Skip to main content

Posts

இரத்த அழுத்தம் / தலை சுற்றல் - ஆயுர்வேதம் கூறும் எளிய உணவு முறை...

இரத்த அழுத்தம் மற்றும் தலை சுற்றல் தீர,ஆயுர்வேதம் கூறும் எளிய உணவு முறை என்ன ?  நவீன மருத்துவம் கூறுவது என்ன ? ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தத்தை ரத்த அழுத்தம் என்கிறோம். ஆறு வயதுக் குழந்தைக்கு 90/60 mm of Hg என்பது இயல்பான ரத்த அழுத்தம். இளமையில் 120/80 mm of Hg முதல் 140/90 mm of Hg வரை இயல்பானது. இதற்கு மேற்பட்டு காணப்படுவது ரத்த அழுத்த நோயாகும். ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஏற்படும் கொழுப்பு அடைப்பு அல்லது கொழுப்புடன் கூடிய சுண்ணாம்புச் சத்து படிவங்கள் அந்தச் சுவர்களைக் கடினமாக்குவதால் ஏற்படும் உபாதை இது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேதம் கூறுவது என்ன ? மனதைச் சார்ந்த 'ரஜஸ்' எனும் தோஷமும் உடலைச் சார்ந்த 'வாதமும்', 'பித்த' தோஷமும் சீற்றமடைவதால் தலைச்சுற்றல் ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இவையே ரத்த அழுத்தத்திற்கும் காரணமாகலாம் என்பதை ஊகித்தறியலாம்.  இந்தத் தோஷங்களின் சீற்றம் ஏற்படக் காரணமாக – முறையற்று மனம் போனபடி உடலுக்கொவ்வாததை உண்பதும், புளிப்பும், உப்பும், உறைப்பும் அதிக...

தைப்பூசம் வழிபாடு / சிறப்புகள் என்னென்ன ?

தைப்பூசம் வழிபாடு / சிறப்புகள்:  முருகப்பெருமானின் முக்கியமான விழாக்களில் ஒன்றானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திரங்களில் 8-வது நட்சத்திரமான 'பூசம்' , தை மாதத்தில் வரும்பொழுது (அன்று பௌர்ணமியும் சேர்ந்து வரும்) தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.  தைப்பூச தினத்தன்று நிகழ்ந்துள்ள பல்வேறு அற்புத நிகழ்வுகளை நாம் கண்டோமேயானால், இந்த தினத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.   அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான், தனது தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய தினம் 'தைப்பூசம்' ஆகும். ஆகவே, வெற்றி பெறுவதற்கு உகந்த விஷயங்களை செய்வதற்கு ஏற்ற நாள் ஆகும்.  முற்காலங்களில், தைப்பூச தினத்தன்று 'புனித நீராடல்' நடைபெற்று வந்திருக்கின்றது. 'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று இதன் பெருமையினை அப்பர் பாடுகிறார். மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின், ப்ரம்மஹத்தி தோஷம் (அந்தணரை கொன்ற தோஷம்) நீங்கப்பெற்றது இது போன்ற ஒரு 'தைப்பூச' திருநாளில் தான். சோழ நாட்டை ஆண்டு வந்த 'அம்சத்வன்' என்ற அரசனது  ப்ரம்மஹத்தி தோஷம் , திருவிடைமருதூரில...

'அக்னிஸ்தோமா' யாகம் செய்த பலன் கொடுக்கும் ஜெய ஏகாதசி...

பைமி ஏகாதசி / ஜெய  ஏகாதசி... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) வளர்  பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "பைமி ஏகாதசி அல்லது ஜெய ஏகாதசி" ( Bhaimi  Ekadasi / Jaya Ekadasi )  என்று    அழைக்கப் படுகின்றது.   பைமி ஏகாதசி / ஜெய ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர ' புராண விளக்கம்:  யுதிர்ஷ்ட மஹராஜா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார், 'ஓ பகவானே, மக மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி 'திலா ஏகாதசி' என்றும் அதன் பெருமைகளையும் கூறினீர்கள், ஓ வாசுதேவா, அதே மக மாதத்தில் 'சுக்ல பட்சத்தில்' வரக்கூடிய 'ஏகாதசி'யின் பெயரையும் அதன் பெருமைகளையும் பற்றி கூறுங்கள் என்று கேட்கிறார்... OTA Youtube Channel ஓ யுதிர்ஷ்டிர மஹராஜ்,  செய்த பாவங்களையு...

திருமண மந்திரங்கள்-உண்மையான சாஸ்திர அர்த்தம் என்ன?

திருமண மந்திரங்களின் உண்மையான அர்த்தம் என்ன ? சாஸ்திரங்கள் கூறும் உண்மையான அர்த்தம் பற்றி ' மகாமகோபாத்யாய' "ஸ்ரீ சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்" விளக்கம்  ? நன்றி: சக்தி விகடன் தி ருமண மந்திரங்கள் அபத்தமானவையா ? ? இல்லவே இல்லை... அவை மிகப் புனிதமானவை; ஆழமான அர்த்தம் பொதிந்தவை.  இது குறித்து 'மகாமகோபாத்யாய' ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்திரிகள், 2005- ம்  ஆண்டு  "சக்தி விகடனில்" எழுதிய விரிவான கட்டுரையை, இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்’ என்று ஒரு பழமொழி. இதற்கு ஏதேதோ அர்த்தங்கள் சொல்கிறார்கள். ஆனால், கல்யாணத்தின்போது இதற்கு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பொருளே வேறு. மணப்பெண் - மணமகள் இருவருமாகச் சேர்ந்து அக்னி பகவானிடம் வேண்டுகிறார்கள். அப்படி வேண்டுவது பதினாறு விஷயங்களை. அவற்றை அக்னி பகவான் அருள, இவர்கள் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கிறார்கள். சரி, அந்தப் பதினாறு வேண்டுதல்கள் என்னென்ன? பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கல்யாணம் வரை யிலும் உள்ள கால இடைவெளியை மூன்று பிரிவாகப் பிரித்து, ஒவ்வொரு பிரி...

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்ர ஸத நாமாவளி ...(தமிழில்)

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்ர ஸத நாமாவளி (தமிழில்)... சத்-திலா ஏகாதசி அன்று சொல்லவேண்டி, விஷ்ணு அஷ்டோத்திர ஸத நாமாவளி பற்றி பலரும் நமது Whatsapp குழுவில் கேட்டதால் இதோ...  விஷ்ணு அஷ்டோத்திரம் 'சத்-திலா ஏகாதசி' அன்று ஒருநாள் மட்டும் தான் சொல்லவேண்டும் என்பதில்லை. வாய்ப்பு இருக்கும் பொழுது தினமும் கூறலாம். 'சத்-திலா ஏகாதசி' யின் விரத மகிமை பற்றி அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்... ஹரி ஓம்... ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ வெங்கடேசாய... ...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்... நன்றி ... ஒரு துளி ஆன்மீக ஸேவையில், தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,  திருநெல்வேலி... 

துரதிர்ஷ்டம் மற்றும் வறுமை நீக்கும் ஷட்-திலா ஏகாதசி மகிமை...

ஷட்-திலா ஏகாதசி /  மக க்ருஷ்ண  ஏகாதசி... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) தேய்  பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "ஷட்-திலா  ஏகாதசி" ( Sat-Thilaa Ekadasi)  என்று    அழைக்கப் படுகின்றது.  ('திலா' என்றால் 'எள்' என்று அர்த்தம்)  ஷட்-திலா ஏகாதசி பற்றி 'பவிஷ்ய-உத்தர ' புராண விளக்கம்:  சிகீதையன் என்பவரது மகனான தல்ப்ய மகரிஷி, ப்ரம்மாவின் வழித்தோன்றலான புலஸ்திய முனிவரிடம் கேட்கிறார் ... முனிவரே,  இந்த உலகத்தில் ஒரு ஆன்மா ஒரு உடலை எடுத்தவுடன், பல பாவங்களை செய்யும் எண்ணம் வந்து விடுகிறது. திருடுதல், தவறான உறவு, மேலும் மிக உயர்ந்த பாவமான ப்ராமணரை கொல்லுதல் போன்ற பாவச்செயல்களை செய்கின்றனர். இதன் மூலம் பர வாழ்வில் அவ...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status