Skip to main content

Posts

ஸ்ரீ ராமரிடம் என்ன கற்கலாம்...?

மனிதருள் மாணிக்கமாய் போற்றப்படும் ஸ்ரீ ராமரிடமிருந்து என்ன கற்கலாம் ?  சத்குருவின் வித்தியாசமான பார்வையில் விரிகிறது இந்தக் கட்டுரை ... இந்திய மக்கள்தொகையின் பெரும்பான்மைப் பகுதி ராமனை போற்றி வணங்குகிறது , ஆனால் அவர் வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தால் , வாழ்க்கை அவருக்கு நிகழ்ந்த விதத்தைப் பார்த்தால் , தொடர்ந்து அவருக்கு பேரிழப்புகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது போலத் தோன்றும் .  தனக்கு சேரவேண்டிய இராஜ்ஜியத்தை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது . போர் தொடுக்க விருப்பமில்லாத போதும் மனைவியை அபகரித்துச் சென்றதால் போர்செய்ய நேர்ந்தது . மனைவியை மீட்டுவந்த பிறகு , சுற்றியுள்ள அனைவரும் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசுவதைக் கேட்க நேர்ந்தது . அதனால் மிகவும் பிரியமான மனைவி கர்ப்பிணியாய் இரண்டு குழந்தைகளை சுமந்திருந்த போதும் அவளை காட்டில் விட்டுவர நேர்ந்தது . பிறகு அறியாமலே தன் பிள்ளைகளுக்கு எதிராகவே போரிட்டு மனைவியை தொலைக்க நேர்ந்தது . அவர் வாழ்க்கை முழுவதும் இழப்புகள் மட்டுமே . அப்படியிருந்...

சாஸ்தா அவதாரம் பற்றி ஸ்ரீ மஹா பெரியவா...

ஐயப்பன் பெயர்க்காரணம் என்ன ? சாஸ்தா அவதாரம் பற்றி ஸ்ரீ மஹா பெரியவா உரையில் இருந்து ஒரு பகுதி...   பரமாத்மா ஒன்றே சிவனாகவும், நாராயணனாகவும் ரூபம் தரிக்கிறது. சிவனாக இருக்கும்போது ஞான மூர்த்தியாக இருக்கிறது. நாராயணனாக இருக்கும்போது லோக ஸம்ரக்ஷணம் செய்கிறது. இப்படிச் சொல்வதால் சிவனும் விஷ்ணுவும் முற்றிலும் வேறு வேறு என்றோ, அல்லது தொழிலை ஒட்டிக் கொஞ்சம் வேறுபட்டாற் போலிருக்கிற நிலையில் சிவனுக்குப் பரிபாலன சக்தி இல்லை என்றோ, விஷ்ணுவுக்கு ஞான சக்தி இல்லையென்றோ அர்த்தமில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் முக்கியமாகச் செய்கிற அநுக்கிரகத்தையே குறிப்பிட்டேன். ஆல விருக்ஷத்தின் கீழோ, பனிமலை உச்சி மீதோ சிவபெருமான் வீற்றிருக்கிறார். உடலெல்லாம் விபூதிப் பூச்சு. புலித்தோலை இடுப்பில் கட்டி, யானைத் தோலைப் போர்த்தியிருக்கிறார். தலையிலே ஜடாமுடி. அவரது ஸ்வரூபம், அலங்காரம், வாசஸ்தானம் எதைப் பார்த்தாலும் ஞானிகளுக்கு உரியதாக இருக்கிறது. அவர் கரத்திலேயே ஞான முத்திரை தாங்கியிருக்கிறார். ஆத்ம தியானத்தில் ஆழ்ந்திருக்கிற அவரது சந்நிதி ஒரே சாந்தமாக இருக்கிறது. பரம சத்தியத்தைப் போதிக்கிற பரமகுரு அவரே...

ஸ்தல புராணம் - கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர் கோவில்...

கோகர்ணா கணபதி / மஹாபலேஷ்வர் கோவில் (கர்நாடகா)... கோகர்ணா கணபதியின் கதை: கணபதி தன் புத்தி சாதுர்யத்திற்குப் பெயர் போனவர் . கோகர்ணா மகாபலேசுவர் கோயிலில் , தலையில் ஒரு குழியுடன் தென்படும் கணபதி விக்கிரகம் உள்ளது . அந்தக் குழியின் காரணத்தையும் , கணபதியின் சாமர்த்தியத்தையும்   விளக்கும்  சத்குரு அவர்கள்.   இராவணன் சிவனின் தீவிரமான பக்தனாக இருந்தான் . அவன் தென்பகுதியிலிருந்த தன் இராஜ்ஜியத்திலிருந்து சிவனை வழிபட்டு வந்தான் . ஆனால் சில காலத்திற்குப் பிறகு , " நான் ஏன் கைலாயத்தை என் வீட்டிற்கு அருகில் கொண்டுவரக் கூடாது ?" என்று நினைத்தான் . அதனால் இலங்கையிலிருந்து கைலாயம் வரை நடந்தே சென்றான் , பிறகு கைலாயத்தை தனது கைகளால் பெயர்த்தெடுக்க முயற்சித்தான் . இதனால் கோபம் கொண்ட பார்வதி , " அவர் உங்களுக்கு எவ்வளவு அன்பானவராக இருந்தாலும் சரி , அவர் கைலாயத்தை தென்பகுதிக்கு எடுத்துச்செல்ல நீங்கள் அனுமதிக்கக்கூடாது ." என்றார் . சிவனுக்கும் இராவணனின் அஹங்காரம் மீது கோபம் வந்துவிட , அவர் மலையை கீழே ...