Skip to main content

உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உணவின் தன்மைகள் குறித்து சத்குரு அவர்களின் விளக்கம்... 

உங்களது உடல் எந்தவிதமான உணவிலிருந்து, ஊட்டம் பெறுவதற்குப் போராடாமல், அதிகமான தளர்வு நிலையில் இருக்கிறதோ அந்தவிதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும். உங்கள் வியாபாரத்தை சரிவரச் செய்யவேண்டும் என்றாலோ அல்லது ஒழுங்காக கல்வி பயிலவேண்டும் என்றாலோ அல்லது எந்தவொரு செயலையும் சரியாக செய்யவேண்டும் என்றாலோ, உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகமிக முக்கியமானது. 

ஒரு சைவ உணவாளராக மாறுவது எப்படி ?

உங்கள் உடலுக்குள் செல்லும் உணவின் தரத்தைப் பொறுத்தவகையில், அசைவ உணவைக்காட்டிலும் சைவ உணவானது நிச்சயமாக உடலமைப்புக்கு மிகவும் மேலானது. தாவர உணவை அதன் உயிரோட்டமான தன்மையில் நீங்கள் சாப்பிடும்போது, அது எவ்வளவு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். பச்சையாக, சமைக்கப்படாத நிலையில் சாப்பிடக்கூடியது என்னவாக இருந்தாலும், முடிந்த அளவுக்கு உயிரோட்டமான உணவைச் சாப்பிடவேண்டும் என்பதே இதன் நோக்கம். 

ஒரு உயிரோட்டமான அணு, உயிரை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு உயிரோட்டமான அணுவை உட்கொண்டால், உங்கள் உடலமைப்பின் ஆரோக்கியம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். நாம் உணவைச் சமைக்கும்போது, அதிலிருக்கும் உயிர்த்தன்மையை அழித்துவிடுகிறோம். இந்த அழிவுச் செயல்முறைக்குப் பிறகு உணவைச் சாப்பிடுவது, அதே அளவுக்கான உயிர்சக்தியை உடலுக்கு வழங்குவதில்லை. ஆனால் உயிரோட்டமான உணவை நீங்கள் சாப்பிடும்போது, அது வித்தியாசமான நிலையில் உங்களுக்குள் உயிர்த்தன்மையை கொண்டுவருகிறது. உயிரோட்டமான முறையில் சாப்பிடக்கூடிய முளைகட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் காய்களை ஒருவர் தன் உணவில் குறைந்தபட்சம் முப்பதிலிருந்து நாற்பது சதவிகிதம் ஆக்கிக்கொண்டால், அது உங்களுக்குள் இருக்கும் உயிரை மிக நன்றாக உறுதிப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.


அனைத்தையும்விட, நீங்கள் சாப்பிடும் உணவும் உயிரின் வேறொரு வடிவமாகத்தான் இருக்கிறது. நாம் உயிர்வாழ, பிற உயிர் வடிவங்கள், அவைகளுடைய உயிரை விட்டுக்கொடுக்கின்றன. அவைகள் அனைத்திற்கும் மிகுந்த நன்றியுணர்வுடன் நாம் உண்டால், அந்த உணவு உங்கள் உடலில் முற்றிலும் வித்தியாசமாக செயல்படும்.


தாவர உணவு – மாமிச உணவு :

கே) சத்குரு, நான் ஒரு உணவுப் பிரியர். நான் நன்றாக உணரும் பட்சத்தில் அசைவ உணவைச் சாப்பிடுவது சரிதானா?


சத்குரு: நீங்கள் ஒரு தாவரத்தைச் சாப்பிட்டாலும் அல்லது ஒரு விலங்கைச் சாப்பிட்டாலும், அது வன்முறைதான். தாவரங்கள் நம்மைப்போல் உணர்வுள்ளவைதான் என்று காட்டுவதற்கு இன்றைக்கு தகுந்த ஆவணம் இருக்கிறது. அவைகள் வலியினால் வீரிடுவதைக் காட்டுவதற்கு போதிய சான்று இருக்கிறது.


உங்களுடைய காதுகளுக்கு அது கேட்பதில்லை, அவ்வளவுதான். மரங்களுக்கிடையே இது நிகழ்கிறது. இங்கு ஆயிரம் அல்லது பத்தாயிரம் மரங்கள் இருப்பதாகவும், ஒரு யானை வந்து ஒரு மரத்தின் இலைகளை சாப்பிடத் தொடங்கியது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த குறிப்பிட்ட மரமானது, தனது இனத்தின் மற்ற எல்லா மரங்களுக்கும், தான் சாப்பிடப்படும் செய்தியை உடனடியாக அனுப்பிவிடும். சில நிமிடங்களில், யானை மற்ற மரங்களிடம் சென்றால், எல்லா மரங்களும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான விஷத்தன்மையை தனது இலைகளில் உற்பத்தி செய்திருக்கும். யானை இலைகளைச் சாப்பிடுவதற்கு முயற்சிக்கும்போது, அவைகளின் கசப்பின் காரணமாக, அந்த இலைகளைச் சாப்பிடாது. அந்த அளவுக்கு அவைகள் உணர்வு மிகுந்தவை.


ஒரு உணவுப் பிரியர் என்று உங்களையே அழைத்துக்கொள்ளாதீர்கள், ஏனென்றால் உணவு ஒருபோதும் அடையாளமாகக்கூடாது.

நீங்கள் ஒரு பழம் அல்லது ஒரு காயைப் பறித்தாலும் அல்லது ஒரு விலங்கை வெட்டிச் சாப்பிட்டாலும், எல்லாமே கொடூரம்தான். அதை நாம் சிறிது மென்மையுடன், தேவையான அளவுக்கு மட்டும் செய்யவேண்டியது அவசியம். ஒரு உணவுப் பிரியராக இருக்கும் இந்தக் கருத்தை நீங்கள் விலக்கவேண்டும். நாம் அனைவரும் உணவு சாப்பிடவேண்டும்; இல்லையென்றால் நமது உடலுக்கு அது துன்பமாகிவிடும். ஆனால் உணவுடன் அடையாளம்கொள்வது சரியல்ல. ஏனெனில் நமக்கே நாம் ஊட்டமளிப்பதுடன் நிற்காமல், மேன்மேலும் அதிலேயே திளைத்துக்கொண்டே இருப்போம் என்பதே அதன் பொருள். 

ஒரு உயிராக நமக்கே ஊட்டமளித்துக்கொள்ளும் உரிமை நமக்கு உண்டு – உலகத்தின் உணவுச் சங்கிலி அப்படித்தான் இருக்கிறது - ஆனால் அனுபவிப்பதற்காக மட்டும் வலுக்கட்டாயமாக மற்றொரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை. அதை செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை. இந்த உயிரை வளர்க்கும் உரிமை நமக்கு உண்டு, ஆனால் மகிழ்ச்சிக்காக மற்றொரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை. ஒரு உணவுப் பிரியர் என்று உங்களையே அழைத்துக்கொள்ளாதீர்கள், ஏனென்றால் உணவு ஒருபோதும் அடையாளமாகக்கூடாது. இந்தக் கணம் பிழைத்திருக்கவும், ஊட்டச்சத்து பெறவும் நாம் என்ன சாப்பிடவேண்டி இருந்தாலும், அதைச் சாப்பிடுவோம்.

உணவுக்கும், மன ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு:

கே) நம்முடைய மன நிலை, உணர்ச்சி நிலை, மன ஆரோக்கியம் இவற்றுக்கும், நாம் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு இருக்கிறதா? பொதுவாக, நமது மனம் மற்றும் உடல் இவற்றுக்கு இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?


சத்குரு: மனதையும், உடலையும் இரண்டு வெவ்வேறு விஷயங்களாக யோக முறை கருதுவதில்லை. பொதுவாக மனம் என்று நாம் குறிப்பிடுவது, ஒரு குறிப்பிட்ட அளவு ஞாபகம் மற்றும் புத்திசாலித்தனம்தான். உங்கள் மூளை என்பது உங்களுடைய உடலின் ஒரு பகுதி. மூளையானது எண்ணப்போக்கைக் கையாளும் காரணத்தால், பொதுவாக மக்கள் மூளைதான் எல்லாமாக இருக்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால் மூளைக்கும், எஞ்சிய உடலுக்கும் இடையில் பார்த்தால், எதற்கு அதிகமான ஞாபகமும் புத்திசாலித்தனமும் இருக்கிறது? 

நீங்கள் கவனமாகப் பார்த்தால், உங்களது உடலின் ஞாபகம் இலட்சக்கணக்கான வருடங்கள் பின்னோக்கிச் செல்கிறது. உங்களுடைய முப்பாட்டன்கள் எப்படி இருந்தனர் என்பதை அது தெளிவாக நினைவில் வைத்திருக்கிறது. அந்த அளவுக்கான ஞாபகம் மனதிற்கு இல்லை. 

புத்திசாலித்தனம் என்று வரும்போதும், மரபணுவின் ஒரே ஒரு செல்லில் என்ன நிகழ்கிறது என்பதைக்கூட, உங்களுடைய ஒட்டுமொத்த மூளையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, அது அவ்வளவு சிக்கலாக இருக்கிறது. யோக முறையில், உடலெங்கும் ஓடுகின்ற புத்திசாலித்தனம் மற்றும் ஞாபகமாக பரு உடல் என்பதும் மனோ உடல் என்பதும் இருக்கிறது.

புத்திசாலித்தனம் என்று வரும்போதும், மரபணுவின் ஒரே ஒரு செல்லில் என்ன நிகழ்கிறது என்பதைக்கூட, உங்களுடைய ஒட்டுமொத்த மூளையும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, அது அவ்வளவு சிக்கலாக இருக்கிறது.


மேற்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள், தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் மன அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். நாம் சாப்பிடும் உணவின் இயல்பு மனதின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சராசரி அமெரிக்கர், ஒவ்வொரு வருடமும் சுமார் 90 கிலோ மாமிசம் சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது. அதை 22 கிலோக்களாகக் குறைத்துவிட்டால், 75% மக்களுக்கு அதற்குப்பிறகு மன அழுத்த நோய்க்கான மருந்து தேவைப்படாது என்றே நான் கூறுவேன்.

நீங்கள் பாலைவனத்திலோ அல்லது காட்டிலோ இருக்க நேர்ந்தால், மாமிசமானது பிழைத்திருப்பதற்கான ஒரு நல்ல உணவு. நீங்கள் எங்காவது வழிதவறிவிட்டால், ஒரு துண்டு மாமிசம் உங்களைப் பிழைத்திருக்கச் செய்யும், ஏனென்றால் அது திடமான ஊட்டமளிக்கிறது. ஆனால் மற்ற உணவு வகைகள் இருக்கும்போது, அது தினசரி உணவாக இருக்கக்கூடாது.


இதனை நாம் பல வழிகளில் பார்க்க முடியும். இதன் ஒரு அம்சம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு தந்திரமாகவும், அறிவியல்பூர்வமாகவும் அதைச் செய்தாலும், தாம் கொல்லப்படப் போகிறோம் என்பதை கடைசி சில கணங்களில் அறிந்துகொள்வதற்கான புத்திசாலித்தனம் விலங்குகளுக்கு உண்டு. சில விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்ட எந்த ஒரு விலங்கும், அது கொல்லப்படப் போகும்போது எப்போதும் அதை கிரகித்துவிடுகிறது. 

இந்த நாளின் முடிவில், நீங்கள் வெட்டப்படப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் அனுபவிக்கவிருக்கும் போராட்டம் மற்றும் உங்களுக்குள் வெடித்துக் கிளம்பும் இரசாயன எதிர்வினைகளை கற்பனை செய்து பாருங்கள். அதில் குறைந்தபட்சம் சிறிதளவாவது ஒரு விலங்கு அனுபவிக்கிறது. 

நீங்கள் ஒரு விலங்கைக் கொல்லும்போது, எதிர்மறை அமிலங்களும், மற்ற இரசாயனங்களும் அந்த மாமிசத்தில் இருக்கிறது என்பது இதன் பொருள். அந்த மாமிசத்தை நீங்கள் சாப்பிடும்போது, அது உங்களுக்குள் தேவையற்ற உளவியல் மாறுபாடுகளின் நிலையை உருவாக்குகிறது.


உளவியல்ரீதியான நோய்களுக்கு ஆளாகியுள்ள பெரும்பாலானவர்களுக்கு, நோய்க்கான மூலக் காரணம் மனதில் இல்லை, அது பழக்கத்தினால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தின் அடிப்படையான கட்டமைப்புக்குள் எப்படியோ அதை நாம் வளர்த்தெடுக்கிறோம். இதைத் தவிர, வேறு எதனாலும் அவ்வளவு பெரும் மக்கள் சதவிகிதத்தினர் உளவியல்ரீதியாக நோய்வாய்ப்பட முடியாது.


மன அழுத்த நோய்க்கான மருந்து எடுக்கும் மக்களுக்கு நீங்கள் தாவர உணவு வழங்கினால், சுமார் மூன்று மாத காலங்களில், அவர்களில் பலருக்கு அதற்குமேல் மருந்து தேவைப்படாது. ஈஷா யோக மையத்துக்கு வந்திருந்த பல மக்களிடம் இதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சரியானவைகளைத் தேர்வு செய்வது:

அமெரிக்காவில் காணப்படும் புகைத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தைப்போல, உணவுக்காக ஒரு திறன்மிகுந்த பிரச்சாரம் நமக்குத் தேவை என்று நான் என்ணுகிறேன். எழுபதுகளில், அமெரிக்காவில் எந்தப் பொது இடத்திலும் புகை மண்டலத்துக்கு இடையில்தான் நீங்கள் நடந்து செல்லவேண்டியிருந்தது. 

அப்போதுதான் அவர்கள் காற்றைச் சுத்தப்படுத்திய ஒரு வெற்றிகரமான பிரச்சாரத்தை செயல்படுத்தினார்கள். இன்றைக்கு, புகைப்படலம் குறுக்கிடாமல் ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நீங்கள் செல்லமுடியும். ஆனாலும், அருந்துகின்ற பானத்தில் கரியமிலவாயு இருக்கத்தான் செய்கிறது! 

ஒரு காலத்தில் நிறைய பேருக்கு புகைப்பது தேவையாக மட்டுமில்லாமல், அது ஒரு நாகரீகமாக இருந்தது. அடுத்தவரின் முகத்தில் புகை விடுவது சரியான விஷயமாக இருந்தது. சரியான முறையிலான பிரச்சாரத்தினால், ஒரு தலைமுறை காலத்திற்குள், இந்தச் சூழ்நிலை முற்றிலுமாக மாறியுள்ளது. அதைப் போன்றதொரு வெற்றிகரமான பிரச்சாரம், நாம் என்ன சாப்பிடுவது மற்றும் என்ன அருந்துவது என்பதற்கும் தேவைப்படுகிறது.

கீழே உள்ள Comments பகுதி மூலம், உங்கள் எண்ணங்களையும்  தெரியப்படுத்துங்கள்... 

...ஓம் நம ஷிவாய... ...ஹரி ஓம்...

லோகா ஸமஸ்தா ஸுகிநோ பவந்து

...ஒரு துளி ஆன்மீக ஸேவையில்...
...தாமிரா தர்ம ரக்ஷண ஸபா...
        தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
             திருநெல்வேலி.


#CorrectFood
#Sadhguru
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha 

Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த