நெல்லிக்காய் = செவிலித்தாய் !!!      மருந்துப்பொருள்களில்  தாயாராகும்  வாய்ப்புக்  கடுக்காய்க்கும் , செவிலித்தாயாகும்  வாய்ப்பு  நெல்லிக்காய்க்கும்  உண்டு . கடுக்காயை   தசமாதா  ஹரீதகீ   என்றும் , நெல்லிக்காயை   தாத்ரீ   என்றும்  அழைப்பர் . இரண்டிற்கும்  பலவகைகளில்  ஒற்றுமை  உண்டு . இரண்டும்  உப்புசுவை  தவிர  மற்ற  ஐந்து  சுவைகள்  உள்ளவை . கடுக்காய்  கிடைக்காவிடத்திலும்  கடுக்காயைப்  பயன்படுத்தமுடியாமல்  ஆனால்  அதே  குணமுள்ள  பொருள்  ஒன்றைப்  பயன்படுத்த  வேண்டியவிடத்திலும்  நெல்லிக்காயை  உபயோகிக்கலாம் .       ஹரீதகீம்  பஞ்சரஸாமுஷ்ணாமலவணாம்  சிவாம்   தோஷானுலோமனீம்  லக்வீம்  வித்யாத்  தீபனபாசனீம்   ஆயுஷ்யாம்  பௌஷ்டிகாம்  தந்யாம்  வயஸஸ்தாபனீம்  பராம்   யாந்யுக்தானி  ஹரீதக்யா  வீர்யஸ்யது  விபர்யய :  என்கிறார்  சரகர் .   தாய்  உதவமுடியாத  நிலையில்  செவிலித்தாய்  உதவுவதுபோல  கடுக்காய்  ( மாதா ) உதவமுடியாத  நிலையில்  உணவாகவும்  மருந்தாகவும்  நெல்லிக்காய்  ( தாத்ரீ ) பயன்படுகிறது . திரிபலை  என்ற  முக்கனிக்  கூட்டில்  இவ்விரண்டிற்குமே  இடமுண்டு . ம...