Skip to main content

Posts

Showing posts from March, 2020

(கிருமிக்கான) தீர்வு உங்கள் (நமது) கைகளில்...

(கிருமிக்கான) தீர்வு உங்கள் (நமது) கைகளில்...  இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? சாஸ்திர பூர்வமாக மற்றும் அறிவியல் பூர்வமாக...? ஒரு துளி ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் நமஸ்காரம்.  இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் Corona  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நமது இந்தியா உள்பட...  இது, சீனாவில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியது என்று ஒரு கருத்து / சீனா ஒரு Bio War புரிவதற்காக அந்த நாடே தயாரித்த China Virus என்று ஒரு கருத்து.  எது எப்படியோ ? இப்பொழுது நாம் அனைவரும் (உலக மக்கள்) பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம்.   இந்த நேரத்தில், இந்த 'சிறியவனின்' மனதில் தோன்றிய ஒரு சில கருத்துக்கள்.  இப்பொழுது, இது தோன்றிய விதத்தை ஆராய்ச்சி செய்வதை காட்டிலும், நமது நாட்டில் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே சாலச்சிறந்தது. ஒரு வகையில் பார்த்தால், இதனையே "கர்மா" எனலாம். மற்ற நாடுகளை விட்டு விடுவோம்,  இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக,  இந்தியாவில் 25-03-2020 முதல்

பாவங்களில் இருந்து விமோச்சனம் தரும் 'பாப மோசனி' ஏகாதசி ...

'பாபமோசனி'  / 'பாப மோச்சனி'  ஏகாதசி விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'சைத்ர மாதம்',  ( March/April )   தேய்   பிறையில் (கிருஷ்ண  பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பாப மோசனி ஏகாதசி"    ( Paba Mochani     Ekadasi )  என்று    அழைக்கப் படுகின்றது.  பாப மோச்சனி  ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர  புராண' விளக்கம்:  ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஓ பரந்தாமா, சைத்ர  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார்.  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார், ஓ அரசர்களில் சிறந்தவனே,  சைத்ர மாத தேய்பிறையில்  வரும் ஏகாதசி 'பாப மோச்சனி  ஏகாதசி' என்று அழைக்கப்படும். பாவங்களில் இருந்து விமோச்சனம் அளிப்பதால் அது பாப மோச்சனி ஏகாதசி ஆயிற்று; அதன் பெருமைகளை கூறுகிறேன் கேள் என்று ஸ

பெண்கள் கேட்கும் 'அல்டிமேட்' வரம் என்ன?அது நிறைவேற ஸ்லோகம் என்ன?

காரடையான் நோன்பின் மகத்துவம்... காரடையான்  நோன்பின் போது, பெண்கள் சொல்ல வேண்டியதாக 'மஹா பெரியவா' சாஸ்திரங்களில் இருந்து எடுத்துக்  கூறிய ஸ்லோகம் என்ன? உ லகில் உள்ள எல்லா நாடுகளிலும், ஆன்மீகத்தில் சிறந்த நாடாக, பலம் மிகுந்த நாடாக இந்தியா கருதப்படுவது ஏன் என்று சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் பதில், பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி, கர்ம பூமி, பல ஆலயங்கள் நிறைந்த நாடு என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல:நமது நாட்டுப் பெண்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் ஆற்றிய ஆன்மீகப் பணியும் ஒரு காரணம். நமது நாட்டு வரலாற்றில்,  ஆன்மீக பக்கத்தை புரட்டினால் ஆண்கள் புரிந்த ஆன்மீகச் செயல்கள், மற்றும் அதிசயச் செயல்கள் போல சற்றும் குறையாமல், ஏன் சற்று அதிகமாகவே பெண்கள் ஆற்றியுள்ளனர். அப்படி ஒரு ஆன்மீகச் சாதனை புரிந்தவர்களில் சாவித்திரி தேவியும் ஒருவர். அவர் புரிந்த சாதனையே இன்று கொண்டாடப்படும் காரடையான் நோன்பிற்கு காரணம். அதனுடைய வரலாற்றை நாம் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம். மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த 'அசுவபதி' என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை என்ற கவலை. ஒரு நாள் நாரதர் அங்கு வந

அரசனாக பிறக்கும் வாய்ப்பு தரும் 'அமலாகீ' ஏகாதசி...

'அமலாகீ'  ஏகாதசி விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'பல்குண' மாதம்,  ( February/March )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "அமலாகீ ஏகாதசி"    ( Amalaki   Ekadasi )  என்று    அழைக்கப் படுகின்றது.  அமலாகீ  ஏகாதசி பற்றி 'ப்ரம்மாண்ட  புராண' விளக்கம்:  மந்ததா எனும் அரசன் வசிஷ்ட முனிவரிடம், ஓ முனிவர்களில் சிறந்தவரே, பல்குண  மாதத்தில் வளர் பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் மகிமை பற்றி விவரியுங்கள் என்று கேட்கிறார்.  வசிஷ்ட முனி  கூறுகிறார், அரசர்களில் சிறந்தவனே,  'அமலாகீ ஏகாதசி' என்று அழைக்கப்படும் இந்த ஏகாதசி விரதத்தினை  முறையாக கடைபிடிப்பவர்கள் அனைவரும் அனைத்து செல்வ வளங்களையும் பெறுவர், அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், அதன் பின்பு மோக்ஷத்தை அடைவர், அதனைப் பற்றி விரிவாக கூறுகிறேன் கேள் என்று வசிஷ்ட முனி கூறியதை