Skip to main content

Posts

Showing posts from February, 2020

ஆலமரத்தில் இத்தனை மருத்துவ குணங்களா ?

ஆலமரத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன? ஆலமரத்தின் பயன்கள் பற்றி ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகளை முதலில் பார்ப்போம். அதன் பின்னர் அகத்திய முனி கூறியவற்றையும்  காண்போம்.. ஆயுர்வேதம்: இதன் வேர், பட்டை, இலைகள் மொட்டு, பழங்கள், பால் அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை. இதிலுள்ள அனைத்துப் பகுதிகளும் துவர்ப்பு, காரம், இனிப்புச்சுவை உடையவை. குளிர்ச்சியானவை. வலி நிவாரணி, ரத்தத்தை சுத்தம் செய்பவை, மூட்டு வீக்கம் போக்குபவை, கண்பார்வையை வலுப்படுத்துபவை, ரத்தக்கசிவை நிறுத்துபவை, மூட்டு வலி நீக்குபவை, வியர்வையை வெளிப்படுத்துபவை, பேதி வாந்தியை நிறுத்துபவை, நல்லதொரு டானிக். ஆலமரத்தின் வேரினால் பல் தேய்ப்பதால் பற்கள் உறுதிப்படும். வாந்தியை நிறுத்திவிடும். பொடி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் உபாதையும், வலுவிழந்துள்ள எலும்பு உபாதையையும் போக்கும். பட்டையை பொடி செய்து தூவினால் ரத்தக் கசிவை உடனே நிறுத்தும். உள்ளுக்குச் சாப்பிட்டால் பேதியை நிறுத்தும். சர்க்கரை வியாதி, சுயநினைவின்றி வெளியேறும் சிறுநீர், புண்கள், தோல் உபாதைகள், பிறப்புறுப்புகளில் ஏற்படும் வலியுடன் கூ

ஸ்ரீ இராம பிரானுக்கே வெற்றியை அருளிய விஜய ஏகாதசி மகிமை...

விஜய  ஏகாதசி -  விரத  முறை மற்றும் மஹிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'மக / பல்குண' மாதம், ( February/March )   தேய்  பிறையில்(கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "விஜய ஏகாதசி" ( Vij aya Ekadasi )  என்று    அழைக்கப் படுகின்றது.   விஜய ஏகாதசி பற்றி 'ஸ்காந்த  புராண' விளக்கம்:  நாரத முனி, ப்ரம்ம தேவரிடம், ஓ தேவர்களில் சிறந்தவரே, பல்குண  மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் மகிமை பற்றி விவரியுங்கள் என்று கேட்கிறார்.  ப்ரம்ம தேவர் கூறுகிறார், ஓ நாரதா,  ஸ்ரீ இராம பிரானுக்கே போரில் வெற்றியை தேடி தந்த, அதன் பெயரிலேயே அதன் மகிமையை உணர்த்தும் இந்த ஏகாதசி (விஜய என்றால் வெற்றி என்று ஒரு பொருள் உண்டு)   , 'விஜய ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றி விரிவாக கூறுகிறேன் கேள் என்று ப்ரம்ம தேவர் கூறியதை, நாம் இங்கு விவரிக்கிறோம். தனது தாயின் உத்தரவ

மஹா சிவராத்திரி-காஞ்சி மஹா பெரியவா விளக்கம்...

மஹா சிவராத்திரி பற்றி காஞ்சி மஹா பெரியவா கூறியவை என்ன ? அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். (சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று. விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராஸுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி. அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுவது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்ய மூர்த்தியிருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும். இந்த லிங்கோத்பவர் யார்? ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு ச

ஸ்ரீ ஆதி சங்கரர் - சத்குருவின் பார்வையில்...

ஸ்ரீ ஆதிசங்கரரைப் போல ஒரு மனிதரை உயர்த்தும் தன்மை எது என்று நமக்கு சத்குரு கூறுகிறார் . அதோடு , அவர் நமக்கு விட்டுச்சென்ற மகத்தான பொக்கிஷத்தை நினைவுகூர்வதுடன் , நம் தேசத்தை உலகிற்கு பொக்கிஷமாக்கிட என்ன செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளார். ஆதி சங்கரர் , அறிவில் மலைபோலவும் , மொழித்திறனில் அதிமேதாவியாகவும் , அனைத்திற்கும் மேலாக , ஆன்மீக ஒளியாகவும் , இந்தியாவின் பெருமையாகவும் விளங்கியவர் . மிகச் சிறிய வயதிலிருந்தே அவர் காட்டிய விவேகத்திலும் அறிவிலும் , அவர் மனிதகுலத்திற்கு பிரகாசமான ஒளி விளக்காக இருந்தார் . இப்படியொரு மகத்தான மனிதரை எப்படி உருவாக்குவது ? தன் வாழ்நாளில் மிகக்குறுகிய காலகட்டத்தில் , அவர் தேசத்தின் குறுக்கும் நெடுக்கும் நடந்தே பயணித்தார் . இந்தியாவின் தென்முனையிலிருந்து தேசத்தின் மையப்பகுதிக்கு நடந்தார் , பிறகு வடதிசையில் சிறிது தூரம் சென்றார் , பிறகு கிழக்கும் மேற்கும் சென்றார் . இப்படிப்பட்ட சக்தியும் , துடிப்பும் , விவேகமும் எங்கிருந்து வந்தது ? இதை குறிப்பால் உணர்த்தும் ஒரு முக்கிய அம்சம