Skip to main content

Posts

Showing posts from December, 2015

திருவாதிரை திரு நாள் - 26-12-2015

திருவாதிரை திரு நாள்  26-12-2015 : இன்று இரவு 01:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை பல்வேறு கோவில்களில் மிகவும் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும்  கொண்டாடப்படும் திருவாதிரை திருநாள் ... சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் அதற்கு இணையாக திருநெல்வேலி அருகில் உள்ள செப்பறை நடராஜர் கோவில் ஆகிய இரண்டு இடங்களிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்... இந்த நேரத்தில், நமது முந்தைய பதிவினை மீண்டும் நினைவு கூறுகிறோம்.... ------------------------ செப்பறை திருக்கோவில் ஸ்தல புராணம்:  English Version is available below (After this Tamil Version): வாழ்க வளமுடன் ! ! ! நாம் முன்பே கூறியது போல, நமது குழுவின் மூலம் செப்பறை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மிகச்சிறப்பான முறையில் குறுந்தகடுகளாக தயாரிக்கப்பட்டு திருவாதிரை திருநாள் அன்று கோவில் சிவாச்சாரியர்களிடம் C.D. (வீடியோ) வழங்கப்பட்டது. ஸ்தல புராணம் முழுவதையும் நம்மால் இங்கு டைப் செய்திட நேரம் இல்லாத காரணத்தால், அதனை உங்களுக்கு அப்படியே ஒலி-ஒளி வடிவில் (VCD file format) கீழே கொடுத்து இருக்கிறோம். பாகம்-1:  6 நிமிடங்கள் மட்டுமே       

மார்கழி – செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை !

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை... மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான்.  இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப் படுகின்றன. இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? – தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை.  சத்குரு:  மார்கழியில் கோள்களின் நிலை : ஆன்மீக மார்க்கத்தில் முன்னேறுவதற்கான தடத்தில், வருடத்தின் குறிப்பிடத்தகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ் மாதம் மார்கழி, டிசம்பர் பாதி தேதியில்  துவங்குகிறது. பூமியின் வடபாதி வட்டத்தில் இது உஷ்ணமாக இருக்க வேண்டிய காலம், ஆனால் அதிக குளிராக உள்ளது. ஏனெனில் நமது கோளத்தின் வடபகுதியின் முன்புறம் சூரிய பார்வையின் நேர்கோணத்தில் இல்லை. பூமிக்கு சூரியன் மிக அருகில் இருக்கும் இந்நேரத்தில் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து விடுகின்றன. பூமி இன்னும் சற்று விலகியிருந்தால் சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கியிருக்கும். ஆனால் பூமி மிக அண்மையில் இருப்பதால் சூர