Skip to main content

Posts

Showing posts from August, 2019

மன்னராக மாற்றும் அஜ ஏகாதசி (அன்னதா ஏகாதசி) விரத மகிமை...

அரிச்சந்திரனை மீண்டும் மன்னனாக்கிய 'அஜ  ஏகாதசி / அன்னதா ஏகாதசி' விரதம் ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'பத்ரபாத' (Pathrabaadha) மாதம்,  ( August / September )   தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "அஜ ஏகாதசி" (அ) "அன்னதா ஏகாதசி" (அ) "பத்ரபாத கிருஷ்ண பட்ச  ஏகாதசி"   {  अज एकादशी /  अन्नदा एकादशी } ( Aja  Ekadasi / Annadha Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.  அஜ   /   அன்னதா   ஏகாதசி பற்றிய பிரம்ம வைவர்த்த புராண விளக்கம்:  இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிறாரோ, அவர்  தமது பூர்வ ஜென்ம  பாவங்களின் கர்ம வினைகளில் இருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.  அஜ ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும் . இந்த அஜ ஏகாதசி விரதத்தின