ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி... அவதாரம், படைப்புகள், ஸ்ரீரங்கத்தின் 'தானான திருமேனி' மற்றும் சமத்துவ சிலை !!! முன்னுரை: சனாதன தர்மத்தின் வரலாற்றில், பக்தி மார்க்கத்தையும் வேதாந்த தத்துவத்தையும் இணைத்து, சமூக சமத்துவத்திற்காகப் பாடுபட்ட மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யர். கி.பி. 1017-ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த இவரது அவதார தினமே "ராமானுஜர் ஜெயந்தி" என உலகம் முழுவதும் உள்ள வைணவர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் இவர், பக்தி இயக்கம் மற்றும் வேதாந்த சிந்தனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். ஆச்சார்ய வந்தனம் (ஸ்லோகம்) ; ஸ்ரீ ராமானுஜரைத் துதிக்கும் மிக முக்கியமான சமஸ்கிருத ஸ்லோகம்: "யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே" விளக்கம் : எவர் ஸ்ரீமன் நாராயணனின் (அச்யுதன்) திருவடித்தாமரைகளில் கொண்ட எல்லையில்லாப் பக்தியால், உலக இன்பங்கள் அனைத்தையும் வெறும் துரும்பாக எண்ணினாரோ, கருணைக்கடலும் எனது ஆசாரிய...
ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி - அத்வைத ஜோதியும் சனாதன தர்மத்தின் எழுச்சியும் !!! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... சனாதன தர்மம் பல்வேறு பிரிவுகளாகச் சிதறிக் கிடந்த காலக்கட்டத்தில், பாரத தேசம் முழுவதும் கால்நடையாகவே பயணித்து, வேத நெறியை நிலைநிறுத்திய மாபெரும் அவதார புருஷர் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர். ஒவ்வொரு வருடமும் சித்திரை (வைசாக) மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியன்று இவருடைய அவதார திருநாளான "ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி" உலகெங்கும் உள்ள இந்துக்களால் பெரும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. அறியாமை இருளை அகற்றி, அத்வைத ஞான ஒளியை ஏற்றிய அந்த மாபெரும் குருவின் சரித்திரத்தை இன்று அறிவோம். ஆச்சார்ய வந்தனம் மற்றும் அதன் விளக்கம் : ஆதி சங்கரரைத் துதிக்கும் மிக முக்கியமான, ஆழமான சமஸ்கிருத ஸ்லோகம்: "ச்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் | நமாமி பகவத்பாதம் சங்கரம் லோக சங்கரம் ||" விளக்கம்: வேதங்கள் (ஸ்ருதி), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதி) மற்றும் புராணங்கள் ஆகிய அனைத்திற்கும் இருப்பிடமாக விளங்குபவரும், கருணைக் கடலாகத் திகழ்பவரும், உலகிற்கு மங்களத்தை (சங்க...

