Skip to main content

அனைவரின் 'பஞ்சம்' மற்றும் 'வறுமை' நீக்கும் ஸயன ஏகாதசி விரத மகிமை...

'கடும் பஞ்சம் / வறுமை தீர்க்கும் தேவ ஸயனி' ஏகாதசி விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'ஆஷாத' (Ashadha) மாதம், (June / July) வளர் பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "ஸயன ஏகாதசி" (அ) "பத்ம ஏகாதசி" (அ) "தேவஸயனி ஏகாதசி" (அ) "ஆஷாத சுக்ல பட்ச ஏகாதசி" (Sayana Ekadasi / Padma Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

ஸயன ஏகாதசி பற்றி 'பவிஷ்ய உத்தர புராண' விளக்கம்: 
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, கேசவா,  ஆஷாத  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளைக் கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, இதனைப்பற்றி ஒரு முறை நாரத முனி, தனது தந்தையான ப்ரம்ம தேவரிடம் கேட்டுப்பெற்ற விளக்கத்தை உங்கள் ஐவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள் என்று கூறி தொடர்கிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

நாரத முனி, தனது தந்தையாகிய ப்ரம்ம தேவரிடம், ஆஷாட மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி அன்று நான் என்ன செய்ய வேண்டும், யாரைத்தொழ வேண்டும் அதன் மகிமை பற்றி எடுத்துரையுங்கள் தந்தையே என்று கேட்க, ப்ரம்ம தேவரும் மனமகிழ்ந்து, மைந்தா, மானிடர்களின் நன்மைக்காக நீ கேட்ட இந்த ஏகாதசி விரத மகிமை பற்றி கூறுகிறேன் கேள், என்று சொல்லி விளக்குகிறார். 
முன்னர், சத்ய யுகத்தில்,  சூர்ய குலத்தில் தோன்றிய "மந்ததா" எனும் அரசர்களில் சிறந்த, மிகுந்த நேர்மையுடன் கூடிய, வேத நெறிகளை முற்றிலும் கடைபிடிக்கக் கூடிய அரசன் ஒருவன் இருந்தான். அவனது ஆட்சி முறை நேர்மையாகவும், வேத நெறிகள் படி நடந்ததாலும், அவனது நகரம் மிகவும் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருந்தது. மக்கள் செல்வச் செழிப்புடன் இருந்தனர். மன்னரது கஜானாவில், நேர்மையான முறையில் வரி செலுத்திய பொன், பொருள்கள் மட்டுமே இருந்தது. 

அவ்வாறு இருந்த சூழ்நிலையில், என்னவென்றே தெரியாத காரணத்தால், அந்த நகரில் சிறிது சிறிதாக பஞ்சம் ஏற்பட ஆரம்பித்தது. மும்மாரி பொழிந்த அந்த நகரத்தில், தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை பொழியாத அளவு நிலைமை தலைகீழாய் மாறியது. வானம் பொய்த்ததால், பூமி வறண்டது. தானியங்கள் உற்பத்தி குறைந்தது.  மன்னரும் பல்வேறு ஆலோசனைகள் செய்து மந்திரி பெருமக்களுடன் விவாதித்து செய்த நடவடிக்கைகள் பலன் அளிக்காமல் போயிற்று. மக்கள் பஞ்சத்தில் வாட ஆரம்பித்தனர், இதனால், மன்னர் மந்ததா மக்களை நினைத்து மிகுந்த கவலை அடையும் சூழ்நிலை உண்டானது. 

மன்னரும், சிறந்த பக்திமான் என்பதால், அவரது தியானத்தின் மூலம் தான் இழைத்த தவறு பற்றி அறிய முற்பட்ட போது, தன் மேல் எந்த பிழையும் அல்லது பாவமும் இல்லை என்று மட்டுமே உணர முடிந்ததே தவிர சரியான காரணம் புலப்படவில்லை. இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அரண்மனைக்கு வேதம் ஓதும் அந்தணர்கள் ஒரு குழுவாக வந்தனர். அவர்கள், மன்னருக்கு தங்களது மரியாதையை செலுத்தி விட்டு, மன்னரிடம் தங்களது குறையை தெரிவிக்க  ஆரம்பித்தனர்.  மன்னவா, நாட்டில் பஞ்சம் மிக அதிகமாக உள்ளதாலும், குடிக்கக் கூட நீர் இல்லாத சூழ்நிலை நோக்கி நமது நகர் போய்க் கொண்டிருப்பதாலும், நாங்கள் செய்யவேண்டிய நித்ய ஹோமங்கள் செய்து தேவர்களுக்கு செலுத்த வேண்டிய அவிர்பாகத்தை (தானியங்கள் மற்றும் நெய்யுடன் கூடிய ஹோமத்தில் இடப்படும் ஆகுதி) எங்களால் வழங்க இயலவில்லை. இது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மற்றும் முக்கியமாக நாட்டை ஆளும் மன்னருக்கும் நல்லதல்ல என்றனர்.

மேலும் அந்தணர்கள் கூறுகையில்; மன்னவா, நீரை வேதங்களில் 'நாரா' என்று ஒரு சொல் மூலமும் அழைப்பதுண்டு. நீரிலேயே ஸயனித்திருப்பதால், பகவான் விஷ்ணுவை "நாரா யணன்" என்று கூறுகின்றோம். இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும், ஜீவ ராசிகளுக்கும் மிக முக்கிய தேவையே நீர் தான்.   நீரின்றி மூன்று பொருள்கள் இல்லையென்றே சொல்லலாம். முத்துக்கள், மனிதர்கள் மற்றும் தானியங்கள். ஆகவே, மன்னவா, ஒரு தேசத்தில் நீர் இன்றி எந்த விஷயமும் நடைபெறாது, மேலும் ஆட்சி புரியும் மன்னரின் தன்மை பொறுத்தே தேசம் வளம் பெறும். தாங்கள் நல்ல நீதிமானாக இருந்தும் இவ்வாறு பஞ்சம் தேசத்தை பாடாய் படுத்துகிறது என்றால், வேறு என்ன காரணம் என்று கண்டறிய  முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.   

மன்னர் மந்ததா, ஏற்கனவே வேதங்களை மதித்து நடக்கக்கூடியவர் என்பதாலும், அந்தணர்களின் கூற்றில் உள்ள உண்மையை உளமார உணர்ந்ததாலும், அந்தணர்களிடம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே, விரைவில் இதற்கு ஒரு தீர்வு காண்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தார். பின்னர், தனது மந்திரி பிரதானிகளுடன் மற்றும் சில படை வீரர்களையும் அழைத்துக்கொண்டு நகரின் அருகில் உள்ள வனத்திற்கு சென்றார். அங்கு ஏதாவது ஒரு முனிவர் தென்பட்டால் அவரிடம் தனது நிலையை எடுத்துக்கூறி விடை காணலாம் என்று நினைத்து கானகம் முழுவதும் சுற்றித்திரிந்தார். 

அவரது எண்ணம் வீண் போகவில்லை. ஆம், ப்ரம்ம தேவரின் புதல்வர்களில் ஒருவரானவரும், சப்த ரிஷிகளில் ஒருவருமான 'ஆங்கிரஸ' மகரிஷியின் தியானக்குடில், மன்னரின் பார்வையில் பட்டது. ஆங்கிரஸ மகரிஷி மஹா தேஜஸ்வரூபியாக இருந்தார். அந்த இடத்தில் இருந்த அனைத்து அசையும் மற்றும் அசையா வஸ்துக்களும் அவரது எண்ண ஓட்டத்திற்கேற்ப இயங்கிக் கொண்டிருப்பதை மன்னர் மந்ததாவால் உணர முடிந்தது . 

மன்னர் மந்ததா, உடனே மகரிஷி காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அவரது ஆசியை வேண்டினார். மகரிஷியும், மன்னருக்கு ஆசி வழங்கி, நாட்டு நலனை விசாரித்தார். 
அவற்றை முறையே குறிப்பிடும்போது;
மன்னரின் நலம், மந்திரி பிரதானிகளின் நலன், மன்னரது கருவூல செழிப்பு, மன்னரின் படை பலம், மன்னரின் உடனிருப்போர் நலம், தேசத்தில் உள்ள அந்தணர்களின் நலம் மற்றும் தேசத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேத, யாகங்கள் ஆகியவற்றை மகரிஷி விசாரித்து அறிந்தார். 

அதன் பின்பு, மன்னரிடம் இவ்வளவு தூரம் வரக்காரணம் என்ன என்று வினவினார் மகரிஷி. ? மன்னரும், ஏழு நலன்களைப் பற்றி தெரிவித்த பிறகு, தேசத்தில் நிலவும் கடும் நீர் வறட்சி அதனால் ஏற்பட்ட தானியங்கள் பஞ்சம் பற்றி கூறி அதற்கான காரணம் என்ன என்று மகரிஷியின் ஞான திருஷ்டி மூலம் அறிந்து கூறுமாறு வேண்டுகிறார், மன்னர். 

மகரிஷி கூறிய மார்க்கம் என்ன ?

மகரிஷியும், மன்னரின் வேண்டுகோளை ஏற்று, தனது ஞான திருஷ்டி மூலம் பஞ்சத்திற்கான காரணத்தை கண்டறிந்து மன்னரிடம் கூறுகிறார்; மந்ததா, இந்த சத்ய யுகத்தில், அவரவர் குலத்திற்கு உரிய கடமையை மட்டும் உரிய முறையில் ஆற்ற வேண்டும், ஆனால், உனது தேசத்தில் முறையான வேத முறைக் கல்வி இன்றியும், யாகங்களுக்கு உரிய முறையில் மரியாதை அளிக்காமலும், தேவர்களுக்கு உரிய யாக அவிர்பாகத்தை முறைப்பட செய்யாமலும், சூத்திர குலத்தில் இருந்த ஒருவன் தொடர்ந்து யாகங்களை பிறர் அறியாவண்ணம் செய்து வந்துள்ளான். அதன் விளைவாகவே உனது தேசத்தில் மழை பொய்த்துள்ளது என்றும் கூறினார். மேலும், தொடர்ந்து வேண்டுமென்றே, தவறு என்று தெரிந்தும் இவ்வாறு செய்த காரணத்தால் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 
(Editors Note: இங்கு சத்ய யுகத்தில் அந்தந்த குல தர்மத்தினை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றே சொல்லப் பட்டுள்ளது. மேலும் முறையான வேதநெறிக்கல்வியின்றி செய்யப்பட்ட தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கால சூழ்நிலையில் சொல்வதென்றால், நன்றாக போர் பயிற்சி பெற்ற ராணுவ வீரர் ஒருவர் செய்த இருதய மாற்று சிகிச்சை போல என்று எடுத்துக் கொள்ளலாம். "வர்ணாஸ்ரம தர்மம்" பற்றிய புரிதலோடு இந்தக் கருத்தினை அணுகினால் மட்டுமே இதன் உண்மையான அர்த்தம் விளங்கும்.)

மகரிஷியின் வாக்கினைக் கேட்ட மன்னன், அவரிடம் பணிந்து; தயை கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும், எமது தேசத்தின் பிரஜை தெரிந்தே தவறு செய்திருப்பினும், அவனுக்கு மரண தண்டனை வழங்க எனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை, ஆகவே இதற்கு வேறு ஏதாவது ஒரு பிராயச்சித்தம் கூறுங்கள் சுவாமி என்று மனமுருகி வேண்டினார். 

மகரிஷியும், மன்னரின் மனதை எண்ணி மகிழ்ந்து, மந்ததா, உனது தேசத்தின் பஞ்சம் தீர மக்கள் அனைவரும் செல்வச்செழிப்போடு வாழ, ஆஷாட மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியன்று உமது தேசம் முழுவதும் உள்ள அனைவரும் சேர்ந்து, முழு மனதுடன், ஏகாதசி விரதம் இருந்து பகவான் விஷ்ணுவை ப்ரார்த்தனை செய்யுங்கள். உமது தேசத்தில் தேவையான மழை பொழிந்து, மக்கள் அனைவருக்கும் தேவையான தானியங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறி வாழ்த்தி அருளினார். 

மகரிஷியின் இந்த வாக்கினை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு அவருக்கு மீண்டும் தனது பணிவான நமஸ்காரத்தினை தெரிவித்து விட்டு  மன்னரும் தனது தேசம் சென்றார். பின்னர் தனது தேசத்தில், அந்தணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் அனைவருக்கும் ஆஷாட சுக்ல பட்ச ஏகாதசி விரதம் இருக்க உத்தரவிட்டு தானும் விரதத்தினை சிரத்தையுடன் மேற்கொண்டார்.  

தேச நலனிற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்த விரதம் அவர்களுக்கு மழையாகப்  பொழிந்து கை மேல் பலன் கொடுத்தது. அதன் பின்னர் தேசம் மீண்டும் செழிப்புற்றது.
இவ்வாறு, நாரத முனியிடம் ஸயன ஏகாதசி பற்றி எடுத்துக்கூறிய ப்ரம்ம தேவர், அனைவரும் கண்டிப்பாக இந்த ஏகாதசி விரதம் இருந்து அனைத்து வளங்களும் பெற்று அதன் பின்னர் முக்தி அடையலாம் என்று கூறினார். 

இதனை, யுதிர்ஷ்ட மஹாராஜாவிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர்; 
எனதருமை யுதிர்ஷ்ட்ரா, மிகவும் சக்தி வாய்ந்த பத்ம ஏகாதசி விரதம் இருந்து ஒருவர் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு வளமான வாழ்வை அடையலாம், என்றார்.  மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில், பாண்டவர்களே, என்னை மகிழ்விக்கும் இந்த ஏகாதசி "தேவ ஸயனி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது, இந்த ஏகாதசி விரதக் கதையினைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் பிறருக்கு எடுத்துக் கூறுபவர்களும் மிகுந்த புண்யத்தினை பெற்று இக வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று பின்னர் பர வாழ்வில் முக்தி அடைகின்றனர் என்று கூறினார். 

ஓ, அரசர்களில் சிங்கம் போன்ற யுதிஷ்டிரா, முக்தி பெற விரும்பும் ஒருவர், சாதுர்மாஸ்ய விரதத்தினை கடைபிடிக்க வேண்டும், அதனை இந்த தேவ ஸயனி ஏகாதசி தினத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறி அருளினார் ஸ்ரீ கிருஷ்ண பகவான். 

பகவான் ஸ்ரீ விஷ்ணு ஸயனிக்கும் காலமாக கருதப்படும் இந்தக்கால கட்டத்தில் அனுஷ்டிக்கப்படும் விரதமானது  "சாதுர்மாஸ்ய விரதம்" என்று அழைக்கப்படுகின்றது. நான்கு-ஐந்து மாதங்கள் தொடரும் இந்த ஸயனம் 'கார்த்திகா' மாதம் "உத்தன்ன ஏகாதசி" வரை தொடர்கிறது.  இந்த காலக் கட்டத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் முடிந்த வரை தள்ளி வைக்கப்படுகின்றது. 

இவ்வாறு "தேவஸயனி ஏகாதசி" விரத மகிமை பற்றி  "பவிஷ்ய  உத்தர  புராணம்" விளக்குகின்றது.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'தேவ ஸயன ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

Editors Note:

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....  (W01) 
ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு:  
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...) 

ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

  1. ஜூலை-2020 முதல் 25-நவம்பர்-2020 வரை. இந்த காலக் கட்டத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் முடிந்த வரை தள்ளி வைக்கப்படுகின்றது.

    பொருட்கள், மனை, வீடு இவற்றிட்டுகும் பொருந்துமா

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம். சுப காரியங்கள் அனைத்திற்கும் பொருந்தும்... ஆனால் கலியுகத்தில், இது அவரவர் தனிப்பட்ட சௌகரியங்களை பொறுத்ததே...

      Delete
  2. Dasami anru night viradam irukanuma?

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம். தசமி இரவில் அன்னம் மட்டும் தவிர்த்தல் நன்று தான். ஆனால், மாத ஏகாதசிக்கு இது அவரவர் உடல்நிலை பொறுத்த விஷயம் தான்... வைகுண்ட ஏகாதசி-க்கு தான் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

      Delete
  3. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கிறோம் இவ்வளவு விவரங்கள் இந்த ஏகாதசி பற்றி தெரியாது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம். மிக்க நன்றி. நமது ஒரு துளி ஆன்மீகம் Whatsapp குழுவில் இணைந்து அரிய பல தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்...

      Delete
  4. A N Viswanatha RaoJuly 1, 2020 at 11:38 AM

    Let this Covid19 menace go away from the people at large immediately 🙏

    ReplyDelete
    Replies
    1. Namaskaram. Yes, we can do the fasting on Ekadasi and submit the "Viratha Punyam" to our Country for fast recovery from COVID-19.

      Delete
  5. This kind of information is very useful to all thank you very much May God bless you all

    ReplyDelete

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த