இந்து  மதத்தின்  அற்புதங்கள்:    நம்  கோவில்களில்  ஏராளமான  அற்புதங்கள்  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .     சிக்கல்  சிங்காரவேலர்  கோவிலில்  சூரசம்ஹாரத்திற்காக  முருகன்  அம்பிகையிடம்  வேல்வாங்கும்போது  முருகனின்  திருமேனி  முழுவதும்  வியர்வை  பெருகுகிறது .     திருநாகேஸ்வரம்  சிவன்  கோவிலில்  ராகுகாலத்தில்  மட்டும்  சிவபெருமானுக்கு  செய்யப்படும்  அபிஷேக  பால்  நீலநிறமாகிறது .      நாகர்கோவில்  கேரளபுரம்  சிவன்  கோவிலில்  விநாயகர்  ஆறுமாதகாலம்  கருப்பாகவும் , ஆறுமாதம்  வெண்மைநிறமாகவும்  காட்சி  தருகிறார் .    வழிபாடு  செய்யப்பட்ட  சாணிப்பிள்ளையாரை  கரையான்கள் , வண்டுகள்  அரிப்பதில்லை .      திருபுறம்பியம்  சுவேத  விநாயகருக்கு  அபிஷேகம்  செய்யப்படும்  தேன்  முழுவதும்  உறிஞ்சப்படுகிறது .     ஆந்திராவில்  மங்களகிரியில்  பானகரம்  தயாரித்து  பானகநரசிம்மர்  கோவிலில்  நரசிம்மர்  வாயில்  ஒரு  அண்டா  அல்லது  ஒரு  தம்ளர்  ஊற்றினால்  பாதியை  உள்வாங்கிக்கொள்கிறார் . மீதி  பாதியை  பிரசாதமாக  வழங்குகின்றனர் .     கும்பாபிஷேகம்  மற்றும்  ஐயப்பனின்  திருவாபரண  பெட்டியை  எடுத்துச்  ச...