நாம்  நம்மை அறியாமல்,  பசுவிற்கு செய்த பாவம் தீர்க்கும் ' பவித்ரோபன ஏகாதசி' விரத  மகிமை...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....        'ஸ்ரவன' (Shravana) மாதம்,  ( July / August )   வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பவித்ரோபன ஏகாதசி" (அ) "ஸ்ரவன சுக்ல பட்ச  ஏகாதசி"  ( Pavithropana Ekadasi)   என்று  அழைக்கப்  படுகின்றது.      பவித்ரோபன  ஏகாதசி   பற்றி 'பவிஷ்ய புராண' விளக்கம்:      யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, மதுஸூதனா,   ஸ்ரவன  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெர...