Skip to main content

Posts

கிரஹப்பிரவேசம் எதற்காக?

க்ரஹப்ரவேசம் எதற்கு செய்ய வேண்டும் ? க்ரஹப்ரவேசம் பற்றி சத்குரு கூறுவது என்ன ? இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர். இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது. இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர். எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர். கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்க...

'பத்மினி ஏகாதசி' விரத மகிமை...

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  'பத்மினி ஏகாதசி' விரதம்  ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....  தற்போது வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' ஆகும். வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும், 32 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது. புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த 'அதிக' (Adhika) மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பத்மினி ஏகாதசி' என்றும் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி 'பரம ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகின்றது.  பத்மினி ஏகாதசி   பற்றி 'ஸ்காந்த  புராண' விளக்கம்:  யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, மதுஸூதனா,   'அதிக'  மாதத்தில், சுக்ல பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக அறிந்து கொள்...

திருச்செந்தூர் ஆவணித் திருநாள் ... தற்போதைய தரிசன நடைமுறை ...

ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  திருச்செந்தூர் ஆவணித் திருநாள் நேற்று (06-09-2020) கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இன்று (07-09-2020) நாம் நமது "தாமிரா தர்ம ரக்ஷண ஸபா" அங்கத்தினர்கள் சிலரோடு, முருகனை தரிசிக்க சென்றிருந்தோம்.  தற்போதைய தரிசன நடைமுறை பற்றி ஒரு சிறு விளக்க குறிப்பு ... ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட் பரிசோதனை. (இரண்டு இடங்களில்)   டிக்கெட் பிரிண்ட் அவுட் இருப்பது நன்று. இல்லாவிட்டால், டிக்கெட்டை அவர்களிடம், மொபைலில் காண்பித்து விட்டு, அவர்கள் தகவல்களை எழுதும் வரை, நாம் காத்திருக்க வேண்டும்.  ஆதார் கார்டு பரிசோதனை. (இரண்டு இடங்களில் ))  (கட்டாயம் கொண்டு செல்ல வேண்டிய ஆவணம்.) IR தெர்மோமீட்டர் பரிசோதனை. (இரண்டு இடங்களில்)  பின்னர், சானிடைசர்.   அதன் பின்பு வரிசையில் தரிசனம்.  ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன், ஆனால், விரைவில் தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தோம். (10 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்)  வெகு குறைவாக, மிக சொற்பமான அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர்.  ...

கிருஷ்ணன் உடன் எப்பொழுதும் மயிலிறகு-என்ன காரணம் ?

கிருஷ்ணன் எப்பொழுதும் மயிலிறகுடன் காட்சியளிக்கக்  காரணம்  என்ன   ?   சத் குருவின் விளக்கம்: கிருஷ்ணன், அவன் நேரான ஆள் அல்ல. சற்றே முரட்டுத்தனம் கொண்டவன். நிற்கும் போது கூட நேராக நில்லாமல் ஒரு காலை மடித்து வைத்தே நின்று காட்சியளிப்பான். எதைச் செய்தாலும் தனக்கென ஒரு தனி பாணி வகுத்துக்கொண்டு அதன்படியே நின்றான், நடந்தான், வாழ்ந்தான். கிருஷ்ணன் காலை மடித்து நின்று ஒயிலாகக் காட்சியளித்தது மட்டுமல்ல, தனது கிரீடத்தில் மயிலிறகு இன்றியும் ஒரு நாளும் காட்சியளித்ததில்லை. ஏன் அவ்வாறெல்லாம் செய்தான் அவன் ? மயில் வர்ணனைக்கு அப்பாற்பட்டதோர் அழகான பறவை. அது தோகை விரித்தாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பாரதத்தில் மயில்கள் அதிகம். விருந்தாவனத்திலும் ஏராளமான மயில்கள் இருந்தன. தோகை அதிகம் கொண்ட ஆண் மயில்கள் ஆண்டு முழுவதும் இறகுகளை உதிர்க்கும். மயிலிறகுகளுக்காக அவற்றைக் கொல்ல வேண்டியதில்லை. தரையிலிருந்தே பொறுக்கிக் கொள்ளலாம். மயிலிறகு எவ்வளவு அழகானதென்பது பார்த்தாலே தெரியும். மயிலின் நிறமென்பது எவராலும் எளிதில் உருவாக்க இயலாத இயற்...

விநாயகர் (சதுர்த்தி) ஸ்பெஷல்...

இந்தக் கட்டுரையில்... விநாயகரை வழிபட எளிய மந்திரம்? எந்த நட்சத்திரக் காரர்கள் எப்படி வழிபட வேண்டும்? நினைத்ததை அடைய எவ்வாறு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் ?  முக்கியமான மெகா கணபதிகள் பற்றி சிறு தகவல்.  விநாயகர் சதுர்த்தி என்றாலே, நாம் அருகில் உள்ள பல விநாயகர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.  வித விதமான அலங்காரங்களில் ஆனை முகத்தா னை பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு அழகு தான்... ஒரு சில முக்கியமான விநாயகர்  கோவில்கள் பற்றி இங்கு காண்போம்.             மெகா கணபதிகள்: 1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். 2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார். 3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார். 4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி. 5. செதலபதி ஆதி விநாயகர். 1 .  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்: பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார...

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் ...

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏக...
Protected by Copyscape
DMCA.com Protection Status