Skip to main content

ஸ்ரீ ராமரிடம் என்ன கற்கலாம்...?

மனிதருள் மாணிக்கமாய் போற்றப்படும் ஸ்ரீ ராமரிடமிருந்து என்ன கற்கலாம்



சத்குருவின் வித்தியாசமான பார்வையில் விரிகிறது இந்தக் கட்டுரை...


இந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மைப் பகுதி ராமனை போற்றி வணங்குகிறது, ஆனால் அவர் வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தால், வாழ்க்கை அவருக்கு நிகழ்ந்த விதத்தைப் பார்த்தால், தொடர்ந்து அவருக்கு பேரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது போலத் தோன்றும்

தனக்கு சேரவேண்டிய இராஜ்ஜியத்தை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. போர் தொடுக்க விருப்பமில்லாத போதும் மனைவியை அபகரித்துச் சென்றதால் போர்செய்ய நேர்ந்தது. மனைவியை மீட்டுவந்த பிறகு, சுற்றியுள்ள அனைவரும் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசுவதைக் கேட்க நேர்ந்தது. அதனால் மிகவும் பிரியமான மனைவி கர்ப்பிணியாய் இரண்டு குழந்தைகளை சுமந்திருந்த போதும் அவளை காட்டில் விட்டுவர நேர்ந்தது. பிறகு அறியாமலே தன் பிள்ளைகளுக்கு எதிராகவே போரிட்டு மனைவியை தொலைக்க நேர்ந்தது. அவர் வாழ்க்கை முழுவதும் இழப்புகள் மட்டுமே. அப்படியிருந்தும் ஏன் அவரை இவ்வளவுபேர் வழிபடுகிறார்கள்?

ராமரின் மகத்துவம்:

ராமரின் மகத்துவம் அவர் வாழ்க்கையில் சந்தித்த சூழ்நிலைகளில் இல்லை. அவர் சந்தித்த அத்தனை இழப்புகளிலும் அவர் தன்னை எவ்வளவு மேன்மையாக நடத்திக்கொண்டார் என்பதுதான் அவருடைய மகத்துவம்.

அவர் வாழ்க்கை முழுவதும் இடைவிடாமல் பேரிழப்புகள் நிகழ்ந்தும், ஒருமுறைகூட அவர் நேர்மை பிறழவில்லை, அவருக்கென அவர் அமைத்துக்கொண்ட அடிப்படைகளிலிருந்து நெறி தவறவில்லை.

முக்தியையும் மேன்மையான வாழ்வையும் நாடுபவர்கள் இராமரை நாடினார்கள். எவ்வளவு தூரம் நாம் கட்டுக்கோப்பாக வாழ முயன்றாலும், எந்நேரத்திலும் வெளிசூழ்நிலைகள் தவறாகப் போகலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் விவேகம் அவர்களுக்கு இருந்தது. அனைத்தையும் நீங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு சூறாவளி வந்து சென்றால் எல்லாம் அழிந்துவிடும். இவை அனைத்தும் இப்போதும் நம்மைச் சுற்றி நிகழ்ந்தபடிதான் உள்ளன. நமக்கு நிகழாமல் இருக்கலாம், ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு இது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

"இல்லை, இது எனக்கு நடக்காது" என்று நினைப்பது முட்டாள்தனம். "எனக்கு இப்படி நடந்தாலும் நான் மேன்மையாக வாழ்ந்துசெல்வேன்," என்பதே புத்திசாலித்தனம். இந்த வியக்கத்தக்க விவேகத்தைப் பார்த்து மக்கள் இராமரை வழிபட்டார்கள். வாழ்க்கை அவருக்கு பேரிழப்பின் தொடராக மாறியபோதும், ஒருமுறைகூட அவர் நேர்மை தவறவில்லை, அவருக்கென அமைத்துக்கொண்ட வாழ்க்கை அடிப்படைகளிலிருந்து பிறழவில்லை. அவர் செய்யவேண்டியது மட்டுமே நோக்கமாக இருந்து, தன் வாழ்க்கையை சமநிலையாக நடத்திச் சென்றார்.

சோதனைகளை நாடும் பாரம்பரியம்...
ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் பேரிடர்களை தேடிச்செல்லும் பாரம்பரியம் ஒன்று உள்ளது. பல ஆன்மீக சாதகர்கள் அவர்கள் வாழ்வில் ஏதொவொன்று தவறாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். சாவதற்கு முன் அவர்கள் தங்களை முழுவதுமாக பரிசோதித்துப் பார்த்துவிட விரும்புவார்கள். "தரம் பரிசோதிக்கப்பட்டது" என்று உறுதி செய்துகொள்ள விரும்புவார்கள். என்ன நிகழ்ந்தாலும் சரி, அவர்கள் மேன்மையாக அதைக் கடந்துவர விரும்புவார்கள், ஏனென்றால் உடலை விட்டுச்செல்ல வேண்டிய நேரம்தான் ஒருவர் சமநிலையை இழக்கக்கூடிய நேரம். எல்லாம் நன்றாகவே இருந்தாலும், இதுவரை உண்மை என்று நீங்கள் நம்பிய அனைத்தும் கைநழுவிப் போகவிருக்கும் தருணம் நீங்கள் சற்று சமநிலையை இழக்கும் தருணம். அதனால் மக்கள் பேரிடர்களை தேடிச் சென்றார்கள்.

உதாரணத்திற்கு, அக்கமஹாதேவி ஓர் அரசரை மணம் முடித்திருந்தார். ஆனால், அவர் சிறு வயதிலிருந்தே தன்னை முழுவதுமாக சிவனுக்குக் கொடுத்திருந்தார். அவர் சிவனிடம் கூறுகையில், "சிவனே! என்னை பசியாக்கி உணவு கிடைக்காமல் செய். அப்படி கிடைத்தால், நான் வாயில் வைக்கும்முன் தரையில் விழும்படி செய். தரையிலிருந்து எடுக்கும்முன் ஒரு நாய் அதனைக் கவ்விச் செல்லும்படி செய். என்னை எல்லாவற்றையும் சந்திக்கச்செய். வெளிசூழ்நிலை என்னவாக இருந்தாலும் என்னை நான் மேன்மையாக நடத்திக்கொள்வதை நான் கற்றுக்கொள்ள வழிசெய்," என்றார். இது பக்தியின் உச்சநிலை.

அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய சவால் வரும்வரை அவர்கள் நன்றாகவே இருப்பதுபோல் தெரியும். சவால் வந்தபிறகு அவர் யாரென்று தெரியும். ஏதோவொன்று அவர்கள் நினைக்கும்விதமாக நடக்கவில்லை என்றால் சிதறிப்போவார்கள்.

நீங்கள் தயாராக இருக்க விரும்புகிறீர்கள். போகவேண்டிய நேரம் வரும்போது, சிறிதளவு கூட தடுமாறாமல் இருக்க விழைகிறீர்கள். ஏனென்றால், அதுதான் நீங்கள் சரியாக கையாளவேண்டிய தருணம். அதற்கு சற்று பயிற்சி தேவை. திடீரென ஒருநாள் அது நடந்துவிட்டால், அதை உங்களால் கையாள முடியாது. அதனால், தொடர்ந்து அவர்கள் வாழ்வில் சோதனைகளையும் வேதனைகளையும் விழிப்புணர்வாக நாடுகிறார்கள்.

ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்தால், முதல் படியாக ஏழ்மையை தேர்ந்தெடுப்பது உலகின் எல்லா பகுதிகளிலும் பாரம்பரியமான வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஏழ்மையில் மேன்மையாக உங்களை நடத்திச்செல்வது சாதாரண விஷயமல்ல, அது எல்லா விதங்களிலும் உங்களை சோதிக்கும். பசியாக இருக்கும்போது மனிதனாய் இருக்கும் உணர்வையே தொலைத்து மிருகம் போல மாறிவிடுவீர்கள். பசியாக இருக்கும்போது உங்களை மேன்மையாக நடத்துவது சுலபமான விஷயமல்ல

இந்தியாவில் யோகிகளைப் பார்த்தால், அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள், தொடர்ந்து நடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் பசியாக இருக்கிறார்கள், சில நாட்களாக உணவருந்தவில்லை என்பது பார்த்தாலே தெரியும், ஆனாலும் அவர்கள் தங்களை மேன்மையாக நடத்திக்கொள்வார்கள்.

ஒருவேளைக்கான உணவைக் கொடுத்தால் எடுத்துக்கொள்வார்கள். அடுத்தவேளை உணவிற்கு பணம் கொடுத்தால் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் அந்த சவால் எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள். இரண்டு வேளை சாப்பாட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டால், நாளை பத்து வேளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உங்களை சமாதானப்படுத்த முயற்சிப்பீர்கள்.

ஒன்றை சேர்த்துவிட்டால், இன்னுமொன்று தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மெதுமெதுவாக உங்கள் வாழ்க்கை முழுவதையும் ஒருங்கிணைக்க முயன்று அது முடிவில்லாமல் போய்விடும். நம் பிழைப்பை நாம் எவ்வளவு தூரம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று சற்று நிதானித்துப் பாருங்கள்

நம் பிழைப்பிற்கான செயல்முறையை வானம் வரை வளர்த்துள்ளோம், அப்போதும் நமக்குப் போதவில்லை. அதனால், ஒருவேளை உணவு கொடுத்தால் இந்த யோகிகள் பெற்றுக் கொள்வார்கள், ஆனால் அடுத்தவேளைக்கு பணம் கொடுத்தால் மறுத்துவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் அந்த சோதனை எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

ராமர் - மேன்மையின் திருவுருவம்:
மக்கள் இராமரை வழிபடக் காரணம், அவர் வாழ்க்கையின் வெற்றியால் அல்ல, மிகவும் கடினமான சூழ்நிலைகளையும் அவர் மேன்மையாகக் கையாண்ட விதத்தால்தான். அதுதான் ஒருவரது வாழ்க்கையில் மிக மதிப்பானது. உங்களிடம் எவ்வளவு இருக்கிறது, என்ன செய்தீர்கள், என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பது ஒரு பொருட்டல்ல. என்ன நடந்தாலும் உங்களை எப்படி நடத்திக்கொண்டீர்கள்? அதுதான் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன் தரத்தை நிர்ணயிக்கிறது.

பங்குச்சந்தை நிலவரம் நன்றாக இருந்தால், நீங்கள் 100 கோடி டாலர் சம்பாதிக்கலாம், ஆனால் அதில் அர்த்தமிருக்காது. அது ஒரு சமூக சூழ்நிலை மட்டுமே. உங்கள் சமூகத்தில் நீங்கள் கோடீஸ்வரராக இருக்கலாம், ஆனால் இன்னொரு சமூகத்தில் நீங்கள் தோற்றுப்போனவராகத் தெரிவீர்கள், அர்த்தமில்லாது போவீர்கள். சூழ்நிலையோடு சேர்ந்து வரும் வசதிகளை அனுபவிப்பதில் தவறில்லை, ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் உங்களால் எந்த அளவு மேன்மையாக அதைக் கையாள முடிகிறது? பல மனிதர்களுக்கு இது நிகழ்வதை நீங்கள் கவனிப்பீர்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய சவால் வரும்வரை அவர்கள் நன்றாகவே இருப்பதுபோல் தெரியும். சவால் வந்தபிறகு அவர் யாரென்று தெரியும். ஏதோவொன்று அவர்கள் நினைக்கும்விதமாக நடக்கவில்லை என்றால் சிதறிப்போவார்கள்.

மக்கள் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் அனைத்திற்கும் நன்றி சொல்கிறார்கள். உங்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் உங்கள் வாழ்க்கைக்கு எதையும் சேர்க்காது. இந்தியாவில் இதை கவனிப்பீர்கள். குப்பத்திற்கு அருகே பெரிய மாளிகை இருக்கும். நீங்கள் எவ்வளவு பெருமையுடன் இருக்கிறீர்களோ அதே பெருமையுடன் அந்த குப்பத்து மனிதரும் இருப்பார். இது நல்ல விஷயம்

பெருமையில் மட்டுமல்ல, யார் எப்படி இருந்தாலும் ஒரு மனிதர் தன்னை மேன்மையாக வைத்துக்கொண்டால், அவர் தன்னை நன்றாக சுமந்துகொள்கிறார் என்று அர்த்தம். தூக்குமேடைக்கு நடந்துசெல்வதானாலும் நீங்கள் மேன்மையாக நடக்கமுடிந்தால், இதுதான் ஒரு மனிதனின் தன்மை. மற்றதெல்லாம் சூழ்நிலையின் தன்மைகள் மட்டுமே.

அப்படியானால் நம் வாழ்க்கையை நாம் சரியாக நடத்தக்கூடாதா? அப்படியில்லை, நம்மைச் சுற்றியிருப்பதை சரியாக நடத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும். சூழ்நிலையை நன்றாக நடத்திக்கொண்டால் எனக்குள் நான் அற்புதமாக உணர்வேன் என்று கிடையாது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்னை என்னால் மேன்மையாக நடத்திக்கொள்ள முடிந்தால்தான் நான் அற்புதமாக உணர்வேன். ஆனால், நீங்கள் சூழ்நிலையையும் கையாள வேண்டும், காரணம், நீங்கள் அனைவரின் நல்வாழ்வைக் குறித்தும் அக்கறை கொண்டுள்ளீர்கள்.

இராமர் தன் வாழ்க்கையின் சூழ்நிலைகளை சரியாகக் கையாள முயன்றார், ஆனால் எப்போதும் அவரால் விரும்பியதை செய்ய முடியவில்லை. கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்தார், எல்லாம் கைமீறிப் போனது, ஆனால் அவர் தன்னை எப்போதும் மேன்மையாக நடத்திக்கொண்டார் என்பதுதான் மகத்துவமானது

ஆன்மீகப் பாதையில் செல்வதன் அடிப்படை சாரம்சமே இதுதான். ஓர் அழகான நறுமணமான மலராக உங்கள் உயிர் மலர்வதற்கான சூழ்நிலையை உருவாக்க விரும்பினால், தொடர்ந்து உங்களுக்குள் மேன்மையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கவேண்டும்.

ஹரி ஓம் ...


உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த