Skip to main content

தமிழ் புத்தாண்டு பலன்கள் (14-04-2014 முதல் 13-04-2015 வரை) - தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம்



தமிழ் புத்தாண்டு பலன்கள்: பகுதி 3 / 3  

நன்றி: தினமலர் 

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் 

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம்1) ஏற்றமும் இல்லை, தாழ்வும் இல்லை! - 65/100
குரு பகவானை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

 இந்த ஆண்டு சீரான பலனை காணலாம். அதிக ஏற்றமும் இல்லாமல், தாழ்வும் இல்லாமல் இருக்கும். உங்கள் ஆட்சி நாயகனான குரு, உங்கள் ராசிக்கு7-ம் இடமான மிதுனத்தில் உள்ளார். இது சிறப்பான அம்சம். அங்கு அவரால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பானது அல்ல. அங்கு பொருள் விரயத்தையும், வீண் விரோதத்தையும் தரலாம்.ராகு தற்போது 11ம் இடமான துலாமில்,சனிபகவானோடு இணைந்து இருக்கிறார். அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார்.

அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாகஇருப்பர். ஜூன் 21ல், ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில்தொல்லைகளையும் தரலாம். கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாகபாதிக்கப் படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். கேது ஜூன் 21-ந் தேதி கேது 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார்.

இதன் மூலம் தீயோர்  சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம்.பயணத்தின் போது சற்று கவனம் தேவை. சனிபகவான் தற்போது 11-ம்இடமான துலாமில் உள்ளார். இது சாதகமான இடம். பல்வேறுநன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். தற்போது  சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் அவரால்  உங்களுக்கு சாதகமாக முழுமையாக செயல்பட முடியாமல் போகும். அதேநேரம், அவர் வக்கிரம் அடைந்தாலும் துலாம் ராசியில்தான் இருக்கிறார். இதனால் பாதக முடிவு அதிகம் இருக்காது. எனவே கவலை வேண்டாம். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு  மாறுகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.

சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்புவரலாம். வெளியூர் பயணம்ஏற்படும். எதிரிகளின்இடையூறு அவ்வப்போதுவரலாம். அதற்காக, நீங்கள் அஞ்ச வேண்டாம்.காரணம், சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். உறவினர்கள் வகையிலும் பிரச்னை அகன்றுஅன்யோன்யம் பிறக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம்.

தொழில், வியாபாரம்: வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஆனால் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். போட்டியாளர்கள் சதியை எளிதில் முறியடிக்கலாம். எதிலும் அதிகமுதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும். பணவிரயம், பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும். வெளியூர் பயணம் அனுகூலம் தரும். ஜூன் முதல் அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில் தொடங்க வேண்டாம்.

பணியாளர்கள்: ஜூன் வரை சிறப்பான நிலை இருக்கும். புதிய பதவி கிடைக்கப் பெறலாம். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகள்: கடும் முயற்சி செய்தாலும், பதவி கிடைப்பது சிரமமாகவே இருக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் மேன்மையும், ஜூன் முதலான அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்தும் படிக்க வேண்டியிருக்கும்.


மகரம்:
(உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2) முன்னேற்றப்பாதை! - 80/100
சனி பகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மகர ராசி அன்பர்களே!
 கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான், பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருப்பார். குறிப்பாக, தொழிலில் சிறுசிறு பின்னடைவு, உங்கள் செல்வாக்கில் தளர்ச்சி உருவாக்கி இருப்பார். குரு, ராகு-கேது என முக்கிய கிரகங்கள் எதுவுமேசாதக மாக இல்லாததும் ஒரு காரணம். இந்த ஆண்டு பின்தங்கிய நிலையில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்திற்கு வழிவகை காண்பீர்கள்.ஜய ஆண்டின் தொடக்கத்தில், குரு 6-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு அவரால் நன்மை தரமுடியாது

அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். ஜூன்13ல், குரு, மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 7-ம் இடமான அங்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு உயர்வு கிடைக்கும்.ராகு தற்போது 10-ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். ஆனால், குரு பார்வை படுவதால் அவரால் கெடுபலனை தர முடியாது. ஜூன் 21ல், ராகு 9-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அவரால் முயற்சிகளில் தடை,எதிரிகளின் இடையூறு வரலாம்.கேது தற்போது 4-ம் இடத்தில் இருந்துஉங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளை தரலாம்.

அவர் ஜூன்21ல் மீனத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். சனி பகவான், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருக்கிறார். துலாம் ராசியில் இருக்கும் அவரால், சிறப்பானபலனைத் தர இயலாது. அவரால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோகச் செய்யலாம். இதைக் கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் தற்போது அவர் வக்கிரம்அடைந்துள்ளார். பொதுவாக எந்த கிரகம் வக்கிரம் அடைந்தாலும் அவர்களால் பழைய பலனை தர இயலாது. அந்த வகையில் சனிபகவானால் உங்களுக்கு கெடு பலனை தர இயலாது. டிசம்பர் 16ல், இவர் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளை தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.கணவன்- மனைவி இடையே அன்பு மேம்படும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்

ஜூன் 21க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும்.தொழில், வியாபாரம்: எதிரிகளின் தொல்லையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். சனி வக்கிரமாகி இருப்பதால் சற்று முன்னெச்சரிக்கை வேண்டும். டிசம்பர் 16க்கு பிறகு முதல் அதிக வளர்ச்சி காணலாம். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: சீரான முன்னேற்றம் காணலாம்.அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஜூன் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள், இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு கிடைக்கும். சிலர் மிக அதிகாரமிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள்: ஜூன் முதல் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: நல்ல வளத்தோடு புதியபதவியும் கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள்: அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். ஜூனில் துவங்கும் அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காணலாம். போட்டி,பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகள்: புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாகஇருக்கும்.

பெண்கள்: புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆண்டின்பிற்பகுதியில், குழந்தை பாக்கியமும், மன நிம்மதியும் பெறலாம். உடல் நலம் சிறப்பாகஇருக்கும். பிள்ளைகள்உடல்நலனில் சற்றுகவனமாக இருக்கவும்.

கும்பம்:
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஜீன் வரை யம்மா ஜீலை முதல் சும்மா! - 65/100
சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரைநட்பாக கொண்ட  கும்ப ராசி அன்பர்களே!

குரு-கேதுவால், இந்த ஆண்டு தொடக்கம்உங்களுக்கு பிரகாசமாக அமையும். குருபகவான் தற்போது 5-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 6-ம் இடமான அங்கு அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு,மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.ராகு தற்போது 9-ம் இடமான துலாமில் சனிபகவானோடு உள்ளார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை இருக்கும்

ஜூன்21ல் இவர் 8-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். கேது தற்போது 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், காரிய அனுகூலத்தை யும் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் ஜூன்21ல் இடம் பெயர்ந்து மீனத்திற்கு வருகிறார். இதனால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும்.சனி பகவான் 9-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்றுசொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம்.

சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்துவிருச்சிகத்திற்கு மாறுகிறார். 10-ம் இடமான அங்கு அவரால் சிறப்பான பலனை தர இயலாது. தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாகநோகச் செய்யலாம்.

ஆண்டின் தொடக்க காலத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் நிலவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். சிலர் முயற்சி எடுத்து வீடு, மனை வாங்கலாம். ஜூனுக்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.தொழில், வியாபாரம்: ஜூன் வரை தொழில்,வியாபாரத்தில் தடையில்லா வளர்ச்சி இருக்கும். லாபத்துக்கு குறை இருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். ஜூலை முதல் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு தலைதூக்கலாம்.

பணியாளர்கள்: ஜூன் வரை பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் திறமை மேம்படும். இடமாற்ற பீதி இருக்காது. புதிய பதவிகளை பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் அதிகாரமிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். ஜூலை முதல் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம்அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம்.

மாணவர்கள்: இந்த ஆண்டு சிறப்பான பலனைகாணலாம். போட்டிகளில் வெற்றிகாணலாம். ஜூனில் துவங்கும் அடுத்த கல்வி ஆண்டில்தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காணலாம். இந்த ராசி மாணவர்களின் பெற்றோர்,தங்கள் மகனின் நண்பர்கள் வட்டாரம் நல்லது தானா என்பதை கவனித்து வரவேண்டும்.

கலைஞர்கள்: ஜூன் வரை பெயரும், புகழும்கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம்கிடைக்கும். ஜூலை முதல் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம்.

அரசியல்வாதிகள்: பிரதிபலனைஎதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். அதிக லாபம் இராது.

விவசாயிகள்: அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். நெல், கோதுமை, கடலை பயிர்களில் நல்ல விளைச்சல் காணலாம். வழக்கு விவகாரங்கள்சாதகமாக அமையும்.

பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சிகாண்பர். பிறந்த வீட்டில்இருந்தும் பொருட்கள் வரும்.உறவினர்கள்  ஒன்று சேருவர்.விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு  கோயில்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். பிள்ளைகள்உடல் நலம் தேறும்.

மீனம்:
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம்! - 70/100
குருவை ஆட்சி நாயகனாக கொண்டமீன ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு பிற்பகுதியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அதிக கெடுபலன்கள் நடக்காது. தற்போது குரு 4-ம் இடமான மிதுன ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்கலாம். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 5-ம் இடமான அங்கு அவர் நன்மை தருவார். பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார்.நிழல் கிரகமான ராகு 8-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அவர் தடைகளையும், உறவினர்கள் வகையில் மனக்கசப்பையும் ஏற்படுத்துவார்

ஜூன்21ல், ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அப்போது, அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும்.வெளியூர் வாசம் நிகழும்.கேது 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார்.அங்கு பொருள் விரயத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தந்து கொண்டிருக்கிறார்.
ஜூன்21ல்இடம் பெயர்ந்து, உங்கள் ராசிக்குவருகிறார். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம்.சனி பகவான்உங்கள் ராசிக்கு 8ம் இடமானதுலாம் ராசியில் உள்ளார். அஷ்டமத்தில் சனி பகவான், உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் பொதுவான பலன்தான்

ஆனால், இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். தற்போது சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளதால் அவரால் கெடுபலனை செய்ய முடியாது. மாறாக நன்மை ஓரளவு கிடைக்கும். டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். 9-ம் இடமான அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பிள்ளைகளால் பெருமைகிடைக்கும். விருந்து, விழாவென சென்று வருவீர்கள். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து விரும்பத்தகாத செய்தி வரலாம். ஜூன் மாதம் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் முயற்சி எடுத்து புதிய வீடு கட்டலாம். வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரம்: பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு கட்டுக்குள் இருக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பெண்களால் இருந்து வந்த தொல்லை மறையும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டையே போடவும். ஜூன் மாதம் முதல் அரசு வகையில் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலைப்பளு இருக்கும். ஜூன் முதல் வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆண்டின் பிற்பகுதியில் தெய்வ அனுகூலம் இருப்பதால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள்: நல்ல புகழும், பெயரும் கிடைக்கப் பெறுவர். பண வரவு பரவாயில்லை. போட்டிகளை சமாளிக்கும் திறமையும் இருக்கும்.

அரசியல்வாதிகள்: திருப்தியான நிலைஇருக்கும். ஜூன் முதல் பதவிகள், புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள்: ஜூன் வரை முயற்சி எடுத்து படித்தால் வெற்றிகிட்டும். அடுத்த கல்விஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைக்க பெறலாம்.

விவசாயிகள்: உழைப்புக்கு தகுந்த பலன் உண்டு. மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலைபெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.


பெண்கள்: குடும்பத்தில் முக்கியத்துவம் ஏற்படும். பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும். உடல்நலம் சிறப்படையும்.

Comments

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த