Skip to main content

அக்ஷய திருதியை - செய்ய வேண்டிய முக்கிய தானங்களும் அவற்றின் பலன்களும்...

அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டிய முக்கிய தானங்களும் அவற்றின் பலன்களும்...

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

ஹரி ஓம்! வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அக்ஷய திருதியை நன்னாளின் மகிமையையும், அன்று செய்யப்படும் தானங்களின் பலன்களையும் காண்போம்.

அக்ஷய திருதியை (சித்திரை மாத வளர்பிறை திருதியை திதி) என்பது இந்து தர்மத்தில் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். 'அக்ஷய' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு 'அழியாதது' (அ) 'என்றென்றும் குறையாதது' என்று பொருள். இந்த நன்னாளில் நாம் செய்யும் நற்செயல்களும், புண்ணிய காரியங்களும் பல மடங்கு பெருகி, தலைமுறைகளுக்கும் நற்பலன்களைத் தரும் என்பது சாஸ்திரப் பிரமாணம்.

சாஸ்திர குறிப்பு:

முழுமையான சமஸ்கிருத ஸ்லோகம்:

यत्किञ्चिद्दीयते दानं स्वल्पं वा यदि वा बहु

तत्सर्वमक्षयं यस्मात्तेनेयमक्षया स्मृता ।।

தமிழ் உச்சரிப்பு:

யத்கிஞ்சித் தீயதே தானம் ஸ்வல்பம் வா யதி வா பஹு |

தத்ஸர்வமக்ஷயம் யஸ்மாத் தேனேயமக்ஷயா ஸ்ம்ருதா ||

பொருள்:

இந்த நன்னாளில் (அக்ஷய திருதியை அன்று) ஒருவர் மிகச் சிறிதளவு தானம் செய்தாலும் சரி, அல்லது பெரிய அளவில் தானம் செய்தாலும் சரி... அது எதுவாயினும் அதன் புண்ணியம் 'அக்ஷயமாக' (அழியாத் தன்மையோடு பன்மடங்கு பெருகி) என்றென்றும் நிலைத்திருக்கும். இதனாலேயே இந்தத் திதிக்கு "அக்ஷய திருதியை" என்று பெயர் வந்தது.

மேலும், ஸ்காந்த புராணத்தின் படி, கோடைகாலத்தின் தொடக்கமான இந்த வைசாக/சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் பொருட்களைத் தானம் செய்வது பித்ருக்களின் (முன்னோர்கள்) ஆசியையும், பகவானின் அருளையும் ஒருங்கே பெற்றுத் தரும்.


அன்பர்களே, இந்த அட்சய திருதியை நாளில் வெறும் லௌகீகமான பொருட்களைத் தேடாமல், முன்னோர்களை வணங்கி, இயன்ற தானம் செய்து, ஆதி சங்கரர் மற்றும் குபேரனின் அருளால் அக்ஷயமான புண்ணியத்தைச் சேர்ப்போம்.

சாஸ்திரங்களில் பல்வேறு வகையான தானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரத்தியேக பலன் உண்டு...

1. ஜல தானம் மற்றும் கும்ப தானம் (தண்ணீர் தானம்) :

  • முறை: மண்பானையில் சுத்தமான நீர், நீர்மோர் அல்லது பானகம் நிரப்பி தாகத்தால் வாடுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்குதல்.
  • பலன்: இது பித்ருக்களின் (முன்னோர்களின்) தாகத்தைத் தணித்து, அவர்களின் பரிபூர்ண ஆசியைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் மன அமைதியும், வம்ச விருத்தியும் உண்டாகும். பிரம்மஹத்தி தோஷம் போன்ற பாவங்கள் நீங்கும்.

2. அன்ன தானம் (உணவு தானம்) :

  • சிறப்பு: "அன்னதானம் மஹா தானம்". உலகிலேயே மிகச் சிறந்த தானம் அன்னதானம் ஆகும்.
  • பலன்: அகால மரண பயம் நீங்கும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் எவ்வித தட்டுப்பாடும் இல்லாத நிறைவான நிலை கிட்டும். புண்ணிய லோகப் பிராப்தி கிடைக்கும்.

3. வஸ்திர தானம் (ஆடை தானம்) :

  • முறை: வறியவர்கள் மற்றும் முதியவர்களுக்குப் புதிய ஆடைகளை (வேஷ்டி, புடவை, துண்டு) வழங்குதல்.
  • பலன்: கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆரோக்கியமும், தீர்க்காயுளும் உண்டாகும். சமுதாயத்தில் கௌரவமும் மரியாதையும் அதிகரிக்கும்.

4. குடை தானம் :

  • சிறப்பு: வெயிலின் தாக்கத்திலிருந்து ஒருவரைக் காப்பது.
  • பலன்: வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத தடைகள், கஷ்டங்கள் மற்றும் விபத்துகள் விலகும். ஜீவன் முக்தி அடையும் போது, பரலோகப் பயணத்தில் இந்தத் தானம் நிழல் தந்து காக்கும் என்பது கருட புராண நம்பிக்கை.

5. விசிறி தானம் (பனை ஓலை விசிறி) :

  • பலன்: கோடை வெயிலுக்கு இதமாக பனை ஓலை விசிறியைத் தானம் செய்வதால், வாழ்வில் உள்ள துன்பங்கள் மற்றும் தடைகள் காற்றைப் போல விலகி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

6. காலணி தானம் :

  • பலன்: பாதணிகள் (செருப்பு) தானம் செய்வதால், நரக வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். செய்யும் பயணங்களில் பாதுகாப்பும் வெற்றியும் கிட்டும்.

7. பழங்கள் மற்றும் காய்கறிகள் தானம் :

  • பலன்: மா, பலா, வாழை போன்ற கனிகளைத் தானம் செய்வதால், செய்யும் காரியங்களில் வெற்றியும், உயர் பதவிகளும் தேடி வரும்.

8. சொர்ண தானம் மற்றும் கோ தானம் (தங்கம் மற்றும் பசு தானம்) :

  • பலன்: தங்கம் அல்லது வெள்ளி தானம் செய்வதால் வறுமை நீங்கி, மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் பரிபூர்ணமாகக் கிடைக்கும். சாதுக்களுக்கும், வேத விற்பன்னர்களுக்கும் பசுவைத் (கோ தானம்) தானமாக அளித்தால், சகல பாவங்களும் நசித்து, குடும்பத்திற்கு முக்தி (மோக்ஷம்) கிடைக்கும் என்பது வேத வாக்கு.

அன்று சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள்: (11 முறை)

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம் (செல்வம் பெருக):

"ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ"

ஸ்ரீ குபேர மந்திரம் (செல்வம் நிலைத்து நிற்க):

"ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தனதான்யாதிபதயே
தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா"

ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்லோகம் (உணவு மற்றும் தானியம் செழித்திருக்க):

"அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி பார்வதி ||"

இன்று பொன்மழை பொழிந்த கனகதாரா ஸ்தோத்ரம் இசைக்க தவறாதீர்கள்... 

பகவான் ஆடம்பரத்தை விட, அகங்காரமில்லாத அன்பான அர்ப்பணிப்பையே விரும்புகிறார். தங்கம் வாங்க வசதி இருப்பவர்கள் தாராளமாக வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்க முடியவில்லையே என்று எந்தவொரு சாமானியரும் வருத்தப்படக் கூடாது. அன்றைய தினம் உங்களால் முடிந்த ஒரு சிறிய அன்னதானமோ, தாகத்திற்கு ஒரு குவளை நீரோ, அல்லது வாயில்லா ஜீவன்களுக்கு உணவோ அளித்தால், பல கிலோ தங்கம் வாங்குவதை விட அளவற்ற புண்ணியத்தையும், இறைவனின் ஆசியையும் அது பெற்றுத் தரும் என்பதே வேதத்தின் சாரம்! 

சிறு குறிப்பு: தானம் செய்யும்போது பொருள் அல்லது அளவை விட, மனத் தூய்மையும், அகங்காரம் இல்லாத அர்ப்பணிப்பு உணர்வுமே (சிரத்தை) மிக முக்கியமானது. "பகவானே எல்லாவற்றையும் கொடுக்கிறார், அவர் கொடுத்ததை நான் பிறருக்குப் பகிர்ந்தளிக்கிறேன்" என்ற எண்ணத்தோடு அக்ஷய திருதியையன்று நம்மால் இயன்ற தானத்தைச் செய்து, இறைவனின் திருவருளையும், முன்னோர்களின் ஆசியையும் பெற்றிடுவோம்... 

-----------------------------------------------------------------------------------------------------------------------------

Akshaya Tritiya: Key Charities to Perform and Their Benefits:

Let us explore the glory of Akshaya Tritiya as mentioned in the Vedic Shastras and the specific benefits of the charities performed on this auspicious day.

Akshaya Tritiya (the third lunar day of the bright fortnight in the month of Chithirai) is one of the most sacred days in Hindu Dharma. The Sanskrit word 'Akshaya' means 'imperishable' or 'that which never diminishes.' It is a scriptural certainty that the good deeds and meritorious acts (punya) performed on this day multiply manifold and bring auspicious results for generations.

Scriptural Reference:

Sanskrit Sloka:

Yatkinchid diyate danam svalpam va yadi va bahu |

Tatsarvamakshayam yasmatteneyamakshaya smrta ||

Meaning:

On this auspicious day, whether one performs a very small act of charity or a large one, the resulting merit (punya) becomes "Akshaya"—remaining eternal and multiplying infinitely. For this reason, this lunar day is known as "Akshaya Tritiya."

 

Furthermore, according to the Skanda Purana, donating items that alleviate the heat during this month (Vaisakha/Chithirai), which marks the beginning of summer, grants both the blessings of one's ancestors (Pitrus) and the grace of the Almighty.


1. Jala Dhanam and Kumbha Dhanam (Donation of Water):

 Method: Filling a clay pot with clean water, buttermilk, or panakam (jaggery water) and offering it to the thirsty and the needy.

 Benefit: This quenches the thirst of ancestors and secures their complete blessings. It brings peace of mind to the family and ensures the growth of the lineage (Vamsa Vriddhi). Sins like Brahmahatthi Dosha are removed.

 

2. Anna Dhanam (Donation of Food):

 Significance: "Anna dhanam is Maha dhanam." It is considered the greatest form of charity in the world.

 Benefit: Removes the fear of untimely death. It grants long life, health, and a life of abundance without any scarcity. It helps in attaining Punya Loka.

 

3. Vastra Dhanam (Donation of Clothes):

 Method: Offering new clothes (Veshti, Saree, or towels) to the poor and the elderly.

 Benefit: Provides protection from severe diseases. It ensures health and longevity while increasing one's honor and respect in society.

 

4. Kudai Dhanam (Donation of Umbrellas):

 Significance: Protecting someone from the intensity of the sun.

 Benefit: Unexpected obstacles, hardships, and accidents in life will be removed. According to the Garuda Purana, this charity provides shade and protection during the soul’s journey after life.

 

5. Vishari Dhanam (Donation of Palm Leaf Fans):

 Benefit: Donating a palm leaf fan to provide relief from the summer heat causes sorrows and obstacles to blow away like the wind, ushering in all types of prosperity (Soubhagya).

 

6. Kaalani Dhanam (Donation of Footwear):

 Benefit: Donating slippers or footwear grants liberation from the miseries of Naraka. It ensures safety and success during one’s travels.

 

7. Fruits and Vegetables Dhanam:

 Benefit: Donating fruits like mango, jackfruit, and banana leads to success in all endeavors and brings opportunities for high positions.

 

8. Swarna Dhanam and Go Dhanam (Donation of Gold and Cows):

 Benefit: Donating gold or silver removes poverty and invites the complete grace of Goddess Mahalakshmi. Offering a cow to noble people or caring for them in a Goshala yields the merit of performing a great Yagna.

On this Akshaya Tritiya, let us not merely seek material possessions. Instead, let us worship our ancestors, perform charity according to our means, and accumulate "Akshaya Punya" through the grace of Adi Shankara and Lord Kubera.


...இது போன்ற முக்கியமான தகவல்கள் மட்டும் அறிய நமது "ஒரு துளி ஆன்மீகம்" Whatsapp குழுவில் இணைய...புதியவர்களுக்கு மட்டும்....(Only Admin Post) 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 

...நமது Youtube Channel ஐ Subscribe செய்யுங்கள்... முக்கியமான தகவல்கள் வீடியோ வடிவில் இலவசமாக உங்கள் மொபைலுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடும்... 

இதோ இங்கு கிளிக் செய்யுங்கள்... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.

#AkshayaTrithiyai
#TruthiyaiDhaanam
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha
#ஒருதுளிஆன்மீகம்
#ota 

Protected by Copyscape 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status