Skip to main content

வாமன ஏகாதசி (அ) பார்ஸ்வ ஏகாதசி மகிமை ...

வாமன ஏகாதசி / பார்ஸ்வ ஏகாதசி / பரிவர்த்தினி ஏகாதசி 



நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட.... 

'பத்ரபாத' (Pathrabaadha) மாதம், (August / September)  வளர் பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பார்ஸ்வ ஏகாதசி" (அ) "வாமன ஏகாதசி" (அ) "பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி" (அ) "பத்ரபாத சுக்ல பட்ச  ஏகாதசி"   पारसवा एकादसी / वामन एकादशी } ( Parsva  Ekadasi / Vamana Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது. 

"வாமன ஏகாதசி" பற்றிய ப்ரம்ம வைவர்த்த புராண விளக்கம்:
பிரம்ம-வைவர்த்த புராணத்தில், ஸ்ரீ கிருஷ்ணர்  மற்றும் மஹாராஜா யுதிஷ்ட்ரர் இந்த நாளின் சிறப்பு பற்றியும், என்றும் அழியாத மகிமைகளைப் பற்றியும் விவாதிக்கின்றனர்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், இந்த வாமன ஏகாதசி பற்றிய மகிமையை விளக்குங்கள் என்று, யுதிஷ்டிரர் கேட்கிறார்.    


ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...


ஸ்ரீ கிருஷ்ணர், "அரசர்களில் சிறந்த யுதிஷ்டிரா, இந்த நாளின் மகிமைகள் அளவிட முடியாதவை, இது மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தியை அளிக்கிறது. ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறது", என்று சொல்லி தொடங்குகிறார்.

இந்த ஏகாதசி அன்று பக்தியுடன் வாமன தேவரை வழி படுபவரை மூவுலக வாசிகளும் வணங்குவர். இந்த நாளில், ஸ்ரீ விஷ்ணுவை தாமரை மலர் கொண்டு வழி படுபவர், நிச்சயமாக பகவானின் பாதங்களை அடைவர்..


இந்த ஏகாதசி காலத்தில் தான், பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் வாமன தேவராக  தோன்றியதால் "வாமன ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது.

இது "பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது... ( "பகவான் ஸ்ரீ விஷ்ணு தனது ஸயனத்தில் ஒரு புறத்தில் இருந்து மறு புறம் திரும்பும் கால கட்டம் இந்த ஏகாதசி தினம் தான்." [Changing Sides - ஸமஸ்க்ருதத்தில் "பரிவர்தினி" ])

{தற்போது நாம் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் "ஜாதகப் பரிவர்த்தனை" செய்து கொண்டனர் என்று சொல்கிறோமே அது போல Changing Sides}

மேலும், ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகையில்;
என் அன்பான யுதிஷ்டிரா, திரேதா-யுகத்தில் 'பலி மஹாராஜ்' என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பக்தர் இருந்தார், அவர் ஒரு அசுர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பகவான் விஷ்ணுவை வணங்குவதில் மிக உயர்ந்த பக்தராக இருந்தார்.  அதன் மூலம் பகவான் விஷ்ணு மிகவும் திருப்தி அடைந்திருந்தார்.

பலி மஹராஜ், நல்ல முறையில் ஆட்சி செய்தும், பல பிராமணர்களை வணங்கி அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியும், மற்ற அனைத்து மக்களுக்கும் தேவையான உதவி செய்தும், யாகங்கள் மற்றும் தான, தர்மங்களும்  செய்தார். இதனால், அவர் இந்திரனையே, தோற்கடிக்கும் வல்லமை பெற்று இந்திர லோகம், மற்றும்  பாதாள லோகத்தையும்  வென்றார்.

பின்னர் இந்திரன் மற்றும் சகல தேவர்கள் பகவான் ஸ்ரீ ஹரியை அணுகி, செய்த வேண்டுதலின் படியும், பலி மஹாராஜாவின் உண்மையான பக்தியினை பிறர் அறியச் செய்யும் பொருட்டும்,  பகவான் ஸ்ரீ விஷ்ணு ஒரு குள்ளமான (வாமனன்) வடிவ பிரம்மச்சாரியாக பலியின் யாக வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றார்.


தசாவதாரத்தில் வாமன அவதாரமாக ஸ்ரீ விஷ்ணு:
பலி மஹாராஜா உலகையே தனது குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில், அஸ்வமேத யாகம் தொடங்கி மிக சிறப்பாக நடத்தி வர, "பலி" யிடம்  வாமனதேவ ரூபத்தில் வந்த பகவான் ஸ்ரீ விஷ்ணு,  மூன்று அடிகள் நிலம் தானமாக கேட்டார். 

அதற்கு பலி சம்மதித்த உடன், வாமன தேவர் தனது உடலை மிகவும் பிரம்மாண்டமாக விரிக்கத் தொடங்கி, மூன்று அடிகளை வைக்கத்  தொடங்கினார்.  

அவரது முதல் அடியானது முழு பூமியையும் (உலகையும்) மறைக்கும் வண்ணம் அமைந்தது, இரண்டாவது அடியில், புவலோகம் அவரது தொடைகள் மூலமும், ஸ்வர்க்கலோகம் எனப்படும் இந்திரலோகம்  அவரது இடுப்பு பகுதி மூலமும், மகர லோகம் அவரது வயிற்று பகுதி மூலமும், ஜனலோகம் அவரது மார்பு பகுதி மூலமும், தப லோகம் அவரது கழுத்துப் பகுதி மூலமும், சத்யலோகம் அவரது முகத்தின் மூலமும் முழுவதுமாக மறைந்தது. 

பலி மஹாராஜாவிடம், இப்பொழுது, மூன்றாவது அடியை எந்த இடத்தில் (நிலத்தில்) வைக்க? என்று புன்னகையுடன் பகவான் ஸ்ரீ விஷ்ணு கேட்ட பொழுது பலி மஹாராஜா மிகவும் மகிழ்ச்சியுடன் , தனது தலையில் வைக்கும் படி கேட்டுக்கொண்டு, பகவானது பாதார விந்தங்களை சரண் அடைந்தார். 

இதனைக்கண்ட பகவான் ஸ்ரீ விஷ்ணு மிகவும் பரவசமடைந்தார். உடனே பலி மஹாராஜாவின் தலையில் கால் வைத்து, அவரை அப்படியே பாதாள லோகத்திற்குள் செல்லும் படி செய்து விட்டார். (நமது பூலோகத்திற்கு கீழ் உள்ள நாகர்கள் வாழும் பாதாள லோகம்) 

மூன்றாவது அடியை, பலியின் தலை மேல் வைத்து பலி மஹராஜ்-க்கு  முக்தி அளித்தார் ஸ்ரீ விஷ்ணு பகவான். இந்த நிகழ்வினாலேயே அவர் "மஹா பலி" அல்லது "மா பலி" என்று அழைக்கப்படுகின்றார்... 


இதன் பின்னர், வளர்பிறையின் போது நிகழ்ந்த இந்த ஏகாதசி நாளில் தான், பலி மன்னர் ஆட்சி புரிந்த இடத்தில் வாமன தேவரின் அழகிய திருவுருவ சிலை நிறுவப்பட்டது.
தற்பொழுது, ஸ்ரீ வாமன தேவர் திருக்கோவில்,  "ஸ்ரீ திருக்காகரை திருக்கோவில் என்ற பெயரில், கேரள மாநிலம், கொச்சியில் உள்ளது". திருச்சூர் - எர்ணாகுளம் செல்லும் சாலையில் 10 KM தொலைவில் உள்ளது. 

Editor's Note:

வாமன ஏகாதசியின் தாத்பர்யமாக இந்த 'சிறியவன் ' புரிந்து கொள்ள முயற்சிப்பது என்னவென்றால், பகவானிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து, மஹாராஜாவாக இருந்த போதிலும் இந்த மஹா பலி தனது தலையையே கொடுத்தது போல்...
நமது தலைக்கணத்தையும், நான் என்ற அகங்காரம்,  ஆணவம் ஆகியவற்றையும் பகவானிடம் பலியிட்டு வெறும் 60 - 70 வருட வாழ்க்கை வாழப்போகும் நாம் தலை, கால் புரியாமல் ஆடுவதை விட்டு, விட்டு வாழும் வரை அடுத்தவருக்கு நம்மால் முடிந்த சிறு உதவியை புரிந்து பகவான் அருள் பெற முயற்சிப்போமாக..... 


அறிவோம் பல அரிய ஆன்மீக நிகழ்வுகளை... ஹரி ஓம்... 
மஹா பலி : - மஹா முனி  "காஷ்யப முனிவரின்" குலத்தோன்றலும், மஹா அசுரன் "ஹிரண்யகசிபுவின்" கொள்ளுப்பேரனும் மற்றும் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனான "ப்ரஹலாதனின்" பேரனும் ஆவார்...  


எவரொருவர்இந்நாளில் இந்த விரதத்தின்  மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை  கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது  பிறருக்குசொல்கிறாரோ அவர் அஸ்வமேத  யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீ கிருஷ்ணர், யுதிஷ்டிரனிடம் கூறினார்  என்று   "பிரம்ம வைவர்த்த புராணம்"  விவரிக்கின்றது.


ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'வாமன ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 
  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, தாமரை மலர் சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...
  • இந்த ஏகாதசி மறுதினம் "வாமன துவாதசி" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அன்னதானம் செய்வது மிகவும் புண்யமான விஷயம் ஆகும். மிகவும் எளிதாக சொல்லப்பட்ட விஷயம், உணவு தேவை உள்ள ஒரே ஒரு நபருக்கு (அல்லது உங்களால் முடிந்த அளவு நபர்களுக்கு) ஒரு தயிர்சாதம் வாங்கி கொடுத்தால் போதுமானது.  அதுவே அற்புத பலனைத்தரும். 
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலமும், அன்று பகவான் ஸ்ரீ ஹரி நினைவாகவே இருப்பதன் மூலமும், 'அஸ்வமேத யாகம்' செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

Editors Note:

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....(MH01)

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு:  
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...) 

ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...

ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

  1. Thank-you. Very usefully for people like me who is beginning to appreciate ourtradition and want to follow .this guidance will motivate us.

    ReplyDelete
    Replies
    1. Thank you. Yes, we are trying to spread our Sanandhan Dharma in a simple manner. Join our Whatsapp group to get regular Ekadasi reminder and update...

      To Join our Whatsapp Group….Please click here…

      Delete

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த