Skip to main content

Posts

Showing posts from April, 2020

ஆலயமும், ஆஸ்பத்திரியும்... மஹா பெரியவா பார்வையில்...

ஆலயமும், ஆஸ்பத்திரியும்... மஹா பெரியவா பார்வையில்...  எப்பொழுதும் ஏதாவது ஒரு வினாவிற்கு விடை தேடும் பொழுது, முதலில் காஞ்சி மஹா பெரியவா உரையில் இருந்து தேடுவது தான் இந்த சிறியவனின் வழக்கம். தற்பொழுது கூட பல்வேறு புத்திசாலித்தனமான விளக்கங்கள் ஆலயத்தைப் பற்றியும், ஆஸ்பத்திரி  பற்றி யும் வருவதைப் பார்க்க முடிந்தது. ஆலயத்தேவை மற்றும்  ஆஸ்பத்திரி தேவை பற்றி அற்புதமான  விளக்கத்தை 'தெய்வத்தின் குரலி ல்'  இருந்து இங்கு பதிவிடுகிறோம். ஆலயமும், ஆஸ்பத்திரியும்: "மனிதர்களுக்குச் சேவை செய்வதே பகவானுக்குச் செய்கிற பூஜை. தனியாக பகவத் தியானம், பூஜை எதுவும் வேண்டாம்" என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கோயில்கள் முதலிய வழிபாட்டிடங்கள் வேண்டியதில்லை என்றும், அவற்றை வைத்தியசாலைகளாகவும் பள்ளிக்கூடங்களாகவும் மாற்றிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். மனிதர்களுக்கு ஆறுதல் தருவது, நோய்ப்பிணி போக்குவது, கல்வியறிவு தருவது எல்லாம் பரம உத்தமமான பணிதான். அதில் பகவான் நிச்சயமாக ப்ரீதி அடைகிறான் என்பதும் ரொம்ப உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது மனித சேவையே பகவத் ச

பாக்யசாலியாக மாற்றும் 'வருத்தினி ஏகாதசி' விரத மகிமை...

'வருத்தினி ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'வைஷாக மாதம்',  ( April / May  )   தேய்   பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "வருத்தினி  ஏகாதசி"  ( Varuthini Ekadasi )   என்று  அழைக்கப்   படுகின்றது.  வருத்தினி ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர  புராண' விளக்கம்:  ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஹே, ஸ்ரீ கிருஷ்ணா,  வைஷாக  மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார்.  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ அரசர்களில் சிறந்தவனே,  வைஷாக மாத தேய் பிறையில்  வரும் ஏகாதசி 'வருத்தினி ஏகாதசி' என்று அழைக்கப்படும். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் இந்த ஜென்மம் மட்டுமல்லாது அடுத்த ஜென்மாவிலும் சகல சௌபாக்கியங்களையும் பெறுவர். இதனை கடைபிடிக்கும் ஒரு துர்பாக

காமதா ஏகாதசி பற்றி 'வராஹ புராண' விளக்கம்...

'காமதா ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'சைத்ர மாதம்',  ( March/April )   வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "காமதா ஏகாதசி"  ( Kamadha  Ekadasi )  என்று  அழைக்கப்   படுகின்றது.  காமதா ஏகாதசி பற்றி 'வராஹ  புராண' விளக்கம்:  ஸ்ரீ கிருஷ்ணரிடம், யுதிஷ்டிர மஹராஜ் கேட்கிறார்...ஓ பரந்தாமா, வாஸுதேவா,  சைத்ர  மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விவரியுங்கள் என்று கேட்கிறார்.  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார்; ஓ அரசர்களில் சிறந்தவனே,  சைத்ர மாத வளர்பிறையில்  வரும் ஏகாதசி 'காமதா ஏகாதசி' என்று அழைக்கப்படும். முன்னர்,  'வசிஷ்ட மகரிஷி',    இராமபிரானின் மூதாதையர்களில் ஒருவரான மன்னர்  திலீபனுக்கு, எடுத்துக்  கூறிய பெருமைகளை, இப்பொழுது நான்  உனக்கு கூறுகிறேன் கேள் என்று ஸ்ரீ