Skip to main content

ஸ்தல புராணம் - கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர் கோவில்...

கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர் கோவில் (கர்நாடகா)...



கோகர்ணா கணபதியின் கதை:
கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர் போனவர். கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில், தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது. அந்தக் குழியின் காரணத்தையும், கணபதியின் சாமர்த்தியத்தையும்  விளக்கும் சத்குரு அவர்கள். 

இராவணன் சிவனின் தீவிரமான பக்தனாக இருந்தான். அவன் தென்பகுதியிலிருந்த தன் இராஜ்ஜியத்திலிருந்து சிவனை வழிபட்டு வந்தான். ஆனால் சில காலத்திற்குப் பிறகு, "நான் ஏன் கைலாயத்தை என் வீட்டிற்கு அருகில் கொண்டுவரக் கூடாது?" என்று நினைத்தான். அதனால் இலங்கையிலிருந்து கைலாயம் வரை நடந்தே சென்றான், பிறகு கைலாயத்தை தனது கைகளால் பெயர்த்தெடுக்க முயற்சித்தான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, "அவர் உங்களுக்கு எவ்வளவு அன்பானவராக இருந்தாலும் சரி, அவர் கைலாயத்தை தென்பகுதிக்கு எடுத்துச்செல்ல நீங்கள் அனுமதிக்கக்கூடாது." என்றார். சிவனுக்கும் இராவணனின் அஹங்காரம் மீது கோபம் வந்துவிட, அவர் மலையை கீழே அழுத்தினார், அதனால் இராவணின் கைகள் அதற்கடியில் சிக்கிக்கொண்டன. இராவணன் வலியில் துடித்தான், ஆனால் சிவனோ இராவணனை விடுவிக்கத் தயாராக இல்லை.

கைகள் கைலாயத்திற்குக் கீழே சிக்குண்டபடி, இராவணன் சிவனின் மேல் தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்த பல அழகான வெண்பாக்களாகப் பாட ஆரம்பித்தான். முழு அன்புடன் சரணாகதியில் 1001 பாடல்களை இயற்றினான். சிவன் உளம் குளிர்ந்து அவனை விடுவித்து, "உனக்கொரு வரம் தருகிறேன், வேண்டியதைக் கேள்." என்றார்

இராவணன் இயற்றிய 'சிவ தாண்டவ ஸ்தோத்ரம்' வீடியோ வடிவில் பாடல் வரிகளுடன் இதோ...

மீண்டும் இராவணின் குணம் தலைதூக்க, "நான் பார்வதியை மணம் முடிக்க விரும்புகிறேன்" என்றான். சிவனும், "சரி, மணந்துகொள், அவள் மானசரோவரில் இருக்கிறாள். நீ சென்று திருமணம் செய்துகொள்." என்றார். சிவனைச் சுற்றி இருந்த கணங்கள் பதற்றமடைந்து, "இது எப்படி நடக்கமுடியும்? இராவணன் பார்வதியைத் தொடக்கூட முடியுமா? இது நடக்கக்கூடாது." என்று ஓடோடி சென்று மானசரோவரில் உள்ள பார்வதியிடம் "இராவணன் வருகிறான், அவன் உங்களை மணந்துகொள்ள சிவன் அனுமதி கொடுத்துவிட்டார்." என்றனர்.


பார்வதி தவளைகளின் அரசியான மண்டூகாவை அழைத்து, அந்தத் தவளையை ஒரு அழகான பெண்ணாக மாற்றினார். இராவணன் பார்வதியைக் கண்ணால் கூடக் கண்டதில்லை, அங்கு வந்து மண்டூகா என்ற பெண்ணைப் பார்த்ததும் அவள்பால் ஈர்க்கப்பட்டான், பிறகு திருமணமும் செய்துகொண்டான். அந்தப் பெண்தான் மண்டோதரி.

அதற்குப் பிறகு இராவணன் தீவிரமான சாதனா செய்து சிவனிடம் இருந்தே சக்திவாய்ந்த ஜ்யோதிர்லிங்கத்தைப் பெற்றுக்கொண்டான். சமூகத்தில் சரியா, தவறா என்பது சிவனுக்கு ஒரு பொருட்டில்லை. உண்மையான அன்புடன் செய்யப்படும் எதுவாக இருந்தாலும் சிவன் அன்பில் நெகிழ்ந்துவிடுவார்.

அவன் தன்
தேசத்திற்கு எடுத்துச்செல்ல இராவணனுக்கு சிவன் ஒரு ஜ்யோதிர்லிங்கத்தைத் தந்தார். இராவணன் அந்த ஜ்யோதிர்லிங்கத்தை எங்கு கீழே வைத்தாலும் அது நிரந்தரமாக அங்கேயே இருந்துவிடும் என்றும் சிவன் கூறினார். இடையில் எங்கும் ஜ்யோதிர்லிங்கத்தைக் கீழே வைக்கக் கூடாது, அப்படி வைத்துவிட்டால் அது அங்கேயே நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படும் என்ற ஒரே நிபந்தனையுடன் சிவன் அதனை வழங்கியிருந்தார்.

மிக கவனமாக, மிகுந்த உறுதியுடன் இராவணன் ஜ்யோதிர்லிங்கத்தை சுமந்தான். அவன் தேர்ந்த யோகி என்பதால், எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொண்டான், உண்ணவில்லை, சிறுநீர் கழிக்கவில்லை, ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயமான தேவையாக இருக்கும் எதையும் செய்யாமல் கைலாயத்திலிருந்து தோராயமாக 3000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கர்நாடகத்தின் கோகர்ணா எனும் இடத்திற்கு வந்தான்

ஒரு மனிதனாக சாதாரணமாகத் தேவைப்படும் எதையும் எடுத்துக்கொள்ளாமல் நடந்ததால் அவன் உடல் பலவீனமாக உணர்ந்தான், சிறுநீர் கழிக்க விரும்பினான். உணவு உட்கொள்ளாததால் தண்ணீர் மட்டும் குடித்திருப்பான். அவனுடைய சிறுநீர்ப்பை கிட்டத்தட்ட நான்காயிரம் லிட்டர் தண்ணீர் சுமக்கும் நிலைக்கு வந்திருக்கும், அதற்குமேல் அவனால் அடக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும்! ஆனால் லிங்கத்தைக் கீழே வைக்க முடியாததால், இயற்கையின் அழைப்பை ஏற்காமல் இருந்தான். மிகவும் கீழ்த்தரமான செயலாக அவன் கருதுவதை, உடலில் லிங்கத்தை வைத்துக்கொண்டு செய்யக்கூடாது என்று நினைத்தான்.

பிறகு பார்ப்பவர் உள்ளத்தைக் கவரக்கூடிய ஒரு வெள்ளந்தியான மாடு மேய்க்கும் சிறுவனைப் பார்த்தான். அந்தப் பையன் புத்தியில் சற்று மந்தமானவன் போலத் தெரிந்தான். புத்திசாலியான ஒருவருக்கு விலைமதிப்பில்லாத ஏதோ ஒன்றைக் கொடுத்தால் அவன் ஓடிப்போக முயற்சிக்கலாம், அந்தப் பையன் முட்டாள் போலத் தெரிந்ததால் இராவணன் "நான் சிறுநீர் கழித்துவிட்டு வரும்வரை இதை நீ சில நிமிடங்கள் கையில் வைத்துக்கொள். பத்திரமாக வைத்திருந்தால் நான் உனக்கு பொன் ஆபரணம் ஒன்றைத் தருகிறேன். ஆனால் இதைக் கீழே மட்டும் வைக்கக்கூடாது" என்று இராவணன் கூறினான். "சரி" என்று அந்தப் பையன் தலையாட்டினான். லிங்கத்தை அந்தப் பையனின் கைகளில் கொடுத்துவிட்டு சிறுநீர் கழிக்கத் திரும்பினான்

உண்மையில் அந்தப் பையன் மாறுவேடத்தில் வந்திருந்த கணபதி. அவர் இராவணன் லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச்செல்லக் கூடாது என்று நினைத்தார். அப்படி அவன் எடுத்துச்சென்றால் அவன் அமானுஷ்ய சக்தி படைத்தவனாய் மாறிவிடுவான். அதனால் கணபதி அந்த லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டார், அது மண்ணுள் புதைந்துவிட்டது. இன்று கூட நீங்கள் கோகர்ணாவிற்குச் சென்றால் பாறையில் ஒரு சிறிய துவாரம் இருக்கும். அதற்குள் விரலை விட்டுத் தடவிப் பார்த்தால் லிங்கம் தென்படும், ஏனென்றால் அது மண்ணுக்குள் அமிழ்ந்துவிட்டது(அவரே 'மஹாபலேஷ்வர்' என்று தற்பொழுது அழைக்கப்படுகிறார்.)


கோகர்ணா கணபதி:
இராவணனுக்கு மிகவும் கோபமானதால் கணபதியின் தலையில் கொட்டிவிட்டான். அதனால் தலையில் குழியிருக்கும் ஒரு கணபதி சிலையை நீங்கள் கோகர்ணாவில் காணமுடியும். கைலாயத்திற்குத் திரும்பிச் சென்று தன் வேலையை மறுபடியும் செய்ய இராவணனுக்குத் தெம்பில்லாததால் ஏமாற்றத்திலும் கோபத்திலும் மீண்டும் இலங்கை நோக்கி நடந்து செல்லலானான்.

நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதைத் தாண்டி, நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், தெய்வீகம் என்பது எப்போதும் எல்லோருக்கும் கிட்டும் தூரத்தில் தான் உள்ளது. ஆனால் அதனை நீங்கள் வரமாக மாற்றுகிறீர்களா அல்லது சாபமாக மாற்றுகிறீர்களா என்பது உங்களுக்குள் நீங்கள் சுமக்கும் தன்மையைப் பொறுத்தது.

உங்களுக்குள் நீங்கள் எப்படிப்பட்ட கண்ணோட்டத்தையும், எப்படிப்பட்ட மனதையும் உருவாக்குகிறீர்கள் என்பதே நீங்கள் பிரபஞ்சத்தை எப்படி பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது.  

Editors Note:
ஒரு சில விளக்கங்களில், இராவணன் தனது மாலை நேர சந்தியாவந்தனம் செய்வதற்காக அந்த இடத்தில் (கர்நாடகத்தில்) 'பிள்ளையாரிடம்' ஆத்ம லிங்கத்தை கொடுத்ததாக வரலாறு உண்டு. எந்த விளக்கம் ஆயினும், அந்த ஸ்தலம் மற்றும் அதன் தாத்பர்யம் ஒன்று தான்.  

மேலும், 
கணபதி, பல பசுக்களுடன் சேர்ந்து மாயமாகி விட்டார். அப்பொழுது ஒரே ஒரு பசுவினை மட்டுமே, இராவணன் ஓடி வந்து பிடிக்க முடிந்தது, அதுவும் ஒரு பசுவின் காதினை மட்டுமே பிடிக்க முடிந்தது... மீதி பகுதி பூமியினுள் மறைந்து விட்டது. ஸமஸ்க்ருதத்தில் 'கர்ணம்' என்றால் 'காது' (Ear) என்று பொருள்.  (காதில் குண்டலங்களுடன் பிறந்ததாலேயே 'கர்ணன்' என்று பெயர் வந்தது... / சில நேரங்களில் மோசமான இசையை நாம் 'கர்ண கொடூரம்' என்று சொல்வது வழக்கம் அல்லவா...)   

கோ = பசு 
கோ-கர்ணா (பசுவின் காது) என்று காரணப்பெயர் வந்தது. மேலும், அங்குள்ள, இராவணன் கொண்டு வந்த ஆத்ம சிவலிங்கத்திற்கு 'மஹாபலேஷ்வர்' என்று பெயர். (அனைத்து 'பெரிய சக்திகளும் கொண்டவர்' என்று பொருள்).   

கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர்  திருக்கோவில், மங்களூர்-மும்பை செல்லும் சாலையில், கர்வார் (Karwar) எனும் இடத்தில இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோகர்ணா அருகில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையம்  'அங்கோல்' (Ankol -ANKL) ஆகும்.  

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவில் எவ்வளவு தொலைவு உள்ளது என்பதனை எளிய வழியில் கணக்கிட இதோ 'Google Map'  உங்களுக்காக...    
தேவார 'பாடல் பெற்ற ஸ்தலங்களில்' ஒன்றாகிய இந்த 'ஸ்தலத்திற்கு' வாய்ப்பு கிடைக்கும் பொழுது கண்டிப்பாக ஒருமுறை சென்று வாருங்கள். அல்லது வரும் ஆண்டு விடுமுறையில் வாய்ப்பை உருவாக்கி செல்லுங்கள்... (Please click on 'More options' in the below Map to check the distance from your location...)


...ஓம் நம ஷிவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி. 

Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க...

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக...

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் ...

கந்த குரு கவசம் (தமிழில்) - Kandha Guru Kavasam

ஸ்ரீமத்   சத்குரு   சாந்தானந்த   சுவாமிகள்   அருளிய     'கந்த  குரு   கவசம் ' விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே . செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் ...

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அ...

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: May...

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and ...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல க்  காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டன...