Skip to main content

Posts

கார்த்திகை தீப ஸ்லோகம் மற்றும் அதன் பொருள் என்ன ?

கார்த்திகை தீப ஸ்லோகம் என்ன ? அதன் அர்த்தம் என்ன ?  கார்த்திகை தீபம் ஏற்றும் பொழுது என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று நமது 'ஒரு துளி ஆன்மீகம்' குழுவில்  அன்பர் ஒருவர் இந்த சிறியவனிடம்  கேட்டிருந்தார். வழக்கம் போல  இந்த சிறியவன் பதில் தேடி செல்லும் இடம் எங்கே ? ஆம், அந்த மஹா பெரியவா தான் ... இதோ மஹா பெரியவா, அருளிய  தகவல் 'தெய்வத்தின் குரலில்' இருந்து...  கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும் போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: | த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: || இதன் அர்த்தம் என்னவென்றால்... "புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற விருட்சமோ, (மரம்) இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யர்களு...

கார்த்திகை தீபம் - உண்மையான பொருள் என்ன ?

கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை...   நினைத்தாலே  முக்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. இது அனைத்து உயிர்களுக்கும் பக்குவத்தைத் தந்து மேலான வீடுபேற்றினைக் கொடுக்கக் கூடியது. ‘நான் இந்த உடம்பே’, என்ற அறியாமையால் தன்னை இறைவனிடமிருந்து வேறுபடுத்தி உயிர்கள் பிறவிச் சுழலில் உழல்கின்றன. ‘எங்கும் நிறைந்த பரம்பொருளே நாம்’, என்று அனுபவத்தில் உணர்த்தி அதில் நிலை நிறுத்துவதே பல்வேறு சமயங்களின் மற்றும் தத்துவங்களின் நோக்கமாகும். இந்திய சமய, சமுதாய, கலாச்சாரங்கள் அனைத்தும் இதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது தமிழ் பழமொழியாகும். கலைகளின் கூடங்களாகக் கோயில்கள் விளங்குகின்றன. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது இதனை நினைவுறுத்தும். இந்த உடலானது பஞ்சபூதங்களால் ஆனது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்’ என்று இறைவனது இருப்பிடமாக உடல் கருதப்படுகிறது. இதனை நினைவூட்டவே, திருவண்ணாமலை (அக்னி) காளஹஸ்தி (காற்று) சிதம்பரம் (ஆகாசம்) காஞ்சி மற்றும் திருவாரூர் (மண்) திருச்சி (நீர்) ஆகிய நகரங்களில் பிரமாண்டமான ஆலயங...

ஆயுர்வேதம் - பற்கள் பாதுகாப்பு / கறை நீங்க / பற்கள் பளிச்சிட...

அகத்தின் அழகு முகத்தில்... முகத்தின் அழகு புன்சிரிப்பில்...  காலையில் எழுந்தவுடன் பற்களைத் தேய்க்க நாம் உபயோகப்படுத்தும் பற்பசைகள் பெரும்பாலும் இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கின்றன.   சுவையல்ல, அதிலுள்ள மூலப்பொருட்கள்தான் பற்களை சுத்தமாக்குகின்றன என்று அந்த நிறுவனத்தார் வாதிடக் கூடும். ஆனால் வாயிலுள்ள ஊத்தை, நாற்றம், பற்களிலுள்ள மஞ்சள் கறை ஆகியவற்றை கசப்பும் துவர்ப்பும் காரமும் கொண்ட மூலிகைப் பொருட்களால் மட்டுமே முழுவதுமாக நீக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.  இச்சுவைகளைக் கொண்ட எட்டு மூலிகை மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, இந்துப்பு, வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து நன்கு இடித்துத் துணியால் சலித்து அதில் 120 மி.லி தேனும் 20 மி.லி. நல்லெண்ணெயும் விட்டுக் குழப்பி வைத்துக் கொள்ளவும்.  நடு விரலையும் மோதிர விரலையும் இந்த மூலிகைப் பற்பொடியில் தோய்த்து ஒவ்வொரு பல்லையும் தனித்தனியே கீழும், மேலுமாகத் தேய்ப்பது நல்லது. கடைவாய்ப் பற்களில் அதன் மேலேயும், பக்கவாட்டிலும் தேய்க்கவும். அதன்பிறகு க...

ஸ்ரீ ரமண மகரிஷி பால பருவம்... (Part-1)

வேங்கட ராமன் என்ற ஸ்ரீ ரமண மகரிஷி பால பருவம்: அன்றைய (1879ம் வருடம்)  மதுரை ஜில்லாவில் ஓர் அழகிய கிராமம்,  திருச்சுழி.  (அருப்புக்கோட்டை அருகில்) அங்கு  ஸ்ரீ சுந்தரம் ஐயர், கண்ணியமான வக்கீல் தொழில் நடத்தி வந்தார். அவரது மனைவி அழகம்மாள்.  அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் மற்றும் ஒரு புதல்வி. இரண்டாவது குழந்தையாகிய ரமணர் 1879-டிசம்பர்-30ம் தேதி அன்று பிறந்தார். அவருக்கு  வேங்கடராமன் என்று நாமகரணம் செய்தனர்.   (நால்வரது இயற்பெயர்: நாகஸ்வாமி, வேங்கடராமன், நாகசுந்தரம், அலமேலு)  அவரது தந்தை அக்ஷராப்யாசமானதும் குழந்தை வேங்கடராமனை உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அவரது ஏழு வயதில் அவருக்கு 'உபநயனம்' செய்வித்தார்கள்.  பின்னர், திண்டுக்கல்லில் ஒரு வருடம் தங்கியிருந்து ஐந்தாவது வகுப்பு வரை  படித்தார்.  அதற்குப் பின் மதுரைக்குப் போய் ஸ்கார்ட்ஸ் மிடில் ஸ்கூலிலும், மிஷன் ஹைஸ்கூலிலும் கற்றார். ஒருநாள் உறவினர் ஒருவர் வந்திருந்தார். “எங்கிருந்து வருகிறீர்?” என்று வேங்கடராமன் குசலம் விசாரித்தார். ‘அர...

மோக்ஷ ஏகாதசி / கைசிக ஏகாதசி - சிறப்புகள் என்ன ?

மோக்ஷ ஏகாதசி / கைசிக   ஏகாதசி நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  கார்த்திகை மாதத்தில், வளர்  பிறையில் (சுக்ல பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "மோக்ஷ  ஏகாதசி"  (Moksha Ekadasi) என்று    அழைக்கப் படுகின்றது.   மேலும் இது 'கைசிக  ஏகாதசி' (Kaisika  Ekadasi)   என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது மூன்று   முக்கிய விஷயங்கள் ; 1.   மோக்ஷ ஏகாதசி பற்றி ப்ரம்மாண்ட புராண விளக்கம். 2.   கைசிக மஹாத்மியம் - வராஹ புராண விளக்கம்.  3.   கீதா ஜயந்தி - பகவத் கீதை தோன்றிய நாள்.  1.மோக்ஷ ஏகாதசி பற்றி ப்ரம்மாண்ட புராண விளக்கம்:  யுதிஷ்டிரர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், ம்ருகசீர்ஷ மாதத்தில் (கார்த்திகை - November / December...

ஸ்ரீ ஐயப்பன் சஹஸ்ர நாமாவளி...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா...  கார்த்திகை மாதம், பல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, சபரிமலை செல்ல உள்ளனர்... பல இடங்களிலும் ஐயப்ப பூஜை மற்றும் பஜனைகள்  நடைபெற்று வருகின்றது... மேலும், பல இடங்களில் சுவாமிக்கு , லட்சார்ச்சனையும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பக்தர்களின் நலன் கருதி 'ஐயப்பனின் சஹஸ்ர நாமாவளி' யை இங்கு கொடுத்துள்ளோம்... இதனை அப்படியே அச்சுப்பிரதி (Print) எடுத்துக்கொள்ளும் வகையில் கொடுக்கப் பட்டுள்ளது... அதில், ஏதாவது சிரமம் இருப்பின் நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' Whatsapp எண்ணிற்கு (+91 6379338850) ஒரு Whatsapp Message அனுப்புங்கள். 'ஐயப்ப ஸஹஸ்ர நாமாவளி' யை .PDF File வடிவில் (A 4 Paper இல்)    Print எடுப்பதற்கு ஏற்ற வகையில் அனுப்பி வைக்கிறோம்... (13 Pages) ஸ்வாமியே சரணம் ஐயப்பா ... ஸ்வாமியே சரணம் ஐயப்பா ... உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்... நன்றி ... ஒரு துளி ஆன்மீக ஸேவையில், தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, திருநெல்வேலி ...

ஆயுர் வேத குறிப்பு - எதிரிடையான உணவும், நோய்களும் ?

எதிரிடையான உணவும் நோய்களும்... மனதில் நிம்மதி குலைவதற்கு மோசமான  திரைப்படங்களும், உணவு வகைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. உணவு வகைகளில் எதை , எதனுடன் சேர்த்தால் விஷமாகும், அதை தவிர்ப்பது எவ்வாறு என்ற ஒரு துல்லிய நோட்டம் நம் முன்னோர்களுக்கு இருந்தது. ஒரு சில உதாரணங்களுடன் உணவு வகைகளின் சேர்க்கை விஷத் தன்மை அடைவது குறித்து பார்ப்போம். 1. சர்வம் அம்லம் பயஸா ஏகத்யம் விருத்தம்: - நீர்ப் பொருளோ அல்லது திடமானதோ அனைத்து புளிப்பு வஸ்துக்களும் பாலுடன் சேர்த்து சாப்பிடுதல் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். 2. தத : உத்தரம் வா பலம் ச விருத்தம் : புளிப்புச் சுவையுள்ள கனிகள் பாலுக்கு முன்பும் பின்பும் அருந்தக்கூடாது. 3. குலத்த மாஷ  வாட பாவா : ச :- கொள்ளு, உளுந்து, வரகு, மொச்சை இவைகளும் பாலுடன் சேரும் போது பகையானவை. 4. மூலகாதி ஹரிதகம் பக்ஷயித்வா குஷ்ட பாத பயாத் பய : நஸேவ்யம் :- முள்ளங்கி, பட்டை, அவரைக்காய் முதலான பச்சைக் கறிகாய்களை புசித்து, அதன் பின், பால் அருந்துக் கூடாது. அப்படிப் பருகினால் குஷ்ட நோய் உண்டாகும். 5. க்ஷீரேண லவணம், மூலகேன மாஷரூபம் :- பாலுடன் உப்பையும், மு...