Skip to main content

குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை...

'கடும் நோய் தீர்க்கும் யோகினி ஏகாதசி' விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 



'ஆஷாத' (Ashadha) மாதம், (June / July) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "யோகினி ஏகாதசி" (அ) ஆஷாத கிருஷ்ண பட்ச ஏகாதசி (Yogini Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

யோகினி ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராண' விளக்கம்: 
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, ஓ மதுசூதனா, ஜேஷ்ட மாதத்தில் வரக்கூடிய 'நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை பற்றி எமது பாட்டனாரும், ரிஷிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாஸதேவரிடம் கேட்டு அறிந்தோம். அதன் பிறகு, ஆஷாத  மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக கேட்டு அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளை கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். 

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

ஓ, அரசர்களில் சிறந்தவனே, 'ஆஷாத மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் 'யோகினி' ஏகாதசி ஆகும். ஒருவரது நரக வாழ்க்கையில் இருந்து மோக்ஷத்தை அளிக்க வல்லது இந்த யோகினி ஏகாதசி, அதன்  மகிமை பற்றி புராணங்களில் உள்ளவற்றை கூறுகிறேன், கேள் என்று கூறி, ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்த உரையை, நாம் இங்கு விவரிக்கின்றோம் ...

'அழகாபுரி' என்ற அற்புத நகரை ஆண்டு வந்தார் யக்ஷர்களின் மன்னரான 'குபேரன்'. இவரே தேவர்களின் செல்வத்திற்கு எல்லாம் அதிபதியாகவும், அவர்களுக்கு எல்லாம் 'பொருளாளராகவும் ' விளங்கி வந்தார். (ஆம், உங்கள் மனதில் எழும் வினா சரி தான்...திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்த அதே 'குபேரன்' தான்...) 

குபேரன் ஒரு மிகச்சிறந்த சிவ பக்தன் ஆவார். தினசரி சிவபூஜை முடிக்காமல் வேறு எந்த வேலையையும் தொடங்க மாட்டார். அந்த அளவுக்கு, அதி தீவிர சிவ பக்தர்... குபேரன், தனது நித்ய சிவ பூஜைக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்து, சரியான முறையில் உதவி புரிவதற்காகவும், மிக முக்கியமாக, தினசரி நந்தவனத்தில் (Flower Garden) இருந்து நறுமணம் மிக்க மலர்களைப் பறித்துக் கொண்டு வருவதற்காகவும், யக்ஷ குலத்தினைச் சேர்ந்த 'ஹேமமாலி' என்ற இளைஞனை பணியில்  வைத்திருந்தார்.  

ஹேமமாலியின் மனைவி பெயர் 'ஸ்வரூபவதி', அவள் பெயருக்கு ஏற்ப  மிகச்சிறந்த பேரழகியாகவும் நீண்ட கருநிறக் கண்களையும் கொண்டவளாக இருந்தாள். ஹேமமாலி தனது மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தான். தினசரி தனது அரண்மனைப் பணிகளை முடித்தவுடன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காது தனது இல்லம் சென்று விடுவான். 

ஹேமமாலியின் மிக முக்கியப் பணியே, தினசரி அதிகாலை 'மானஸரோவர்' ஏரி சென்று அதன் அருகில் பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் இருந்து நறுமணம் மிக்க மலர்களைப் பறித்து வந்து, சிவபெருமானது பூஜைக்காக தனது எஜமானர் குபேரனிடம் கொடுப்பது தான். அதன் பின் பூஜைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைப்பது தான். 


தினசரி, இந்த வேலைகளை எல்லாம் ஒழுங்காக செய்து கொண்டிருந்தான் ஹேமமாலி. 

வழக்கம் போல, அன்று ஒரு நாள் அதிகாலை, மானஸரோவர் ஏரி சென்று நந்தவனத்தில் பூக்களைப் பறித்துவிட்டு, அதனைப்பார்த்த பொழுது, அவனுக்கு பூஜை செய்ய வேண்டிய சிவபெருமான் நினைவு வருவதற்குப் பதிலாக, அவனது மனைவி 'ஸ்வரூபவதி'யின் கண்கள் நினைவுக்கு வந்தது. அவனுள் காம உணர்வு தோன்றியது. உடனே, தனது அரண்மனைக் கடமையை மறந்தான்,  உலகை மறந்தான்,  பூஜைக்காகப்  பறித்த பூக்களுடன் தனது இல்லம் நோக்கி சென்றான். தனது மனைவியுடன், நேரம் போவதே தெரியாமல் மோகத்தில் மூழ்கினான்.

அழகாபுரி அரண்மனையில், வழக்கம் போல, குபேரன், சிவ பூஜைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க; மலர்கள் வரவில்லை, ஆனால், ஹேமமாலி எப்படியும் உரிய நேரத்திற்குள் மலர்களைக் கொண்டு வந்து விடுவான் என்று மனதில் எண்ணியவாறே, மற்ற பூஜைகளை தொடங்கினார் குபேரன். சிவபெருமானுக்கு மற்ற அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் முடிந்தும், மலர்கள் வந்தபாடில்லை. வேறு வழியின்றி, வேறு மலர்களைக் கொண்டு குபேரன் பூஜையை நிறைவு செய்தார். 

இருப்பினும் வழக்கமாக சாற்றக்கூடிய மலர்களை அணிவிக்கவில்லையே என்ற கோபம், குபேரனின் கண்கள் சிவப்பாகும் அளவுக்கு கொப்பளிக்கத் தொடங்கியது. தனது காவலாளிகளை ஏவி விட்டு, ஹேமமாலியை எங்கு இருந்தாலும் உடனே பிடித்து வர உத்தரவிட்டான். நேரம் செல்லச், செல்ல குபேரனின் கோபம் மிக அதிகமாகியது. காவலாளிகள் அவனை நந்தவனம் முழுவதிலும்  தேடி, அங்கு எங்கும் கிடைக்காததால், அதன் பின்பு அவன் வீட்டிற்கு தேடிச்சென்றனர். அங்கு இருப்பதை அறிந்து, அவனிடம், காவலாளிகள்  மன்னர் கோபத்துடன் கட்டளையிட்டு, அவனை  அழைத்து  வரச் சொன்ன தகவலை உரைத்தனர். அதன் பின்பு தான் ஹேமமாலி, மயக்கத்தில் இருந்தவனுக்கு  சுய நினைவு வந்தவன் போல  நடந்ததை உணர்ந்தான். 

ஐயகோ, சிவபூஜைக்குரிய மலர்களைக் கொய்தும் அதனை பூஜையில் சேர்க்காமல், நான் மனைவியின் மேலுள்ள மோகத்தால், இங்கு வந்து விட்டேனே, என்ன நேரப்போகிறதோ? மன்னர் என்ன செய்யப் போகிறாரோ? என்ற அச்சத்துடனேயே  காவலாளிகளுடன் அரண்மனைக்கு சென்றான். 

அவனை, குபேரன் முன்பு கொண்டு போய் நிறுத்தினர் காவலாளிகள். நடுங்கியவாறே நின்ற ஹேமமாலியிடம், கடும் கோபத்துடன் நடந்த நிகழ்வுகளைக்  கேட்டறிந்த குபேரன், மேலும் சினம் கொண்டவராய்...
"ஓ மூடனே, உன் மனைவி மேலுள்ள மோகத்தால், மிக உயர்ந்த சிவபூஜையைக்கூட நீ மறந்து சென்றாய்... இதற்கு தண்டனையாக, உன் உடல் முழுவதும் 'குஷ்ட ரோக' நோய் தொற்றி, நீ யக்ஷ குலத்திலிருந்து  விலகி, காடுகளில் சுற்றி   அவதிப்படக்கடவது" என்று சாபம் அளித்தார்.   

ஹேமமாலி  எவ்வளவோ மன்றாடியும், குபேரன் மன்னிக்க மறுத்து விட்டார், அதனால், அவரது சாபமும் உடனே பலிக்கத்தொடங்கியது. மிக அழகனாக இருந்த 'ஹேமமாலி' உடல் முழுவதும் 'குஷ்ட ரோகம்' ஏற்பட்டு, அழகாபுரி நகரத்திலிருந்து மறைந்து வேறு ஒரு காட்டிற்குள் வந்து விழுந்தான்.  

பின்னர் அந்த, திக்கு தெரியாத காட்டில் உணவின்றி, நீரின்றி பல நாட்கள் அலைந்து, திரிந்து, ஆங்காங்கு  கிடைக்கும் கனிகளையும், இலைகளையும் புசித்து வாழத் தொடங்கினான். தான் செய்த தவற்றை எண்ணி வருந்தியவாறே, ஒவ்வொரு நாளும், கால் போன போக்கில், கானகத்தில் சுற்றினான். 
தினமும் நன்றாக சுகபோக வாழ்வு வாழ்ந்தவன், தற்பொழுது நரக வேதனை கொண்டவனாய், அலைந்து கொண்டிருந்தான்.  
இருப்பினும், பலநாட்கள் அவன் சிவபூஜைக்கு உதவி புரிந்திருந்த காரணத்தால், அவன் சேர்த்திருந்த புண்ணியம், அன்று ஒரு நாள், அவனை ஒரு ஆஸ்ரமத்தின் அருகில் கொண்டு வந்து சேர்த்தது. 
ஆம், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த ஹேமமாலி, அவனை அறியாமலே ஒரு ஆஸ்ரமத்தினை அடைந்திருந்தான். பின்னர், தனது நோயின் நிலையால் சற்றே தள்ளி நின்று, யாருடைய ஆஸ்ரமம், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கவனித்தான். சிறிது நேரத்தில், அது  'மேரு மலையில்' உள்ள ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியின் ஆஸ்ரமம் என்று புரிந்து கொண்டான். 

(மார்க்கண்டேய மகரிஷி, ப்ரம்மாவின் 7 கல்ப வருஷங்கள் வாழக்கூடியவர்.) அவரைக்கண்டதும், சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து, ஆசிர்வதிக்கும் படி வேண்ட, மகரிஷியும், யாரப்பா நீ ? இப்படி ஒரு பொல்லாத நோய் உனக்கு வரும் அளவுக்கு நீ செய்த பாவம் என்ன என்று கேட்டார்?

மகரிஷியிடம், நடந்த விவரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல், மறைக்காமல் கூறி, மேலும் மோகத்தால் தான் செய்த தவறை, தற்பொழுது உணர்ந்து விட்டதாகவும், இனி அதுபோல் ஒரு பிழை தன் வாழ்வில் நேராது என்றும், தான் படும் இந்த வேதனையைத் தீர்க்க ஒரு உபாயம் கூறி அருளுமாறும்,  இரு கரம் கூப்பி வேண்டினான்.

மார்க்கண்டேய மகரிஷி  என்ன உபாயம் கூறினார் ?
மார்க்கண்டேய மகரிஷியும், தனது மனக்கண்ணிலேயே  ஹேமமாலியின் உள்ளத்தில் உள்ளதை உணர்ந்தார், அவன் கூறுவது அனைத்தும் உண்மை என்று அறிந்தார்.  

அதனால், ஹேமமாலியிடம் இரக்கம் கொண்டவராய்; நீ செய்த செயல் பெரும் குற்றம் ஆகும், அதற்கு உண்டான தண்டனையைத் தான், நீ இவ்வளவு காலம் அனுபவித்திருக்கிறாய், இப்பொழுது உனது பூர்வ புண்ய பலன் காரணமாக இங்கு வந்துள்ளாய், இனி இந்த நிலையில் இருந்து வெளிவர, 'ஆஷாத' மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று முழு விரதம் இருந்து பகவான் விஷ்ணுவை வேண்டுவதன் மூலமும், அந்த புண்ய பலன் மூலமும் நீ முழுதுமாக இந்த நோயின் பிடியில் இருந்து விடுபடலாம், உனது பழைய யக்ஷ வாழ்வினையும் அடையலாம் என்று கூறி ஆசி வழங்கினார். 

இதனைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஹேமமாலி, அவருக்கு மீண்டும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவருக்கு நன்றி கூறி ஆஸ்ரமம் விட்டு வெளியே வந்தான். மகரிஷி கூறியபடியே, ஆஷாத மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று முழு நம்பிக்கையுடன் முழு உபவாசம் இருந்து, பகவான் விஷ்ணுவை முழு நேரமும் மனதில் ஜெபம் செய்து அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்து அடுத்த நாள் துவாதசி அன்று தனது விரதத்தை பூர்த்தி செய்தான். 

அந்த புண்ய பலன் காரணமாக, அவனது குஷ்ட ரோக நோய் நீங்கியது, மேலும் அவன் மீண்டும் யக்ஷ குலத்தின் அழகாபுரி நகரை அடைந்து மகிழ்ச்சியான வாழ்வை தொடங்கினான். 

இவ்வாறு, யோகினி ஏகாதசி மகிமையை, யுதிர்ஷ்டிரரிடம் கூறிய ஸ்ரீ கிருஷ்ண பகவான், மேலும் கூறுகையில்; ஹே, அரசர்களில் சிறந்த யுதிர்ஷ்டிரா, "யார் ஒருவர் இந்த யோகினி ஏகாதசியை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் கடைப் பிடிக்கிறார்களோ அவர்களது அனைத்து பாவங்களையும் என் மனதுக்கு ப்ரியமான 'ஏகாதசி தேவி' அழிக்கிறாள். அதன் மூலம் அவர்கள் நல்வாழ்வு பெறுகிறார்கள்" என்று கூறி அருளினார்.

யுதிர்ஷ்ட்ரா, அவ்வாறு இந்த விரதத்தை மிகவும் பக்தி, சிரத்தையுடன் கடைபிடித்தவர்கள், 88,000 அந்தணர்களுக்கு அன்னமிட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த அளவிற்கு புண்ணியத்தினையும் பெறுவார்கள் என்று கூறி அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். 

இவ்வாறு, இதன் பெருமைகளை யுதிர்ஷ்டிரரிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, இந்த 'யோகினி ஏகாதசி' விரத கதையினைப் படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார். 



இவ்வாறு யோகினி ஏகாதசி மகிமை பற்றி "ப்ரம்ம-வைவர்த்த- புராணம்" விளக்குகிறது. 

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'யோகினி ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

Editors Note:

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....  (W03) 

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு:  
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...) 

ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

  1. ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம

    ReplyDelete

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த