உடல் சமநிலையையும் மன உறுதியையும் தரும் 'விருக்ஷாசனம்'! ஆரோக்கியத்தில் ஒரு துளி... ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... இந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலும் படிக்கலாம் . Please click here to read the Article in English... பிரிவு : யோகாசன குறிப்புகள் {Yoga Tips} நமது சனாதன தர்மத்தில் , இயற்கையோடு இயைந்து வாழ்வதே யோகக்கலை . ஒரு மரம் எப்படி புயலிலும் மழையிலும் தன் வேர்களை உறுதியாகப் பிடித்துக்கொண்டு அசையாமல் நிற்கிறதோ , அதே போன்ற உடல் உறுதியையும் மன உறுதியையும் நமக்குத் தரும் ஒரு அற்புதமான ஆசனம் தான் ' விருக்ஷாசனம் ' {Vrikshasana} . ' விருக்ஷம் ' என்றால் சமஸ்கிருதத்தில் ' மரம் ' என்று பொருள் . பண்டைய காலத்தில் முனிவர்கள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வதை புராணங்களில் படித்திருப்போம் . குறிப்பாக , கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலான தன் முன்னோர்களின் சாபம் நீங்கவும் , அவர்களுக்கு பிராயச்சித்தம் { முக்தி } கிடைக்கவும் , கங்கை நதியை பூமிக்குக் கொண்டுவர பகீரதன் மேற்க...
சமர்த்த ராமதாசர் சத்ரபதி சிவாஜியை உருவாக்கிய மாபெரும் குரு ! பாரத தேசத்தின் ஆன்மீக வரலாற்றில் , வெறும் பக்தி மார்க்கத்தை மட்டும் போதிக்காமல் , தேச பக்தியையும் , உடல் வலிமையையும் (Shakti and Bhakti) சேர்த்தே போதித்த ஒப்பற்ற ஞானி ' சமர்த்த ராமதாசர் '. மராட்டிய மண்ணில் கி . பி . 1608- ல் ' நாராயணன் ' என்ற பெயரில் அவதரித்த இவர் , பின்னாளில் இந்து தர்மத்தைக் காத்த சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் ஆன்மீக மற்றும் அரசியல் குருவாகத் திகழ்ந்தார் . சக்தி வாய்ந்த தாரக மந்திரம் மற்றும் ஸ்லோகம் : சமர்த்த ராமதாசர் உலகிற்கு வழங்கிய ஆகச்சிறந்த பொக்கிஷங்கள் இரண்டு . ஒன்று அவர் 13 கோடி முறை ஜபித்த 13- எழுத்துகள் கொண்ட ' த்ரயோதசாக்ஷரி மந்திரம் ' . மந்திரம் : " ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் " ( இந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்தால் மனதில் உள்ள தேவையற்ற பயங்கள் நீங்கி , மாபெரும் தைரியம் பிறக்கும் ). அடுத்ததாக , மனித மனதைக் கட்டுப்படுத்த அவர் இயற்றிய உலகப் புகழ்பெற்ற " மனாசே ...

