Skip to main content

Posts

Latest Update

ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம பாராயண மகிமை !

  ஸ்ரீ லலிதா ஸ கஸ்ரநாம பாராயண மகிமை ! இல்லங்களை ஒளிரச் செய்யும் தேவி உபாசனை  ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... சனாதன தர்மத்தில் அன்னை பராசக்தியின் வழிபாடும் , உபாசனையும் மனித குலத்திற்கு முக்தியையும் , இகபர சுகங்களையும் தரக்கூடிய உன்னத நெறியாகும் . பிரம்மாண்ட புராணத்தில் , அக்னி பகவான் ஹயக்ரீவர் ரூபத்தில் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்த மிக ரகசியமான , சக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் தான் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஆகும் . அன்னை ஸ்ரீ மாதா வஸினீ வாக் தேவதைகளால் நேரடியாகத் துதிக்கப்பட்ட இந்த 1000 திருநாமங்களை , குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்வதால் இல்லங்களில் ஏற்படும் மங்களகரமான மாற்றங்களை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம் . 1. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தின் ஆன்மீகப் பின்னணி : பண்டாசுரன் என்ற அசுரனின் கொடுமையிலிருந்து உலகைக் காக்க , தேவர்கள் செய்த மகா யாகத்தின் அக்னி குண்டத்திலிருந்து , கோடி சூரிய பிரகாசத்துடன் அன்னை ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி அவதரித்தாள் . அவளது அரசாட்சித் திறனை...
Recent posts

உங்கள் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக வேண்டுமா ?

இல்லத்தில்  லக்ஷ்மி  கடா க்ஷ ம் பெருக... விளக்கேற்றும் போது நாம் செய்யும் சிறு தவறுகளும் ...  தீர்வுகளும்  ! லக்ஷ்மி கடாக்ஷத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நமது இல்லங்களில் நாம் பின்பற்றும் தீபம் ஏற்றும் முறை ஆகும்.. நமது சனாதன தர்மத்தில் ‘ தீபம் ’ என்பது வெறும் ஒளியல்ல ; அது அறியாமையை நீக்கி அறிவை வழங்கும் பரப்பிரம்ம வடிவம் . ' ஒரு துளி ஆன்மீகம் ' வாசகர்களுக்காக , வீட்டில் விளக்கேற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான சில ஆன்மீக நெறிமுறைகளை இங்கே காண்போம் . 1. திரிகளின் எண்ணிக்கை : பொதுவாகப் பலரும் ஒரு திரியிட்டு விளக்கேற்றுவார்கள் . ஆனால் , எப்போதும் இரண்டு திரிகளை ஒன்றாக இணைத்து ஒரு திரியாகப் போட்டு விளக்கேற்றுவதே குடும்ப ஒற்றுமைக்கும் , தம்பதியர் ஒற்றுமைக்கும் சிறந்தது . இது ' சிவசக்தி ' ஐக்கியத்தைக் குறிக்கிறது . 2. விளக்கை   குளிர்விக்கும் ( அணைக்கும்) முறை : விளக்கை வாயால் ஊதி அணைக்கவே கூடாது . இது பெரும் தோஷத்தை ஏற்படுத்தும் . பூவின் காம்பாலோ அல்லது திரியின் நுனியை எண்ணெ...

பகீரதன் செய்த தவம் - உடல் சமநிலையையும் மன உறுதியையும் தரும் 'விருக்ஷாசனம்' !

  உடல் சமநிலையையும் மன உறுதியையும் தரும்  'விருக்ஷாசனம்'! ஆரோக்கியத்தில்   ஒரு   துளி... ஒரு   துளி   ஆன்மீக   அன்பர்களுக்கு   நமஸ்காரம் ... இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் படிக்கலாம் . Please click here to read the Article in English... பிரிவு : யோகாசன குறிப்புகள் {Yoga Tips} நமது சனாதன தர்மத்தில் , இயற்கையோடு இயைந்து வாழ்வதே யோகக்கலை . ஒரு மரம் எப்படி புயலிலும் மழையிலும் தன் வேர்களை உறுதியாகப் பிடித்துக்கொண்டு அசையாமல் நிற்கிறதோ , அதே போன்ற உடல் உறுதியையும் மன உறுதியையும் நமக்குத் தரும் ஒரு அற்புதமான ஆசனம் தான் ' விருக்ஷாசனம் ' {Vrikshasana} . ' விருக்ஷம் ' என்றால் சமஸ்கிருதத்தில் ' மரம் ' என்று பொருள் . பண்டைய காலத்தில் முனிவர்கள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வதை புராணங்களில் படித்திருப்போம் . குறிப்பாக , கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலான தன் முன்னோர்களின் சாபம் நீங்கவும் , அவர்களுக்கு பிராயச்சித்தம் { முக்தி } கிடைக்கவும் , கங்கை நதியை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் மேற்க...

சமர்த்த ராமதாசர் - சத்ரபதி சிவாஜியை உருவாக்கிய மாபெரும் குரு !

சமர்த்த ராமதாசர்   சத்ரபதி சிவாஜியை உருவாக்கிய மாபெரும் குரு  ! பாரத தேசத்தின் ஆன்மீக வரலாற்றில் , வெறும் பக்தி மார்க்கத்தை மட்டும் போதிக்காமல் , தேச பக்தியையும் , உடல் வலிமையையும் (Shakti and Bhakti) சேர்த்தே போதித்த ஒப்பற்ற ஞானி ' சமர்த்த ராமதாசர் '. மராட்டிய மண்ணில் கி . பி . 1608- ல் ' நாராயணன் ' என்ற பெயரில் அவதரித்த இவர் , பின்னாளில் இந்து தர்மத்தைக் காத்த சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் ஆன்மீக மற்றும் அரசியல் குருவாகத் திகழ்ந்தார் . சக்தி வாய்ந்த தாரக மந்திரம் மற்றும் ஸ்லோகம் : சமர்த்த ராமதாசர் உலகிற்கு வழங்கிய ஆகச்சிறந்த பொக்கிஷங்கள் இரண்டு . ஒன்று அவர் 13 கோடி முறை ஜபித்த 13- எழுத்துகள் கொண்ட ' த்ரயோதசாக்ஷரி மந்திரம் ' . மந்திரம் : " ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் " ( இந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்தால் மனதில் உள்ள தேவையற்ற பயங்கள் நீங்கி , மாபெரும் தைரியம் பிறக்கும் ). அடுத்ததாக , மனித மனதைக் கட்டுப்படுத்த அவர் இயற்றிய உலகப் புகழ்பெற்ற " மனாசே ...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status