"தாம்ரபர் ணீ மஹா  புஷ்கரம்" - பொருள் புரிந்து கொள்ள வேண்டுமா ???       இதற்கு முந்தைய பதிவுகளில் "தாம்ரபர்ணீ" நதியின் பெருமைகளை  பற்றி வரிசையாக பார்த்தோம்... இப்பொழுது வெகு விமரிசையாக பேசப்பட்டு வரும் "புஷ்கரம்" என்றால் என்னவென்று பார்ப்போம்...         ஆற்றுப்  பாய்ச்சலில்  அழகிய  புஷ்கரம்:     பிரம்மாவை  எண்ணி  தியானம்  செய்தார்  பிரஹஸ்பதி  என்கிற  வியாழகுரு . அவர்  எதிரில்  போய்  பிரம்மா  நிற்க , பிரம்ம  கமண்டலம்  தனக்கு  வேண்டும்  என்று  யாசித்தார்  அந்தப்  பெருங்கிரஹத்தார் . தியானம் , தவம்  ஆகியவற்றை  முறையாகச்  செய்து  முறையாக  யாசித்தால் , கேட்டதைக்  கொடுப்பதில்  என்ன  தடை ? அதுவும்  மண்ணால்  ஆன  கமண்டலம்தானே , கொடுத்துவிட்டால்  போயிற்று ! வியாழகுருவோ , கோள்களில்  மிக  நல்லவர்  என்று  பெயர்  வாங்கியவரும்கூட ; ஆகவே  அவருக்குத்  தருவதில்  தவறில்லை  என்று  கருதிய  பிரம்மா , கமண்டலத்தைக்  கொடுத்துவிட்டார் .     தம்  கையில்  கமண்டலத்தைப்  பிடித்து  பிரம்மா  நீட்ட , பெற்றுக்  கொள்வதற்கு  வியாழன்  முயல ... கமண்டலமோ  கைவிட்டு  அகல  மறுத்தது . மண்  கமண...