்ற தன்மையானது, அவரது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தெய்வீகத்தை உணர அனுமதிக்கவில்லை. அவர் விழிப்பு நிலை, விழிப்பற்ற நிலை என்று மாறி மாறி இருந்தார். பெரும்பாலான நேரங்களில் மோசமான நிலையில் இருந்தது.

எனவே, அவர் பல, பல குருக்கள் அல்லது ஆசிரியர்களிடம் சென்றார். அவர் தேடுவது அவர்களிடம் இல்லை என்பதை அவர் கண்டபோது, அவர்களை அவர் வெட்டிச் சாய்த்தார். இறுதியாக, அவர் தத்தாத்ரேயரை நோக்கி வந்தார். மக்கள் அவரிடம், "தத்தாத்ரேயர் தான் உங்கள் கேள்விக்கான பதில்" என்று சொன்னார்கள். அப்போதும் அவர் தனது கோடரியைக் கையில் வைத்துக் கொண்டுதான் வந்தார். அவர் தத்தாத்ரேயரின் இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, ஆன்மீகத் தேடுதலை உடைய பலரும் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் ஆசிரமத்திற்குள் சென்று பார்த்துவிட்டு, தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர்!

பரசுராமர் தத்தாத்ரேயரின் இருப்பிடத்திற்குள் நடந்துசென்றபோது, கையில் ஒரு ஜாடி மதுவும், மடியில் ஒரு இளம் பெண்ணையும் வைத்தவாறு உட்கார்ந்திருந்த ஒரு மனிதரைக் கண்டார். தத்தாத்ரேயர் போதையில் இருப்பதாகத் தோன்றினார். பரசுராமர் அவரைப் பார்த்ததும், கோடரியைக் கீழே போட்டுவிட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். மற்ற அனைவரும் வெளியேறினர். அவர் சாஷ்டாங்கமாகப் பணிந்த தருணத்தில், மது ஜாடியும், பெண்ணும் மறைந்துவிட்டதுடன், தத்தாத்ரேயர் மட்டும் அவரது காலடியில் கிடக்கும் நாயுடன் அமர்ந்திருந்தார். பரசுராமர் தனக்கான மீட்சியை தத்தாத்ரேயருக்குள் கண்டார்.

உலகத்தில் தன்னால் எதையும் செய்ய முடியும், அதேநேரத்தில் தன்னை எதிலும் இழக்காமல் இருக்கவும் முடியும் என்பதை தத்தாத்ரேயர் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தார். இது, பரசுராமருக்கு அவர் அளித்த ஒரு விளக்கம்.
ஏனென்றால்
, பரசுராமர் அபரிமிதமான திறன்களைக் கொண்ட மனிதர். ஆனால், இந்தத் திறன் கோபத்தில் வெளிப்பாடு காண்கிறது. நிலையில்லாத ஒரு உணர்ச்சி நிலையில் எப்போதும் எதிர்மறையான வெளிப்பாட்டைக் காண்கிறது. எனவே, தத்தாத்ரேயர் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சூழலைப் பயன்படுத்தினார். தத்தாத்ரேயர் மதுவையும், பெண்ணையும், போதையையும் தாண்டி, எப்போதும் தெய்வீகத்தின் தொடர்பில் இருப்பதை பரசுராமர் உணர்ந்தபோது, அந்தக் கணமே அவரது மீட்சிக்கான வாசல் திறந்துகொண்டது.


Editors Note:
இன்று (29-12-2020) தத்தாத்ரேயர் ஜயந்தி. இந்த நாளில் அவரைப்பற்றி அறிந்து தத்தாத்ரேயரை வணங்கி நம் வாழ்வில் அருள் பெறுவோம்...

தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்:

ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ ப்ரசோதயாத்


...ஓம் ஷிவாய நமஹ...ஹரி ஓம்... 


...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

...நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி...

Comments

  1. எனக்கு இது புதிய தகவல்.இது வரை அவரைப்பற்றி தெரிந்து கொள்ளவில்லை.மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த