Skip to main content

Posts

Latest Update

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி...

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி... அவதாரம், படைப்புகள், ஸ்ரீரங்கத்தின் 'தானான திருமேனி' மற்றும் சமத்துவ சிலை !!! முன்னுரை: சனாதன தர்மத்தின் வரலாற்றில், பக்தி மார்க்கத்தையும் வேதாந்த தத்துவத்தையும் இணைத்து, சமூக சமத்துவத்திற்காகப் பாடுபட்ட மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யர். கி.பி. 1017-ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவரது அவதார தினமே "ராமானுஜர் ஜெயந்தி" என உலகம் முழுவதும் உள்ள வைணவர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் இவர், பக்தி இயக்கம் மற்றும் வேதாந்த சிந்தனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். ஆச்சார்ய வந்தனம் (ஸ்லோகம்) ; ஸ்ரீ ராமானுஜரைத் துதிக்கும் மிக முக்கியமான சமஸ்கிருத ஸ்லோகம்: "யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே" விளக்கம் : எவர் ஸ்ரீமன் நாராயணனின் (அச்யுதன்) திருவடித்தாமரைகளில் கொண்ட எல்லையில்லாப் பக்தியால், உலக இன்பங்கள் அனைத்தையும் வெறும் துரும்பாக எண்ணினாரோ, கருணைக்கடலும் எனது ஆசாரிய...
Recent posts

ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி - அத்வைத ஜோதியும் சனாதன தர்மத்தின் எழுச்சியும் !!!

ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி - அத்வைத  ஜோதியும் சனாதன தர்மத்தின் எழுச்சியும் !!! ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... சனாதன தர்மம் பல்வேறு பிரிவுகளாகச் சிதறிக் கிடந்த காலக்கட்டத்தில், பாரத தேசம் முழுவதும் கால்நடையாகவே பயணித்து, வேத நெறியை நிலைநிறுத்திய மாபெரும் அவதார புருஷர் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர். ஒவ்வொரு வருடமும் சித்திரை (வைசாக) மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியன்று இவருடைய அவதார திருநாளான "ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி" உலகெங்கும் உள்ள இந்துக்களால் பெரும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. அறியாமை இருளை அகற்றி, அத்வைத ஞான ஒளியை ஏற்றிய அந்த மாபெரும் குருவின் சரித்திரத்தை இன்று அறிவோம். ஆச்சார்ய வந்தனம் மற்றும் அதன் விளக்கம் : ஆதி சங்கரரைத் துதிக்கும் மிக முக்கியமான, ஆழமான சமஸ்கிருத ஸ்லோகம்: "ச்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் | நமாமி பகவத்பாதம் சங்கரம் லோக சங்கரம் ||" விளக்கம்:  வேதங்கள் (ஸ்ருதி), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதி) மற்றும் புராணங்கள் ஆகிய அனைத்திற்கும் இருப்பிடமாக விளங்குபவரும், கருணைக் கடலாகத் திகழ்பவரும், உலகிற்கு மங்களத்தை (சங்க...

உடலின் ஆற்றலைத் தூண்டும் 'சூட்சும வியாயாமம்' - எளிய மூட்டுப் பயிற்சிகள் !

ஆரோக்கியத்தில்   ஒரு   துளி... பிரிவு : எளிய உடற்பயிற்சிகள் (Simple Exercise) உடலின் ஆற்றலைத் தூண்டும் ' சூட்சும வியாயாமம் ' - எளிய மூட்டுப் பயிற்சிகள் !

தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் - உண்மை அர்த்தம் என்ன - மகா பெரியவா விளக்கம் .

தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் - உண்மை அர்த்தம் என்ன - மகா பெரியவா விளக்கம் . ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... தனக்கு மிஞ்சி த்  தான் தானமும், தர்மமும் என்ற சொல்லுக்கு உண்டான அர்த்தத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று காஞ்சி மகா பெரியவா கூறிய அற்புத கருத்தை அப்படியே இங்கு பகிர்ந்துள்ளோம். இது இந்த 'சிறியவன்' கட்டுரை அல்ல. “ தனக்குத் மிஞ்சித் தர்மம் ” என்பதற்கு நான் புது வியாக்யானம் செய்கிறேன் : எது உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமோ , எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ , அந்த அடிப்படைத் தேவைகளுக்குத் தேவையானதைத் தான் ‘ தனக்கு ’ என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் , ‘ தனக்கு ’ என்று சொல்லிக்கொண்டு , ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும் . ஸொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக்கொள்ளாவிட்டால் தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக...

அக்ஷய திருதியை - செய்ய வேண்டிய முக்கிய தானங்களும் அவற்றின் பலன்களும்...

அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டிய முக்கிய தானங்களும் அவற்றின் பலன்களும்... ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... ஹரி ஓம் ! வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அக்ஷய திருதியை நன்னாளின் மகிமையையும் , அன்று செய்யப்படும் தானங்களின் பலன்களையும் காண்போம்.

அட்சய திருதியை நாளில் நடந்த அற்புதங்கள்...

அட்சய   திருதியை நாளில் நடந்த அற்புதங்கள்... ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... சித்திரை மாதம் வளர்பிறை திருதியை ' அட்சய திருதியை ' என்று போற்றப்படுகிறது . ' அக்ஷயம் ' என்றால் “ தேயாதது” ( அ) “ என்றும் குறையாதது” என்று பொருள் . இந்நாளில் நாம் எதைச் செய்கிறோமோ அது அக்ஷயமாக வளரும் என்பது பிரபஞ்ச விதி . இன்றைய வணிக உலகில் இது தங்கம் வாங்கும் நாளாக மட்டுமே சுருக்கப்பட்டுவிட்டது . உண்மையில் , நமது தர்ம சாஸ்திரங்கள் இந்த நாளைப் பற்றிச் சொல்லும் ஆழமான மற்றும் உண்மையான பின்னணிகள் இதோ : யுகாதி மகிமை - காலத்தின் தொடக்கம் : நமது புராணங்களின் படி , நான்கு யுகங்களில் முதலாவதான கிருத யுகம் ( சத்ய யுகம் ) மற்றும் திரேதா யுகம் தொடங்கிய புனிதமான நாள் இந்தத் திருதியை ஆகும் . பிரம்ம தேவர் உலகைப் படைக்கத் தொடங்கியதும் இதே நாளில் தான் . எனவே , இந்நாளில் தொடங்கும் கல்வி , தொழில் அல்லது எந்த ஒரு நற்காரியமும் தடைகளின்றி விருத்தியடையும் . மகாபாரதக் காவியத் தொடக்கம் : வேதவியாசர் மகாபா...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status