ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய   ஷண்முக கவசம்...          அண்டமாய்  அவனியாகி  அறியொணாப்  பொருள  ( து ) ஆகித்    தொண்டர்கள்  குருவுமாகித்  துகள்  அறு  தெய்வமாகி  எண்திசை  போற்ற  நின்ற  என்அருள்  ஈசன்  ஆன  திண்திறள்  சரவணத்தான்  தினமும்  என்  சிரசைக்  காக்க . ... ... ... ... (1)   ஆதியாம்  கயிலைச்  செல்வன்அணிநெற்றி  தன்னைக்  காக்க  தாதவிழ்  கடப்பந்  தாரான்  தானிரு  நுதலைக்  காக்க  சோதியாம்  தணிகை  ஈசன்  துரிசுஇலா  விழியைக்  காக்க  நாதனாம்  கார்த்தி  கேயன்  நாசியை  நயந்து  காக்க . ... ... ... ... (2)   இருசெவிகளையும்  செவ்வேள்  இயல்புடன்  காக்க , வாயை  முருகவேள்  காக்க , நாப்பல்  முழுதும்நல்  குமரன்  காக்க  துரிசஅறு  கதுப்பை  யானைத்  துண்டனார்  துணைவன்  காக்க  திருவுடன்  பிடரி  தன்னைச்  சிவசுப்ர  மணியன்  காக்க . ... ... ... ... (3)   ஈசனாம்  வாகுலேயன்  எனது  கந்தரத்தைக்  காக்க  தேசுறு  தோள்  விலாவும்  திருமகள்  மருகன்  காக்க  ஆசிலா  மார்பை  ஈராறு  ஆயுதன்  காக்க , எந்தன்  ஏசிலா  முழங்கை  தன்னை  எழில்  குறிஞ்சிக்கோன்  காக்க . ... ... ... ... (4)   உறு...