Skip to main content

முன்னோர் செய்த பாவங்களை தீர்க்கும் இந்திர ஏகாதசி...

முன்னோர் செய்த பாவங்களை, நாம் தீர்க்க வழி செய்யும் இந்திர ஏகாதசி... 


நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் ஏகாதசி விரதம் என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட. 

'அஸ்வினி' (Aswini) மாதம், (August / September)  தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "இந்திர ஏகாதசி" (அ) "அஸ்வினி கிருஷ்ண பட்ச  ஏகாதசி" (Indira Ekadasi)  என்று  அழைக்கப்  படுகின்றது. 

ஒவ்வொரு ஏகாதசியின் பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கும் "பிரம்ம வைவர்த்த புராணத்தில்" இருந்து இந்திர ஏகாதசிக்கு உண்டான மகிமையை பார்ப்போம்...

ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மஹாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், யுதிஷ்டிரர் அஸ்வினி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விளக்கமாகக் கூறும் படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்..

அதற்கு, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாராஜா யுதிஷ்டிரரே, இந்த ஏகாதசி "இந்திர ஏகாதசி" என்று அழைக்கப் படுகிறது. மேலும், இந்த ஏகாதசி விரதத்தை ஒருவர் கடைபிடிப்பதன் மூலம், அவரது முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்க கூடிய வல்லமையை தர வல்லது என்று கூறி மேலும் விளக்குகிறார்...

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

சத்யயுகத்தில், "இந்திரசேனா" என்ற பெரும்புகழ் பெற்ற அரசர் "மஹிஷ்மதி-புரி" என்ற பகுதியை அரசாட்சி புரிந்து வந்தார். அவர் நீதியை பின்பற்றுவதிலும், பகவான் விஷ்ணுவை துதிப்பதிலும், நல்லாட்சி வழங்குவதிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இதனால், அவரது ஆட்சியில் பொன், பொருள் மற்றும் அனைத்து செல்வங்களும் செழிப்பாக இருந்தது.


ஒருநாள் அவர் அரண்மனையில் வீற்றிருக்கும் பொழுது, "நாரத முனிவர்" அவரது அரண்மனைக்கு வந்தார். அவரைக் கண்டதும், இந்திரசேனா தனது இருக்கையில் இருந்து தானே எழுந்து சென்று அவரை இரு கரம் கூப்பி வரவேற்று உபசரித்து, அவருக்கு சகல மரியாதைகளையும் வழங்கி ஆசனத்தில் அமர வைத்தார். 

பின்னர் நாரத முனி, ராஜ்யத்தின் ஏழு அங்கங்கள் நலமாக உள்ளதா என்று நலம் விசாரிக்கிறார்... 

அதென்ன ஏழு அங்கங்கள் ?
மன்னரின் உடல் நலன். 
மன்னரது மந்திரி பிரதானிகளின் நலன்.
ராஜ்யத்தின் கருவூல நலன்.
ராணுவப் படைகளின் நலன்.
மன்னரது கூட்டாளிகளின் நலன். 
ராஜ்யத்தில் உள்ள ப்ராமணர்களது நலன்.
மற்றும்,
ராஜ்யத்தை பாதுகாப்பதற்காக  தனது உயிர் அல்லது உடமைகளை தியாகங்கள் செய்தவர்களது குடும்ப நலன். 

அதன் பின்னர், மன்னரிடம் பகவான் சிந்தனையுடன் ஆட்சி நடத்தப்படுகிறதா? என்று நலம் விசாரிக்கிறார் நாரத முனி. 
இவை அனைத்திற்கும், ஆம் மிக்க நலமுடன் நடைபெறுகிறது என்று புன்னகையுடன் பதில் கூறிய மன்னர் இந்திரசேனா, மேலும் கூறுகையில், நாரத முனி அவர்களே, இன்று தங்களது வருகையால் எங்களது நாடும், நாட்டு மக்களும் மேலும் பெரும் பாக்யம் பெற்றனர் என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறி அவரை உபசரிக்கின்றார். 

இந்த இடத்தில், இந்த 'சிறியவன்', சிந்தையில் தோன்றிய எண்ணம்...
ஒரு நாடு நலம் பெற, ஒரு அரசன் ஆட்சி புரியும் பொழுது கவனிக்கப்பட வேண்டிய அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏழு. மேலும் பகவான் சிந்தனையுடன் கூடிய வகையில் அந்த ஆட்சி இருக்க வேண்டும். இது யுகம், யுகமாக நமக்கு சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. இதனை நாட்டின் பிரஜைகளாகிய நாமும் நமது சிந்தையில் தெளிவாகக் கொண்டு, இந்த கலியுகத்தில் அவ்வாறு தெய்வ சிந்தனையுடன் ஆட்சிப் பொறுப்பினை நடத்தும் நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது மிக, மிக முக்கியம்.   
அவ்வாறு இல்லையென்றால், அதற்குரிய பலனை (தண்டனையை) அந்த தேசத்தில் அனைவரும் அனுபவிக்கும் படி அமையும்...
இங்கு அரசியல் பேசவில்லை. புராணத்தில் உள்ள கருத்துக்களை தற்போதைய நடைமுறையில் நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம்...

சரி மீண்டும், புராணத்தினுள் புகுவோம்...

அதன் பின்னர், மன்னர் இந்திரசேனா, நாரத முனியிடம், அவர் வருகை புரிந்த நோக்கத்தை கேட்கிறார். 

இந்திரசேனா-வின் வரவேற்பில் உளம் மகிழ்ந்த நாரத முனி, இவ்வாறு கூறலானார்... ஓ, அரசர்களில் சிறந்த அரசனே, நான் பிரம்ம லோகத்தில் இருந்து யமலோகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு, யமராஜர் எம்மை வரவேற்று ஆசனம் அளித்து உபசரித்தார். அப்பொழுது உனது தந்தையார் அங்கு "யமலோகத்தில்" இருக்க கண்டேன். அவர், பூலோக வாழ்வில் மிகவும் பக்தி, சிரத்தையுடன் இருந்திருந்த போதிலும் ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிக்காமலும், விரதத்தை முன்கூட்டியே முடித்த காரணத்தாலும் அவர் "வைகுண்டம்" செல்வதற்கு பதில் "யம லோகத்தில்" வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.   

இந்த இடத்தில், மற்றுமொரு விஷயமும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள படி, நமது பாவ-புண்யம் காரணமாக ஒரு ஆன்மா யமலோகம் சென்று விட்டால், அந்த இடத்தில் அனுபவிக்கும் வேதனைகள் காரணமாக அதன் பின்னர் அங்கிருந்த படியே முழு மனதுடன் பக்தி செய்யும் எண்ணம் வராது. அதனால், அவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்காக (அந்த ஆன்மாவிற்காக) நாம் ப்ரார்த்தனை செய்வதன் மூலம் அவரை மீண்டும் வைகுண்டம்  சென்றடைய முயற்சி செய்யலாம். குறைந்த பட்சம் அவரது பாவங்கள் குறைவதற்காக  பூலோகத்தில் வாழும் நாம் செய்யும் முயற்சி இது என சொல்லலாம். 
இப்பொழுதும் பலர் தொடர்ந்து முன்னோர்களுக்காக 'தர்ப்பணம்' (அ) 'திதி கொடுப்பது' என்று செய்து வருவதை இதற்கு நிகரான உதாரணமாக சொல்லலாம்...
நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" மூலமாக மிகப் புண்யமான இந்த மஹாளய பக்ஷ காலமான 15 நாட்களும், தினசரி அன்னதானம் வழங்கி வருகிறோம். நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய அந்த பரம்பொருளுக்கு எமது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்...

சரி, மீண்டும் புராணத்தினுள் புகுவோம்...
உன் தந்தை, இதில் இருந்து மீள ஒரு உபாயத்தையும் கூறினார், அஸ்வினி மாத கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய "இந்திர ஏகாதசி" விரதத்தை நீயும், உனது குடும்பத்தாரும் முறையாக அனுஷ்டித்து அதன் முழு பலனையும்  அவருக்கு தானமாக வழங்க முடியும். அதன் மூலம் அவர் "யம லோகத்தில்" இருந்து விஷ்ணுவின் பாதத்தில் உள்ள "வைகுண்டம்" சென்று மோட்சத்தை அடைவார், என்று நாரத முனி இந்திரசேனா-விடம் கூறினார்.

இதனை, மிகவும் சிரத்தையாக கேட்டுக்கொண்ட அரசர் இந்திரசேனா, நாரத முனிவரிடம், "இந்திர ஏகாதசி" விரதம் அனுஷ்டிக்கும் முறையை பற்றி தெளிவாகக் கூறுமாறு வேண்டினார்...

நாரத முனி கூறிய விரத முறை என்ன ?

நாரத முனியும் மகிழ்ந்து, 
ஓ, மன்னா, "இந்திர ஏகாதசிக்கு முதல் நாள் (தசமி திதி) அன்று ஒருவேளை மட்டும் உணவு அருந்தி அன்று முழுவதும் பகவான் விஷ்ணுவை நாமஜெபம் செய்து அன்று இரவு தரையில் படுத்து உறங்கி, ஏகாதசி அன்று முழுவதும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல் உபவாஸம் இருந்து விஷ்ணு நாமாவை ஜெபித்துக்கொண்டு இருந்து விட்டு, அதற்கு அடுத்த நாள் (துவாதசி திதி) அன்று பிராமணர்களுக்கு உணவளித்து விட்டு அதன் பின்னர் நீயும், உனது குடும்பத்தாரும் உண்டு உபவாஸத்தை நிறைவு செய்து கொள்ளலாம்". அதன் பின்னர் உங்கள் அனைவரது புண்ய பலனை உனது தந்தைக்கு தானம் செய்வதன் மூலம், அவர் 'வைகுண்ட பிராப்தி'  பெறுவார் என்று கூறினார். 

இதனைக் கேட்ட இந்திரசேனா, மிகவும் மகிழ்வுற்று அவ்வாறே செய்வதாக உறுதி அளித்தார். உடனே, நாரத முனி, மன்னரை ஆசிர்வதித்து விட்டு அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டார்.

மன்னரும், அவர் மட்டுமல்லாது, மன்னரது புத்திரர்கள் மற்றும் அவரது அரண்மனை ஊழியர்கள் உட்பட அனைவரும் "இந்திர ஏகாதசி" விரதத்தை அனுஷ்டித்தனர்.  அனைவரும் அந்த பலனை இந்திரசேனனின் தந்தைக்கு தானம் அளித்தனர். இதன் மூலம், அவரது ஆன்மாவும், யம லோகத்தில் இருந்து பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பரமபதம் சென்று அடைந்தது...

அதன் பின்னர், பல வருடங்கள் மன்னர் இந்திரசேனன் நல்லாட்சி புரிந்து அவரது மறைவுக்கு பின் நேரடியாக "வைகுண்டம்" சென்று சேர்ந்தார்... 

இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர், "இந்திர ஏகாதசி" விரத மகிமையை பற்றி மஹாராஜா யுதிஷ்டிரரிடம்  எடுத்து கூறினார்.

மேலும், இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களும், இந்த புண்ய கதையை கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்து சொல்பவர்களும் மிகுந்த புண்யத்தை அடைவார்கள் என்று "ப்ரம்ம வைவர்த்த புராணம்" எடுத்துரைக்கின்றது...

ஓம் நமோ நாராயணாய...
ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'இந்திர ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் (உடல்நிலை ஒத்துழைப்பவர்கள் மட்டும்) ஏகாதசி முதல் நாள் தசமி அன்று, ஒரு வேளை மட்டும் அன்னம் எடுத்துக்கொண்டு மீதி இரு வேளைகள் பலகார வகைகளாக (இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி) உணவு எடுத்துக் கொள்ளலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள் (உடல்நிலை ஒத்துழைப்பவர்கள் மட்டும்), ஏகாதசி அன்று முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம். 
  • (இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

Editors Note:

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
 'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....  (W05) 

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு:  
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...) 

ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த